Just In
- 40 min ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 6 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 7 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 7 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கர்ப்ப காலத்தின் போது வரும் வாந்தியைத் தடுக்க உதவும் உணவுகள்!!!
கர்ப்ப காலத்தை சில பெண்கள் வெகு சுலபமாக கடந்து விடுவார்கள். ஆனால் பலருக்கு இது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதற்கு காரணம் வாந்தியும், குமட்டலும் தான். கர்ப்ப காலத்தில் வாந்தியும் குமட்டலும் இயல்பான ஒரு அங்கமே; குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் தான். சொல்லப்போனால், கர்ப்ப காலத்தில் 65%-க்கும் அதிகமாக இந்த பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
கர்ப்ப காலத்தில் வாந்தியும் குமட்டலும் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்கள் இன்னமும் தெரியவில்லை. இருப்பினும் உடலில் ஏற்படும் வேகமாக ஹார்மோன் மாற்றங்களால் வயிற்று தசை சுருங்கி நீட்சியடையும். இதனால் தான் வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது என நம்பப்படுகிறது. குறிப்பிட்ட சில வாசனைகள், சில உணவுகள், சோர்வு, பதற்றம், உணர்ச்சிமிக்க வயிறு, கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் குறைபாடு ஆகிய காரணங்களாலும் கூட வாந்தியும் குமட்டலும் ஏற்படுகிறது.
குமட்டலும் வாந்தியும் விடியற்காலையில் வரலாம். இதனால் அன்றைய பொழுதின் வேலைகள் பாதிக்கப்படலாம். சில பெண்களுக்கு இதன் அறிகுறிகள் பகல் நேரத்திலும் ஏற்படலாம். பல பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தோடு இந்த பிரச்சனை நின்று விடும். சிலருக்கு இன்னும் சிறிது காலம் நீடிக்கலாம்.
இந்த அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். இது உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களை வெகுவாக பாதிக்கும். ஆனால் இந்த பிரச்சனையை சுலபமாக கையாளலாம்; அதுவும் எளிய வீட்டு சிகிச்சைகள் மற்றும் வாழு முறையில் சில மாற்றங்களோடு. இப்போது கர்ப்ப காலத்தின் போது வாந்தியைத் தடுக்க உதவும் உணவுகள் பற்றிப் பார்க்கலாமா...?
தண்ணீர் குடியுங்கள்
வாந்தி, குமட்டல் என வந்து விட்டால் தண்ணீர் தான் அதற்கு சிறந்த மருந்தாக விளங்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கும் பெண்களுக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவும். கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்றில் உள்ள சிசுவிற்கும் இது முக்கியமாகும். ஆகவே உங்கள் படுக்கைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக் கொள்ளவும். காலை எழுந்தவுடன் அதனை கொஞ்சம் கொஞ்சமாக குடியுங்கள். உங்கள் வயிறு செட்டாகும் வரை பொறுத்திருக்கவும். பின் படுக்கையை விட்டு எழுந்திருக்கவும். மேலும் நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கவும். இது உங்கள் மனநிலை மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி, உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இஞ்சி
கர்ப்ப காலத்தின் போதும் கூட வாந்தியை கையாள சிறந்த இயற்கையான வழிகளில் ஒன்றாக விளங்குகிறது இஞ்சி. உங்கள் செரிமான அமைப்புக்கு இது மிகவும் நல்லதாகும். மேலும் வாந்தியையும் குமட்டலையும் உண்டாக்கும் வயிற்றில் ஏற்படும் அமில வெளியேற்றத்தை தடுக்கவும் உதவும். வாந்தி வரும் உணர்வை போக்க இஞ்சியின் மனமும் சுவையும் உதவும். அதற்கு சிறிய இஞ்சி துண்டை சூப்பவும் அல்லது இஞ்சி மிட்டாய் ஒன்றை வாயில் போட்டு மெல்லவும். இது குமட்டலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். 5 சொட்டு இஞ்சி ஜூசுடன் 1 டீஸ்பூன் தேனை கலந்து, அதனை காலை எழுந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
மேலும் நறுக்கப்பட்ட 1 டீஸ்பூன் இஞ்சியை 1 கப் தண்ணீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, இஞ்சி டீ தயார் செய்யவும். அதனை வடிகட்டி, கொஞ்சம் தேன் சேர்த்து, மெதுவாக குடிக்கவும். தினமும் காலையில் 1-2 கப் இஞ்சி டீ குடியுங்கள்.
