Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கர்ப்பகாலத்தில் காசநோய் தாக்கினால் குழந்தையை பாதிக்கும்?

கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் தாய்க்கு எந்த பிரச்சினையும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால் மட்டுமே கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.
கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்' எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.
பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும். இக்காச நோயினை கண்டறிய இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும்.
பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்க்கின்றனர். பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.



Click it and Unblock the Notifications