Latest Updates
-
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன?
கர்ப்பிணிகளே! மூலிகை டீ குடிக்கப் போறீங்களா? முதல்ல இத படிங்க...
பெரும்பாலான பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, காஃப்பைன் உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பார்கள். ஏனெனில் அவர்கள் அதை குடிப்பது ஆரோக்கியமற்றது என்று நினைப்பதால் தான். மேலும் வீட்டில் இருக்கும் பெரியோர்களும், அவர்களை குடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சில மூலிகை டீ-க்கள், உடலுக்கு மிகவும் சிறந்தது. முக்கியமாக அதை குறைந்த அளவில் குடித்தால், அவை நிச்சயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
அதையே அளவுக்கு அதிகமாக பருகினால், அது கர்ப்பிணிகளுக்கு தீங்கை விளைவிக்கும். அதே சமயம் அனைத்து மூலிகை டீ-க்களும் உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. அதுமட்டுமின்றி, சிலருக்கு மூலிகை டீ-க்களைப் பற்றி சரியான நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள், க்ரீன் டீ குடித்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்றும், சிலர் அதனை குறைந்த அளவில் குடித்தால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்றும் நினைக்கின்றனர். எனவே எந்த மூலிகை டீ குடிப்பதாக இருந்தாலும், அந்த மூலிகை டீ உடலுக்கு பாதுகாப்பானதா என்று சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது அத்தகைய கர்ப்பிணிகளுக்கு எந்த மூலிகை டீயை, எவ்வளவு குடிக்க வேண்டும், அதில் என்ன நன்மை உள்ளது, பாதுகாப்பானதா, இல்லையா என்று மூலிகை டீ-க்களைப் பற்றி பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* மிளகுக்கீரை டீ (Peppermint tea)- இந்த மூலிகை டீ-யை அதிகமாக குடிக்காமல், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் சோர்வு, குமட்டல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணமாகும்.
* இஞ்சி டீ (Pure ginger tea)- நிறைய மருத்துவர்கள் இஞ்சி டீயை குடிக்க சொல்வார்கள். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி மற்றும் ஒருவித சோர்வான மனநிலை போன்றவை ஏற்படும். அந்த நேரத்தில் இந்த டீயை குடித்தால், நல்லது.
* தைம் டீ (Thyme tea)- இந்த டீயை கர்ப்பிணிகள் குறைந்த அளவில் குடிப்பதால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
* க்ரீன் டீ (Green tea)- உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பானங்களுள் க்ரீன் டீயும் ஒன்று. அதிலும் இதனை கர்ப்பமாக இருக்கும் போது அளவாக குடித்து வந்தால், நிறைய நன்மைகளைப் பெறலாம். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், செல்கள் பாதிப்படைவதை தடுத்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும். ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக கர்ப்பிணிகள் அருந்தக்கூடாது. ஏனெனில் இவை பின் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட்டை உடலில் உறிஞ்சாமல் செய்துவிடும்.
* சீமைச்சாமந்தி டீ (Chamomile tea)- இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மற்றொரு சிறந்த மூலிகை டீ. அதிலும் தூக்கமின்மையால் அவஸ்தைப்படும் கர்ப்பிணிகள், இந்த டீயை குடித்தால், மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, நிம்மதியான தூக்கமும் வரும்.
* ராஸ்பெர்ரி இலை டீ (Raspberry leaf tea)- சில கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் ராஸ்பெர்ரி இலையால் செய்யப்படும் டீயைக் குடித்து, குறைப் பிரசவம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த டீயைப் பருகும் முன், மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது நல்லது.
* துளசி டீ (Tulsi tea)- இந்த துளசி டீயை குடித்தால், காலையில் ஏற்படும் சோர்வு மற்றும் வாந்தி போன்றவை தடுக்கப்படும். இந்த டீயை மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் குடிக்க வேண்டும்.
இவையே மூலிகை டீ-க்களைப் பற்றிய உண்மையான கருத்துக்கள். எனவே எந்த ஒரு மூலிகை டீயை குடிக்கும் முன்பும் மருத்துவரிடம், ஆலோசனைப் பெற்று பின் பருக ஆரம்பிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











