Latest Updates
-
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
சின்ன வயசுல இந்த விஷயங்கள உங்க அப்பா உங்களுக்கு கட்டாயம் சொல்லி கொடுத்து இருப்பாரு...அது என்ன தெரியுமா?
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிறுவயதில் தன் அப்பாதான் 'ஹீரோவாக' தோற்றமளிப்பார். ஆனால், வளரத் தொடங்கும்போது, அப்பா நமக்கு கூறும் அறிவுரைகள், செயல்கள் எல்லாம் எரிச்சலாகவும் பிடிக்காமலும் போகலாம்.
நாம் வளர்ந்து பெரியவர்களாக மாறி, குடும்ப பொறுப்புகளையும் கடமைகளையும் சுமக்கும்போது, ஏன் அப்பா சிறுவயதில் அவ்வாறு நடந்துகொண்டார், விஷயங்களை கூறினார் என்பது நமக்கு புரிய ஆரம்பிக்கும். குழந்தை பருவத்தில் ஒவ்வொரு முறையும் நாம் ஏதாவது தவறு செய்தால், சில விஷயங்களை கூறி நம்மை திருத்த முயல்வார். பல நேரங்களில் இது நம்மை எரிச்சலூட்டும்.
நாம் வளர்ந்து, நம் வசதியை விட்டு வெளியேறி, சொந்த வாழ்வாதாரத்தை உருவாக்கத் தொடங்கிய பிறகுதான், ஒரு நல்ல மனிதனாக இருப்பது எவ்வளவு அவசியம் என்பதை கற்றுக்கொண்டோம். நல்லவராகவும் தாராளமாகவும் இருப்பது நமது மனநிலையில் நேர்மறையை அதிகரிக்கிறது.
"முதலில் ஒரு நல்ல மனிதராக இரு, மற்ற அனைத்தும் சரியாகிவிடும்." என நம் அப்பா கூறிய அறிவுரைகள் இப்போது கண் முன்னே வந்துபோகலாம். உங்கள் சிறுவயதில் உங்கள் அப்பா சொன்ன விஷயங்கள் பற்றியும் அதை இப்போது நீங்கள் புரிந்துகொள்வது பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

நேர்மையற்ற வழிகளை பின்பற்ற வேண்டாம்
'எவ்வளவு எளிதாகத் தோன்றினாலும் நேர்மையற்ற வழிகளை ஒருபோதும் பின்பற்றாதீர்கள்' என உங்கள் தந்தை சிறுவயதில் உங்களுக்கு சொல்லி கொடுத்து இருக்கலாம். நாம் எப்போதும் காரியங்களைச் செய்வதற்கு எளிதான வழிகளைத் தேடுகிறோம். சில சமயங்களில் நாம் நம் வேலையை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என குறுக்கு வழியை தேடலாம்.
நேர்மையின்மையின் சிவப்புக் கொடிகளைப் புறக்கணிக்க, நியாயமற்ற வழிமுறைகளின் தற்காலிக அரவணைப்பை இப்படித்தான் நாம் பின்பற்ற தொடங்குகிறோம். அப்பாக்கள் ஏன் நம்மை திருத்துகிறார்கள் என்று சிறு குழந்தையாக இருந்தபோது நமக்கு புரிந்திருக்காது. மீண்டும், சில நேரங்களில் அது நம்மை எரிச்சலூட்டும். ஆனால் இப்போது வளர்ந்த பின்பு, நேர்மையின்மை எவ்வளவு தொந்தரவாக இருக்கும் என்பதை உணர்கிறோம்.
கடின உழைப்பு வீண் போகாது
காலையில் வெகுநேரம் வரை தூங்கும் போது, அப்பாக்கள் இதைத்தான் சொல்வார்கள்! அந்த நேரத்தில் அது உங்களுக்கு எரிச்சலாகத் தெரிந்திருக்கலாம். இப்போது அதை நீங்கள் நன்றாக உணர்ந்திருக்கலாம். கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது மற்றும் உங்களை கைவிடாது. அது நமது திறன்களை பெருக்கி, நமது வரம்புகளை அறியச் செய்கிறது. இந்த பழக்கம் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு பலனளிக்கும்.
தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
"உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளுங்கள், சாக்குப்போக்குகளால் அவற்றை மறைக்காதீர்கள்". ஒரு தந்தை எப்போதும் தன் குழந்தைகளுக்குக் கற்பிக்க முயற்சிக்கும் மற்றொரு விஷயம் இதுதான். கோபத்தால் அல்லது அன்பினால் உங்களுக்கு எடுத்துச் சொல்லலாம். ஒருவரின் தவறை ஒப்புக்கொள்வது ஒரு நபரைக் குறைத்துவிடாது. மாறாக, என்ன தவறு நடந்தது மற்றும் மேம்படுத்த என்ன செய்ய முடியும் என்பதை இது அந்த நபருக்கு உணர்த்துகிறது.
உங்களை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம்
நம்மை விட நம் திறமையில் நம்பிக்கை உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்றால் அது நம் தந்தை தான். சுய சந்தேகம் வேண்டாம் என்று அப்பாக்கள் எப்பொழுதும் சொல்லியிருக்கிறார்கள். இந்த வார்த்தைகள், நம் குழந்தை பருவத்தில் எதையும் அர்த்தப்படுத்தவில்லை. ஏனென்றால் கடினமான உலகத்தை நாம் இன்னும் எதிர்கொள்ளவில்லை, இது எப்போதும் நம்மை நாமே கேள்வி கேட்கும் சூழ்நிலைகளுக்குள் தள்ளுகிறது. இப்போது, தந்தையின் இந்த கூற்று அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
நிதிநிலையை நிர்வகிக்க கற்றுக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு அப்பாவும் சிறுவயதில் அடிக்கடி சொன்ன மிகவும் பயங்கரமான விஷயம் இது. குழந்தையாக இருக்கும்போது, நாம் விரும்பும் பொருட்களை கேட்கும்போது, அப்பா இந்த கூற்றையேதான் கூறுவார். குறிப்பாக விலையுயர்ந்த பொருள் கேட்டால் மொத்த குடும்ப பட்ஜெட்டும் நம் முன் வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், வளர்ந்து பெரியவராக ஆகும்போது, சொந்த செலவுகளை நிர்வகிக்கும் போது, வேண்டுமென்றே வாங்குவதைக் குறைத்துக் கொள்கிறோம். பணத்தின் மதிப்பையும் நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு கற்றுக் கொடுத்த அப்பாவைதான் நாம் அனைவரும் நினைப்போம்.
அப்பாக்களின் வார்த்தைகள்
'அப்பாக்கள் குறைவாக பேசுகிறார்கள், ஆனால் அவர்களின் வார்த்தைகள் நம்முடன் இருக்கும்'. அம்மாக்கள் தங்கள் குழந்தைகளில் முதலீடு செய்வதை விட அப்பாக்கள் உணர்வுபூர்வமாக வேறு வழியில் முதலீடு செய்கிறார்கள். எப்பொழுதும் நம் அப்பாக்களை சீரியஸான முகங்களுடனும், புன்னகையில்லாத முகத்துடனும், எப்போதும் நம்மைத் திருத்த முயல்வதாகவும் பார்க்கிறோம்.
அந்தக் காலத்தில் அப்பாக்கள் சொல்வதைக் கேட்பது சித்திரவதையாகத் தோன்றியது. சில நேரங்களில் நாம் எதிர்ப்பும் தெரிவித்திருப்போம். சில சமயங்களில் அப்படி இருப்பதற்காக திட்டியும் இருந்திருக்கலாம். காலப்போக்கில், நம் பொறுப்புகளை நாமே சுமக்கத் தொடங்கியபோது, அப்பா ஏன் மிகவும் நேர்மையானவர் என்பதை நாம் அனைவரும் உணர்ந்திருப்போம்.



Click it and Unblock the Notifications
