Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்க குழந்தைக்கு எப்போதிலிருந்து தண்ணீர் கொடுக்கலாம்?
குழந்தைகளை கவனித்துக்கொள்வது பற்றி உறவினர்களும் அண்டை வீட்டாரும் பல ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்டு நீங்கள் ஏற்கனவே சோர்வாக இருக்கலாம். கருத்துக்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் முதல் முறையாக தாய்மார்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். அதில் மிக முக்கியமான குழப்பம் என்னவென்றால் பிறந்த குழந்தைக்கு எப்போது தண்ணீர் குடிக்க கொடுக்கலாம் என்பதேயாகும்.
கோடைக்காலம் வெயில் அதிகமாக அடிக்கிறது என்று குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்குமாறு யாரோ ஒருவர் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். இருப்பினும், தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தை போதுமான தண்ணீரைப் பெற முடியும். வறண்ட, மிகவும் வெப்பமான காலங்களில் கூட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். தாய்ப்பாலில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, வானிலை வெப்பமாக இருந்தாலும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சொல்லப்போனால், ஆறு மாதத்துக்கு குறைவான குழந்தைகள் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. இதனால், குழந்தைகள் பலவிதங்களில் அவதிப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூருகின்றனர். அதிக தண்ணீர் குடிப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் போதை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். நீரை அதிகமாக குடித்துவிட்டு பசியின்மையால் தாய்ப்பாலைக் குடிப்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவதில்லை. குழந்தைகளின் வயிறு மிகவும் சிறியது. தாய்ப்பால் அவர்களின் வயிற்றை நிரப்புகிறது. எனவே, குழந்தைகள் நீரை குடிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எப்போது நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்தது எதுவுமில்லை. தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற பொருள், குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நீரேற்றமாக வைத்திருக்கும். ஒரு தாய் தனது குழந்தைக்கு எவ்வளவு அடிக்கடி பால் வெளிப்படுத்துகிறாரோ, அவ்வளவு அடிக்கடி தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
பிறந்த முதல் நாளிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீர் அருந்தக் கூடாது. அதிக தண்ணீர் குடிப்பதால் வாய்வழி நீர் போதையை ஏற்படுத்தும், இது குழந்தையின் மூளை மற்றும் இதயத்தை பாதிக்கிறது. அதிக தண்ணீர் குடிப்பதால் குழந்தை வயிறு நிரம்பியதாக உணரலாம் மற்றும் தாய்ப்பால் குடிக்க மறுக்கும்.
நான்கு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை கூட தண்ணீர் கொடுக்கக்கூடாது. குழந்தைக்குத் தேவையான நீரின் ஒரே ஆதாரம் தாய்ப்பால் மட்டுமே. பசியையும் தாகத்தையும் தீர்க்கும் ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் ஏராளமாக உள்ளன. இருப்பினும், உணவு ஊட்டப்பட்ட குழந்தைகள் வெப்பமான காலநிலையில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
ஆறு மாதங்கள் கழித்து வரும் கட்டத்தில், குழந்தை நாள் முழுவதும் அவ்வப்போது சிறிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் பிள்ளை திட உணவுகளுக்குப் பழகும்போது, திட உணவுகளுடன் பால் அல்லது தண்ணீரை சிறிய அளவில் கொடுக்க வேண்டும். இருப்பினும், குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகள் எப்போது தண்ணீர் குடிக்கத் தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகு, இந்த விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலில் அல்லது ஃபார்முலா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களை அவர்களின் உடல்கள் முழுமையாக உறிஞ்சாது. நீங்கள் ஃபார்முலா ஃபீட் செய்கிறீர்கள் என்றால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முழுமையாக அறிந்து பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குழந்தை குடிக்க வேண்டும்.
உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை குறையும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிக தண்ணீர் குடித்தால், அவர்களின் உடலில் சோடியம் செறிவு குறையும். இதனால் எடிமா பிரச்னை ஏற்படுகிறது. எனவே, ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் பரிந்துரைக்கப்படவில்லை.
குழந்தைகளில் பொதுவாகக் காணப்படும் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற பல சிக்கல்களால் குழந்தை இறப்பு ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பது உங்கள் குழந்தையை இந்த அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இப்போது, குழந்தைகள் எப்போது தண்ணீர் குடிக்கலாம் என்பது குறித்து புதிய தாய்மார்கள் தெளிவாகத் தெரிந்துக் கொண்டீர்களா?.



Click it and Unblock the Notifications











