Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
மசக்கையும் மயக்கமும் சில நாளுக்குத்தான்

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடல் சில ஹார்மோன்கள் சுரக்கும். இந்தப் புது மாற்றங்களுக்கு உடல் பழக்கப் படும்வரை, வாந்தியும் மயக்கமும் ஏற்படும். இதை மசக்கை என்றும் பேச்சுவழக்கில் தெரிவிக்கின்றனர்.
கருவானது கருப்பையில் தங்கி வளர ஆரம் பித்ததுமே மசக்கை தொடங்கிவிடும். பெரும்பாலும் முதல் மூன்று மாதங்களில் தான் இது அதிகமாக இருக்கும். எதையும் சாப்பிடப் பிடிக்காது. எதைப்பார்த்தாலும் வயிற்றை பிரட்டிக்கொண்டு வரும். அதுவரை நாசிக்கு இதமான வாசனையாக இருந்தவை எல்லாம் ஒத்துக்கொள்ளாதவையாகிவிடும்.
மசக்கை காலத்தில் எதை சாப்பிட்டாலும் வாந்தி வரும் என்பதால் பெரும்பாலான கர்ப்பிணிகள் உண்பதை தவிர்த்துவிடுவர். இது தவறு இவ்வாறு வயிற்றை காயப்போடுவது குழந்தைக்கு ஆபத்தாகிவிடும். எனவே
வாய்க்கு என்ன பிடிக்கிறதோ அவற்றை கொஞ்சம் கொஞ்சமாகவாவது அடிக்கடி சாப்பிடவேண்டும். அடிக்கடி ஜூஸ் வகையறாக்களை குடிக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
புளியும் மாங்காயும் இனிக்கும்
மசக்கை காலத்தில் புளிப்புச் சுவையுள்ளவற்றை சாப்பிட நாக்கு ஏங்கும். அதனால்தான் மசக்கை காலங்களில் மாங்காய், புளியங்காய் போன்றவற்றைக் கூசாமல் சாப்பிடுகின்றனர். அதில் தவறில்லை. புளிப்புச் சுவை குமட்டலை தடுக்கும் என்பதால் ஒரு வகையில் அது மருந்தாகவும் பயன்படுகிறது. டாக்டர்களின் ஆலோசனையோடு, வாந்தியைக் கட்டுப்படுத்த உள்ள மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளலாம். 'எதற்கும் அடங்க மாட்டேன்" என்பதுபோல ஒரு துளி உணவு உள்ளே போனதும் உடனே வாந்தியாக வெளியே கொப்பளித்தால், ட்ரிப்ஸ் ஏற்றுவதைத் தவிர வேறுவழியே இல்லை.
சாதாரண மயக்கம், வாந்திதான் மசக்கை. அடிக்கடி தலைசுற்றல் வந்தாலோ, எழுந்துகொள்ள முடியாத அளவுக்கு மயக்கம் வந்தாலோ அலட்சியம் கூடாது. கருப்பைக்கு பதில், கருக்குழாயில் கரு வளர்ந்தால் இதுபோல நேர வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த காலகட்டத்தில் அதிக காய்ச்சலோ, சிறுநீர்த் தொற்று போன்ற தொந்தரவோ, ரத்தப்போக்கோ இருந்தால் உடனே மருத்துவரைப் பார்க்கவேண்டும்.
மசக்கை நல்லதே
இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக, மசக்கைக்கான எந்த அறிகுறியும் இல்லாத கர்ப்பிணிகளும் நிறையபேர் உண்டு. வாந்தியாவது ஒன்றாவது என்று அனைத்தையும் அள்ளிப் போட்டுக்கொண்டு குழந்தையை கருவிலேயே ஆரோக்கியமாக வளர்க்கும் கர்ப்பிணிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் மசக்கை வாந்தி ஏற்படுவது தாய்க்கும் கருக்குழந்தைக்கும் ஏற்றது அது ஆரோக்கியமானதும் கூட என்கின்றனர் ஆய்வாளர்கள்.



Click it and Unblock the Notifications