Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
தாய்மைபேற்றினை தடுக்கும் எதிரிகள் : வெல்வது எப்படி?

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்'. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும். நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன் பாதிப்பு
இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு முகப்பரு தோன்றும். உடல் குண்டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும். மேலும் ஹார்மோன் பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கும். பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். இந்த நோய் பாதிப்புள்ள பெண்களின் உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணமாகும். இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பியும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடி தோன்றும். எனவே அருகில் உள்ள மகப்பேறு நிபுணர்களை தொடர்பு கொண்டு சரியான சிகிச்சை பெற்றுக்கொண்டால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலர்வுத் தன்மை
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கின்றன. இதனை செர்விக்கல் மியூக்கஸ்' என்கிறோம். கணவரின் உயிரணு நீந்தி வேகமாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லாவிட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும். எனவே உலர்வுத்தன்மையை போக்க சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும்.
பலவீனமே எதிரி
பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக்கும் வெஜைனெஸ்மாஸ்' நோய் ஏற்பட்டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல்லாமல் இருந்தாலோ, செக்சை அருவறுப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற்கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடிக்கொள்ள வேண்டும்.
ஆண்களிடையே உள்ள பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையாகிறது. விந்தணு குறைபாடு, ஈடுபாடின்மை போன்றவையும் தாய்மை பேற்றினை தடுக்கும் எதிரியாக திகழ்கிறது.
நோய் தொற்றுகள்
சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிபயோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.



Click it and Unblock the Notifications