Latest Updates
-
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க!
கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள்!
குழந்தைகள் உருவாவது மிக அழகான அதிசயம்; கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
குழந்தைகள் உருவாவது மிக அழகான அதிசயம்; குழந்தைகள் பெண்ணின் வயிற்றில் உருவாக்கி வளர்வது எத்தகைய அதிசயம் என்பதை அதை வாழ்க்கையில் உணர்ந்து பார்க்கும் தம்பதியருக்கு மட்டும் தான் புரியும். குழந்தைகள் கருவில் உருவாகும் பொழுது கர்ப்பிணி எத்தகு சந்தோஷம் அடைகிறாளோ, அதே அளவு சந்தேகமாக, ஆர்வமாக அவள் மனதில் ஒரு கேள்வி எழும். அது தான் பிறக்கப்போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்னும் கேள்வி.

இந்த கேள்விக்கான விடையை, அதாவது பிறக்க கருவில் வளர்ந்து பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

சரும வகை..
குழந்தையை கருவில் சுமக்கும் பெண்களின் சருமத்தை வைத்து, கருவில் வளர்வது ஆண் குழந்தையா இல்லை பெண் குழந்தையா என்று எளிதில் கண்டு அறியலாம். குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணின் சருமம் பளபளவென எண்ணெய் பசையுடன் இருந்தால் அவர் பெண் குழந்தைக்கு தாயாக போகிறார் என்றும், கர்ப்பிணியின் சருமம் வறண்டு, காய்ந்து போய் இருந்தால் அவர் ஆண் குழந்தைக்கு தாயாக போகிறார் என்றும் பொருள்.

பரு வந்தா பொண்ணு..
கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்ணின் உடலில் அதிகம் பருக்கள் தோன்றினால், அந்த பெண் ஒரு மகளை பெற்று எடுக்க போகிறார் என்றும், பருக்கள் அதிகம் ஏற்படவில்லை எனில் அவர் ஆண் மகவுக்கு தாயாக போகிறார் என்றும் பொருள். எண்ணெய்ப் பசை சருமம் பருக்கள் உருவாக காரணம் ஆகும்; ஆக சருமம் எண்ணெய்ப்பசை மற்றும் பருக்கள் கொண்டு இருந்தால், கண்டிப்பாக கர்ப்பிணிக்கு பெண் தான் பிறக்கும் எனலாம்.

எடையை பாத்து சொல்லலாம்..
கர்ப்பம் தரித்து இருக்கும் பெண்ணின் உடலில், எல்லா பகுதிகளிலும் எடை அதிகரித்து காண பட்டால், அவர்க்கு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று கூறுவர்; இதுவே வயிறு மட்டும் பெரிதாக இருந்தால் அவருக்கு கட்டாயம் ஆன் குழந்தை பிறக்கும் என்று கூறுவர். கர்ப்பிணியின் முடி நடத்தியாக இருந்தால் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றும்; கர்ப்பிணி பெண்ணின் முடி அதிகம் உதிர்ந்தால் அவருக்கு பெண் தான் பிறக்கும் என்றும் கூறுவார்கள்.

பாதத்தில் மாறுதல்..
கர்ப்பிணி பெண்களின் பாதம் மாறுபாடு அடையும் விதத்தினை வைத்து, கருவில் வளர்வது ஆணா, பெண்ணா என்று கூறலாம். கர்ப்பிணியின் பாதம் மற்ற நாட்களை விட அதிக குளிர்ச்சியாகவும், வீக்கம் இன்றியும் இருந்தால் பிறக்க போவது ஆண் குழந்தை என்றும், கர்ப்பிணி பெண்ணின் பாதங்கள் வீங்கி இருந்தது, அதன் வெப்ப நிலையில் எந்த மாறுபாடும் இன்றி சாதாரணமாக இருந்தால் அது பெண் குழந்தை என்றும் கூறப்படுகிறது.

உணவு முறை!
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அதிகம் இனிப்பு சுவை சேர்த்த உணவுகளை உண்ண விரும்பினால் அவர்கள் பெண் குழந்தைக்கு அம்மாவாக போகிறார்கள் என்றும், அதே பெண்கள் அதிகம் உப்பு சுவை உடைய பண்டங்களை விரும்பி உண்டால் அவர்கள் பெற்று எடுக்க போவது ஆண் குழந்தை என்றும் அறியலாம்.

வயிற்றின் நிலை..
பெண்களின் உடலில் ஒரு புது உயிர் உண்டாகி வளர்வதால், அவர்களின் வயிறு பெரிதாகி கொண்டே இருக்கும்; இவ்வாறு கர்ப்பிணி பெண்களின் வயிறு பெரிதாகி வளரும் வீதம் மேல் நோக்கி இருந்தால் அவர்கள் பெண் குழந்தைகளுக்கு அன்னையாக போகிறார்கள் என்றும், கர்ப்பிணியின் வயிறு கீழ் நோக்கி வளர்ந்தால் அவர்கள் ஆண் குழந்தைக்கு அன்னையாக போகிறார்கள் என்றும் அறியலாம்.

உறக்கமும் தலைவலியும்!
கர்ப்பிணி பெண்கள் உறங்கும் நிலை மற்றும் அவர்களுக்கு தலை வலி ஏற்படும் கால வீதத்தை வைத்து அவர்களின் வயிற்றில் வளரும் கருவின் பாலினத்தை அறியலாம். கர்ப்பிணி பெண்கள் வலது புறமாக ஒரு சாய்த்து படுத்து உறங்கினால், அவர்களுக்கு அடிக்கடி கொஞ்ச நேர கால அளவிற்கு தலை வலி தோன்றி மறைந்தால் அவர்கள் ஆண் குழந்தையை பெற்று எடுக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
இதுவே இடது புறம் ஒரு சாய்த்து படுத்து உறங்கி, தலை வலி எதுவும் ஏற்படாமல் இருந்தால், அந்த கர்ப்பிணிகள் பெண் குழந்தைகளை பெற்று எடுக்க போகிறார்கள் என்று பொருள்.

உணர்வு நிலை!
கருவை சுமக்கும் கர்ப்பிணி பெண்கள் தங்களின் வயிற்றில் வளரும் கரு எந்த பாலினத்தை சார்ந்தது என்னும் தகவலை தங்கள் செயல்பாடுகளை கூர்ந்து நோக்கினால் எளிதில் கண்டு கொள்ளலாம்..! அதாவது கர்ப்பிணி பெண்கள் எதிலும் தனது அதிகாரத்தை காட்டி, மற்றவர்களை ஆட்டி வைத்து கொண்டு, அகங்காரத்துடன் நடந்து கொண்டால் அவர்களின் வயிற்றில் உருவாகி கொண்டு இருப்பது ஆண் குழந்தை என்று அறியலாம்.

பாட்டி கூறியவை..
இதுவே அடிக்கடி மாறும் மன நிலை கொண்டு, எரிச்சல் படும் குணம் கொண்டு இருந்தால், அந்த பெண்மணி பெண் குழந்தையை வயிற்றில் சுமக்கிறாள் என்று கூறலாம். இந்த கணிப்புகள் எல்லாம் நம் முன்னோர்களான, நமது பாட்டன் மற்றும் பாட்டிமார்கள் கண்டு அறிந்து கூறிய வழிமுறைகள் ஆகும்.! இவற்றில் கூறியவை ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்தம் உடல் நிலையை பொறுத்து மாறுபடலாம்.



Click it and Unblock the Notifications











