Just In
- 2 hrs ago Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- 8 hrs ago மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- 11 hrs ago உங்க உடலில் இந்த பிரச்சினை இருந்தால் சர்க்கரை நோயால் உங்க கிட்னி டேமேஜ் ஆகிருச்சுனு அர்த்தமாம்...கவனமா இருங்க!
- 13 hrs ago குறட்டை விட்டு எல்லாரையும் டார்ச்சர் பண்றீங்களா? இந்த உணவுகளை சாப்பிடுவதை நிறுத்துங்க... சீக்கிரம் நின்னுடும்!
Don't Miss
- Sports சூப்பர்! சிஎஸ்கேவின் மாஸ் திட்டம்.. ரூ.14 கோடி வீரருக்கு புதிய பொறுப்பு.. இனி அதிரடி தான்
- Finance எலான் மஸ்க் 'எனக்கு வேற வழி தெரியல ஆத்தா'..!! சீனா-வை அடக்க டெஸ்லா எடுத்த கடைசி ஆயுதம்..!
- Movies இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- News நிலப்பட்டா தொலைந்து விட்டதா? பழைய பட்டாவை மீண்டும் பெற முடியுமா? நிலத்தின் பட்டா பெற ஈஸி வழி இதுதான்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கருவில் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதற்கான அறிகுறிகள்
கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டிய நேரமாகும்.இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டதென அர்த்தம். இதில்
கர்ப்பகாலம் என்பது பெண்கள் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாகவும் அதேசமயம் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டிய நேரமாகும். பெண் கருத்தரிக்கும் போது அவர்களுள் விவரிக்க முடியாத ஆயிரக்கணக்கான கேள்விகள் எழும். " படுத்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?", " அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ?" என கவலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும். இந்த கவலைகளாலேயே அவர்களின் தூக்கம் கெடும்.
பெரும்பாலான கருச்சிதைவுகள் கருவுற்ற 12 வாரங்களுக்குள்ளேயே ஏற்படுகிறது. 10 முதல் 20 சதவீத பெண்களுக்கு 20 வது முன்னரே ஏற்படுகிறது. 20 வாரங்களுக்கு பின் ஏற்படும் கருச்சிதைவு அம்மாவின் உடல்நலத்தையும் பாதிக்கும். எப்பொழுது நடந்தாலும் கருச்சிதைவு என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. உங்கள் குழந்தை கருவில் வளர்ச்சியடைவது நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.
1. இதய துடிப்பு
பெண்கள் கர்ப்பத்தின் முதல் கட்டத்தில் இருக்கும்போது மருத்துவர்கள் டாப்ளர் கொண்டு குழந்தையின் இதயத்துடிப்பை உணரதொடங்குவார்கள். குழந்தைக்கு இதயத்துடிப்பு 9 அல்லது 10 வது வாரத்தில் ஆரம்பிக்கும். குழந்தையின் நிலை அல்லது தொப்புள்கொடியை பொருத்து குழந்தையின் இதயத்துடிப்பு கேட்காமல் இருக்கலாம், இருப்பினும் இதுவும் குழந்தையின் வளர்ச்சி நின்றுவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு அறிகுறிதான்.
2. ஃபன்டல் உயரம்
ஃபன்டல் உயரம் என்பது அம்மாவின் மைய எலும்பிலிருந்து அளவிடப்படுவதாகும். இதனை டேப்பின் உதவிகொண்டு மருத்துவர்கள் அளவிடுவார்கள். இதுதான் கருவிற்குள் குழந்தை வளரும் அளவை சொல்வதாகும். ஒருவேளை அளவு எதிர்பார்த்த அளவு இல்லையென்றால் மருத்துவர்கள் மேற்கொண்டு மற்ற பரிசோதனைகளை செய்வார்கள். கருவின் வளர்ச்சி நின்றதற்கு முதல் அறிகுறி இதுதான்.