எலுமிச்சை
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தியை கையாள எலுமிச்சையும் உதவும். அதன் இதமளிக்கும் வாசனை, உங்கள் உடலை இயற்கையான முறையில் அமைதிப்படுத்தும். இதனால் குமட்டல் குறைந்து, வாந்தி தடுக்கப்படும். கூடுதலாக அதிலுள்ள வைட்டமின் சி கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் மிக நல்லதாகும். நற்பதமான் எலுமிச்சை ஒன்றை ஒரு டம்ளர் தண்ணீரில் பிழிந்து, அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் குடித்து, வாந்தி மற்றும் குமட்டலை தடுத்திடுங்கள்.
நற்பதமான எலுமிச்சை துண்டுகளை முகர்ந்தும் கூட பார்க்கலாம். இது கர்ப்ப காலத்தின் போது வாந்தியையும் குமட்டலையும் குறைக்கும். சிறிதளவு எலுமிச்சை அதிமுக்கிய எண்ணெய்யை உங்கள் கைக்குட்டையில் தடவி கொள்ளுங்கள். வாந்தி அல்லது குமட்டல் உணர்வி ஏற்படும் போது அதனை முகர்ந்து கொள்ளுங்கள். எலுமிச்சை மிட்டாயும் கூட உதவும்.
புதினா
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்க உதவும் மூலிகைகளில் புதினாவும் ஒன்றாகும். இது வயிற்றை இதமாக்கி அதனால் குமட்டலை குறைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் உலர்ந்த புதினாவை ஒரு கப் வெந்நீரில் போடவும். அதனை 5-10 நிமிடம் வரை மூடி வைக்கவும். பின் வடி கட்டி, அதனுடன் கொஞ்சம் சர்க்கரை அல்லது தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். காலை எழுந்தவுடன் இந்த டீயை பருகுங்கள். மற்றொரு வழியும் உள்ளது - சில துளிகள் புதினா அதிமுக்கிய எண்ணெய்யை உங்கள் கைக்குட்டையில் ஊற்றி, குமட்டல் உணர்வு ஏற்படும் போதெல்லாம் அந்த வாசனையை முகர்ந்து பாருங்கள்.
குறிப்பு: சில பெண்களுக்கு புதினா வாசனை குமட்டலை தூண்டலாம். அப்படிப்பட்ட சூழல்களில் இதனை தவிர்க்கவும்.
பெருஞ்சீரகம்
கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலுக்கு சிகிச்சை அளிக்க மற்றொரு சிறந்த வழியாக விளங்குகிறது பெருஞ்சீரகம். இது செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான பாதையின் உட்பூச்சை அமைதிப்படுத்தும். இதனால் வாந்தி எடுக்கும் உணர்வு குறையும். கூடுதலாக, வாசனை மிக்க இது வயிற்றுக்கு இதமளிக்க உதவும்.
கொஞ்சம் பெருஞ்சீரகத்தை படுக்கையில் அருகில் வைத்துக் கொண்டு, குமட்டல் ஏற்படும் போது அதனை வாயில் போட்டு மெல்லவும்.
1 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஒரு கப் வெந்நீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை மூடி விட்டு, 10 நிமிடங்களுக்கு ஆற விடவும். பின் அதனை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேனை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலையில் மெதுவாக குடிக்கவும்.
வைட்டமின் பி6 உட்கொள்ளுதலை அதிகரிக்கவும்
சரியான காரணம் தெரியாவிட்டாலும் கூட, கர்ப்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியை போக்க வைட்டமின் பி6 உதவும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வைட்டமின் கருவில் உள்ள குழந்தைக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது. இது கர்ப்ப காலத்தில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
வாந்தியை போக்க வைட்டமின் பி6 மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 25 மி.கி. என்ற வீதத்தில் 3 முறை உண்ணலாம். இருப்பினும் அதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, வைட்டமின் பி6 அதிகமாக நிறைந்துள்ள சமநிலையான உணவு, கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வாந்தியை பெருமளவில் தடுக்கும். வைட்டமின் பி6 அதிகமாக உள்ள பழுப்பு அரிசி, வெண்ணெய்ப் பழம், வாழைப்பழம், மீன், சோளம் மற்றும் நட்ஸ் போன்ற சில உணவுகளை உண்ணவும்.
பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ணவும்
காலை எழுந்த உடனேயே பிஸ்கட் போன்ற நொறுக்குத் தீனிகளை உட்கொண்டால், கர்ப்ப காலத்தின் போது குமட்டலை நிறுத்தவும் வாந்தியை தடுக்கவும் உதவும். இந்த பிஸ்கட்களில் கார்போஹைட்ரேட்ஸ் வளமையாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் குவிந்துள்ள அமிலத்தில் வயிற்றை ஊற வைக்கும்.
