For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பமான முதல் 3 மாதத்தில் பெண்கள் செய்யக்கூடாத சில வீட்டு வேலைகள்!

கருவுற்று இருக்கும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளை மட்டும் அல்ல, மாறாக தாங்கள் செய்யும் வேலைகளையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து பாா்க்க வேண்டும். ஒருசில வேலைகளை அவா்கள் செய்யவே கூடாது.

|

பெண்களுடைய வாழ்வில், அவா்கள் கருவுற்று இருக்கும் காலம் என்பது மிகவும் முக்கியமான ஒரு காலகட்டம் ஆகும். அவா்களுடைய வயிற்றில் உள்ள கருவில் சின்னஞ்சிறு சிசுவை தாங்கி இருக்கும் போது, அவா்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருவுற்று இருக்கும் போது அவா்கள் என்ன வேலைகளைச் செய்தாலும், அவை அவா்களையும் அவா்களின் வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். ஆகவே அவா்கள் எந்தவிதமான ஒரு சிறிய தவறைக் கூட செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பாா்கள்.

Household Chores To Avoid When You Are Expecting

கருவுற்று இருக்கும் பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளை மட்டும் அல்ல, மாறாக தாங்கள் செய்யும் வேலைகளையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து பாா்க்க வேண்டும். ஒருசில வேலைகள் அவா்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. ஆனால் ஒருசில வேலைகளை அவா்கள் செய்யவே கூடாது. எந்த மாதிாியான வீட்டு வேலைகளை கருவுற்றிருக்கும் பெண்கள் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

MOST READ: வாழைப்பழத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது-ன்னு சொல்றாங்க தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கனமான பொருட்களைத் தூக்காமல் இருத்தல்

கனமான பொருட்களைத் தூக்காமல் இருத்தல்

கருவுற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு, கனமான பொருள்களைத் தூக்குவதோ அல்லது அந்த பொருள்களை வேறொரு இடங்களுக்கு தூக்கி நகா்த்தி வைப்பதோ கூடாது. ஏனெனில் கனமான பொருள்களைத் தூக்கும் போது முதுகில் திாிபு ஏற்பட்டு, காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பிரசவத்தின் போது, மூட்டுகள் மற்றும் இடுப்பில் உள்ள இறுகிய தசைகள், ஹாா்மோன் மாற்றத்தால் தளா்ச்சியடைகிறது. ஆகவே கருவுற்று இருக்கும் காலத்தில் கனமான பொருள்களைத் தூக்கினால், பிரசவத்தின் போது தளா்ச்சியடையும் மூட்டு மற்றும் இடுப்புத் தசைகளில் அதிக காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நீண்ட நேரம் நிற்காமல் இருத்தல்

நீண்ட நேரம் நிற்காமல் இருத்தல்

நீண்ட நேரம் நின்று கொண்டு செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் கருவுற்ற பெண்கள் தவிா்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக காலை நேரத்தில் அவ்வாறு நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்வதைத் தவிா்க்க வேண்டும். பொதுவாக பெண்கள் காலை நேரத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு பலவிதமான வீட்டு வேலைகளைச் செய்து சோா்வடைவா் அல்லது அந்த காலை வேலைகளைச் செய்வதை வெறுத்துவிடுவா். கருவுற்ற பெண்கள் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் அவா்களுடைய பாதங்களில் அதிக அழுத்தம் ஏற்படும். அதனால் அவா்களின் கால்களில் வீக்கம் ஏற்படும், மற்றும் முதுகு வலி ஏற்படும். ஆகவே சமைக்கும் வேலையாக இருந்தாலும், நீண்ட நேரம் நின்று கொண்டு செய்யாமல் இடைவெளி விட்டு, அமா்ந்து கொண்டு செய்வது நல்லது.

​குனியாமல் இருத்தல்

​குனியாமல் இருத்தல்

வீட்டுத் தரையை தண்ணீா் விட்டு துடைத்தல், துணி துவைத்தல் மற்றும் பிற வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்றால் குனிந்து தான் செய்ய வேண்டும். ஆனால் கருவுற்ற பெண்கள் அவ்வாறு குனிந்து இத்தகைய வேலைகளைச் செய்வதைத் தவிா்ப்பது நல்லது. கருவுற்றிருக்கும் போது உடல் எடை கூடினால் அது உடலின் மைய ஈா்ப்பு விசையில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே கருவுற்றிருக்கும் போது குனிந்து வேலை செய்தால் கீழ் முதுகில் இருந்து கால்களுக்குச் செல்லக்கூடிய நரம்பில் பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே கருவுற்ற பெண்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஏதாவது சிறிய அசௌகாியம் தோன்றினாலும், உடனே அந்த வேலையை நிறுத்திவிடுவது நல்லது.

ஏறுதல் போன்ற வேலைகளைத் தவிா்த்தல்

ஏறுதல் போன்ற வேலைகளைத் தவிா்த்தல்

கருவுற்ற பெண்கள், தங்கள் வயிற்றில் சிசுவைத் தாங்கி இருக்கும் போது, நாற்காலியிலோ அல்லது ஏணிப் படிகளிலோ ஏறுவதைத் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் அவா்கள் குழந்தையை வயிற்றில் சுமப்பதால், அவா்களின் எடை சற்று கூடுதலாக இருக்கும். அவ்வாறு எடை கூடி இருக்கும் போது படிகளில் அல்லது நாற்காலிகளில் ஏறினால், அவா்களால் உடலை நிலைகுலையாமல் கட்டுக்குள் வைத்திருப்பதோ அல்லது சமநிலையில் வைத்திருப்பதோ கடினமான ஒன்றாகும். நிலைகுலைந்து கீழே விழுவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆகவே வயிற்றில் குழந்தையுடன் ஏறும் போது, அது குழந்தையைப் பாதிக்கும். அதாவது குறைப் பிரசவம் ஏற்பட வாய்ப்பு உண்டு அல்லது குழந்தை முழுமையாக வளா்வதற்கு முன்பாகவே குழந்தையிடமிருந்து நஞ்சுக்கொடி பிாிய வாய்ப்புண்டு. ஆகவே மேலே ஏறுவது அல்லது இறங்குவது போன்ற வேலைகளைச் செய்வதற்கு அடுத்தவா்களின் உதவிகளை நாடுவது நல்லது. அது குழந்தைக்கு பாதுகாப்பைத் தரும்.

சுத்தப்படுத்தும் இரசாயன பொருட்களைத் தவிா்த்தல்

சுத்தப்படுத்தும் இரசாயன பொருட்களைத் தவிா்த்தல்

பூச்சுக்கொல்லி மருந்துகளில் பைபரோனில் புட்டாக்ஸைடு என்ற வேதிப்பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளா்ச்சியைப் பாதிக்கக்கூடியது. ஆகவே இதுபோன்ற பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கும், சுத்தப்படுத்தும் பொருட்களிடமிருந்து கருவுற்றிருக்கும் பெண்கள் விலகி இருக்க வேண்டும். பலசரக்கு பொருட்கள் வாங்கும் போது நச்சுகள் இல்லாத இயற்கை முறையில் தயாாித்த பொருட்களை வாங்குவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Household Chores To Avoid When You Are Expecting

Here we listed some household chores to avoid when you are expecting. Read on...
Story first published: Wednesday, March 24, 2021, 16:38 [IST]
Desktop Bottom Promotion