HCG அளவு குறைதல்
ஹியூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் சுரக்கும் ஒரு ஹார்மோனாகும். வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யும்போது இந்த ஹார்மோன்தான் அவர் கர்ப்பிணியா, இல்லையா என்பதை கூறுவது. இந்த ஹார்மோன் சுரக்கும் அளவு கர்ப்பகாலத்தில் தொடர்ந்து மாறிக்கொண்டேயிருக்கும். இதன் அளவு மிகவும் குறைவது கருவிலுள்ள குழந்தையின் ஆபத்திற்கான அறிகுறியாகும்.
கருவுருதல் வளர்ச்சி கட்டுப்பாடு
IGUR சோதனையின் போது கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்தால் நிச்சயம் அது சிக்கல்தான். இரட்டை குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போது ஒரு குழந்தை IGUR ஆல் பாதிக்கபட்டால் மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருக்கும். இந்த பிரச்சினை தொப்புள்கொடியால் ஏற்படுவது. தொப்புள்கொடியில் பாதிப்பு ஏற்படும்போது அது கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
திடீர் இரத்தப்போக்கு
பெண்களுக்கு மாதம்தோறும் இரத்தப்போக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கர்ப்பகாலத்தில் இரத்தப்போக்கு ஏற்படும்போது அவ்வாறு அலட்சியமாக விடமுடியாது. அது கருச்சிதைவின் அறிகுறியாக கூட இருக்கலாம். சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் சிறிதளவு இரத்தப்போக்கு ஏற்படலாம் ஆனால் இரத்தப்போக்கின் அளவு அதிகமாக இருந்தால் அது பாதிப்பின் அறிகுறிதான்.
திரவ வெளியேற்றம்
யோனி திரவ வெளியேற்றம் கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஒன்றுதான் ஆனால் அது அதிகமாயிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். இது குழந்தையை கருவிற்குள் பத்திரமாக வைத்திருக்கும் அமினோ அமிலத்தின் வெளிப்பாடாக கூட இருக்கலாம். அந்த அமிலம் வெளியேறுவது கரு தன் வளர்ச்சியை நிறுத்திவிட்டது என்பதன் அறிகுறியாகும்.
தாங்கமுடியாத தசைப்பிடிப்பு
கர்ப்பகாலத்தில் தாங்க முடியாத அளவிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உங்கள் கருவிலுள்ள குழந்தை ஆபத்தில் உள்ளது என அர்த்தம். அது சாதாரணமான தசைப்பிடிப்பாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட தொடங்கிவிட்டது, கருப்பையில் இருந்து கருவை வெளியே தள்ளு முயலுகிறது என்று உணருங்கள்.
அசாதாரண ஸ்கேன்
கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் முதன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படும். இது குழந்தையின் நிலை, வளர்ச்சி மற்றும் அளவு ஆகியவற்றை மட்டும் சரிபார்க்காது, பிறப்பு குறைபாடுகளையும் அடையாளம் காட்டும். ஒருவேளை இந்த சோதனையில் உங்கள் குழந்தையின் அசைவுகள் எதுவும் தெரியவில்லை என்றால் உங்கள் மருத்துவர் உங்களிடம் ஒரு கெட்ட செய்தியை சொல்லப்போகிறார் என்று அர்த்தம்.
அதிக காய்ச்சல்
கற்பகாலத்தில் அம்மாவிற்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டால் அது கருவிலுள்ள குழந்தையின் மீது பாதிப்பை ஏற்படுத்தும். உண்மையில் குழந்தையின் வளர்ச்சி கருவில் நின்றுவிட்டதால்தான் அம்மாவிற்கு அதிக காய்ச்சல் ஏற்படுகிறது. இரண்டு நிகழ்ச்சிகளுமே அலட்சியமா விடக்கூடியது அல்ல. உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும்.
இறுதிக்கால கட்டத்தில் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படுதல்
கருவிலுள்ள குழந்தையின் அசைவுகள் இரண்டாவது காலகட்டத்தில் உணரப்பட்டு பின் மூன்றாவது காலகட்டத்தில் உணரப்படாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும். இது ஒருவேளை தாமதமான கருசிதைவாக இருக்கலாம். மற்றவர்களுக்கு முன் அம்மாதான் இதனை உணருவார். இந்த அறிகுறிகள் உங்களை பயமுறுத்த கூறப்படவில்லை, இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்படுவது. ஏனெனில் கர்ப்பகாலத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம்.