உங்கள் படுக்கையின் அருகில் ஒரு டப்பா பிஸ்கட்டை வைத்துக் கொள்ளவும். காலை எழுந்தவுடன் அதனை கொஞ்சம் சாப்பிடவும். செரிமானத்திற்கு சிறிது நேரம் அளியுங்கள். பின் மெதுவாக படுக்கையை விட்டு எழுந்திரியுங்கள். பசி எடுப்பதற்கு முன்பும் குமட்டல் ஏற்படுவதற்கு முன்பும், இதனை உண்ணுங்கள்.
சிகப்பு ராஸ்பெர்ரி இலை
கர்ப்ப காலத்தின் போது கர்ப்ப வாயின் மென்மையான தசைகளை அமைதிப்படுத்தி, சிகப்பு ராஸ்பெர்ரியின் இலைகள் குமட்டலையும் வாந்தியையும் தடுக்கும் என சில மூலிகை வைத்தியர்கள் கூறுகிறார்கள். கூடுதலாக இந்த இலையில் வைட்டமின் பி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்றவைகள் வளமையாக உள்ளது. ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு இது அவசியமானதாகும்.
1. 1-2 டீஸ்பூன் உலர்ந்த சிகப்பு ராஸ்பெர்ரி இலைகளை 1 கப் வெந்நீருடன் சேர்த்திடவும்.
2. அதனை 5-10 நிமிடம் வரை மூடி விட்டு, பின் வடி கட்டவும்.
3. காலையில் இந்த டீயை குடிக்கவும்.
சீரான முறையில் நடை கொடுக்கவும்
மருத்துவர்கள் வேண்டாம் என கூறும் வரை, நடை கொடுப்பதும் மிதமான உடற்பயிற்சியும் கர்ப்ப காலத்தின் போது பெரிதும் உதவியாக இருக்கும். நடை கொடுப்பதால் உங்கள் உடல் முழுவதும் உள்ள புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் நீர்த்து போகும். வாந்தி ஏற்படுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், நடை கொடுப்பது செரிமானத்திற்கு உதவும். இதனால் வாந்தி எடுக்கும் வாய்ப்புகள் குறையும். கூடுதலாக, திறந்த வெளியில் நடை கொடுக்கும் போது, நற்பதமான காற்று உங்களுக்கு நல்ல மனநிலையை ஏற்படுத்தும். இரவு உணவிற்கு பிறகு தினமும் 15-20 நிமிடங்கள் வரை நடக்கவும். வெளியே செல்ல முடியவில்லை என்றால் வீட்டுக்குள்ளேயே நடக்கவும்.
கூடுதல் டிப்ஸ்...
- கூடுதல் அளவிலான உணவை தவிர்க்கவும். மாறாக சிறிய அளவில் நாள் முழுவதும் பல முறை உண்ணுங்கள்.
- வெறும் வயிற்றுடன் இருக்காதீர்கள். ஒவ்வொரு உணவு வேளைகளின் இடைவெளியில் நொறுக்குத் தீனிகளை உண்ணவும்.
- பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இது செரிக்க சிரமமாக இருப்பதால் வாந்தி ஏற்படும்.
- அதிகமான கார்போஹைட்ரேட்ஸ் அல்லது புரதம், குறைந்த கொழுப்புகள் மற்றும் சுலபமாக செரிக்க கூடிய உணவுகளை உண்ணவும்.
கூடுதல் டிப்ஸ்...
- சூடான உணவின் வாசனை குமட்டலை ஏற்படுத்தினால், குளிர்ந்த உணவுகளை உண்ணவும்.
- சீக்கிரமாக தூங்கச் சென்று, காலையில் தாமதமாக எழுந்து, அதிக நேரம் தூங்குங்கள். முக்கியமாக காலையில் படுக்கையை விட்டு மெதுவாகவும் எழுந்திருக்க வேண்டும்.
- யோகா, சுவாச பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவைகள் உங்கள் மனதின் கவனத்தை திசை திருப்பும். இது குமட்டலை குறைக்க உதவும்.
- தினமும் காலையில் குளிர்ச்சியான, பழச் சுவை கொண்ட ஐஸ் வகைகளை உண்ணவும். இது வாந்தியை அண்ட விடாது.
- இரவு உணவருந்திய பிறகு, குறைந்தது 30 நிமிடங்களுக்காவது படுக்காமல் இருக்கவும்.