Latest Updates
-
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்
உங்க குழந்தைக்கு எப்போதிலிருந்து தண்ணீர் கொடுக்கலாம்?
குழந்தைகளை கவனித்துக்கொள்வது பற்றி உறவினர்களும் அண்டை வீட்டாரும் பல ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்த அறிவுரைகள் அனைத்தையும் கேட்டு நீங்கள் ஏற்கனவே சோர்வாக இருக்கலாம். கருத்துக்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த குறிப்புகள் அனைத்தும் முதல் முறையாக தாய்மார்களுக்கு சற்று குழப்பமாக இருக்கும். அதில் மிக முக்கியமான குழப்பம் என்னவென்றால் பிறந்த குழந்தைக்கு எப்போது தண்ணீர் குடிக்க கொடுக்கலாம் என்பதேயாகும்.
கோடைக்காலம் வெயில் அதிகமாக அடிக்கிறது என்று குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்குமாறு யாரோ ஒருவர் உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். இருப்பினும், தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தை போதுமான தண்ணீரைப் பெற முடியும். வறண்ட, மிகவும் வெப்பமான காலங்களில் கூட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். தாய்ப்பாலில் 88 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, வானிலை வெப்பமாக இருந்தாலும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் மூலம் போதுமான தண்ணீர் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சொல்லப்போனால், ஆறு மாதத்துக்கு குறைவான குழந்தைகள் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. இதனால், குழந்தைகள் பலவிதங்களில் அவதிப்படுகின்றனர் என்று மருத்துவர்கள் கூருகின்றனர். அதிக தண்ணீர் குடிப்பதால் குழந்தைகளுக்கு தண்ணீர் போதை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். நீரை அதிகமாக குடித்துவிட்டு பசியின்மையால் தாய்ப்பாலைக் குடிப்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவதில்லை. குழந்தைகளின் வயிறு மிகவும் சிறியது. தாய்ப்பால் அவர்களின் வயிற்றை நிரப்புகிறது. எனவே, குழந்தைகள் நீரை குடிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எப்போது நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பது பற்றிய தெளிவு கிடைக்கும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்தது எதுவுமில்லை. தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற பொருள், குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நீரேற்றமாக வைத்திருக்கும். ஒரு தாய் தனது குழந்தைக்கு எவ்வளவு அடிக்கடி பால் வெளிப்படுத்துகிறாரோ, அவ்வளவு அடிக்கடி தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
பிறந்த முதல் நாளிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீர் அருந்தக் கூடாது. அதிக தண்ணீர் குடிப்பதால் வாய்வழி நீர் போதையை ஏற்படுத்தும், இது குழந்தையின் மூளை மற்றும் இதயத்தை பாதிக்கிறது. அதிக தண்ணீர் குடிப்பதால் குழந்தை வயிறு நிரம்பியதாக உணரலாம் மற்றும் தாய்ப்பால் குடிக்க மறுக்கும்.
நான்கு மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை கூட தண்ணீர் கொடுக்கக்கூடாது. குழந்தைக்குத் தேவையான நீரின் ஒரே ஆதாரம் தாய்ப்பால் மட்டுமே. பசியையும் தாகத்தையும் தீர்க்கும் ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் ஏராளமாக உள்ளன. இருப்பினும், உணவு ஊட்டப்பட்ட குழந்தைகள் வெப்பமான காலநிலையில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
ஆறு மாதங்கள் கழித்து வரும் கட்டத்தில், குழந்தை நாள் முழுவதும் அவ்வப்போது சிறிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் பிள்ளை திட உணவுகளுக்குப் பழகும்போது, திட உணவுகளுடன் பால் அல்லது தண்ணீரை சிறிய அளவில் கொடுக்க வேண்டும். இருப்பினும், குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆகும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குழந்தைகள் எப்போது தண்ணீர் குடிக்கத் தொடங்க வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகு, இந்த விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால், தாய்ப்பாலில் அல்லது ஃபார்முலா பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களை அவர்களின் உடல்கள் முழுமையாக உறிஞ்சாது. நீங்கள் ஃபார்முலா ஃபீட் செய்கிறீர்கள் என்றால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை முழுமையாக அறிந்து பின்பற்ற வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குழந்தை குடிக்க வேண்டும்.
உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை குறையும் போது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிக தண்ணீர் குடித்தால், அவர்களின் உடலில் சோடியம் செறிவு குறையும். இதனால் எடிமா பிரச்னை ஏற்படுகிறது. எனவே, ஆறு மாதங்களுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தண்ணீர் பரிந்துரைக்கப்படவில்லை.
குழந்தைகளில் பொதுவாகக் காணப்படும் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற பல சிக்கல்களால் குழந்தை இறப்பு ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பது உங்கள் குழந்தையை இந்த அபாயங்களிலிருந்து பாதுகாக்கும். இப்போது, குழந்தைகள் எப்போது தண்ணீர் குடிக்கலாம் என்பது குறித்து புதிய தாய்மார்கள் தெளிவாகத் தெரிந்துக் கொண்டீர்களா?.



Click it and Unblock the Notifications











