Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி தரும் பேஷியல்!

மன அமைதி முக்கியம்
கர்ப்பகாலத்தில் பேஷியல் செய்து கொள்ளலாமா என்பது பெரும்பாலோனோரின் கேள்வியாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தேவையான மன அமைதி எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.
கண்டதை நினைக்காதீங்க
பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான். எனவே பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது இதனால் எந்த பயனும் இல்லை. எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே மன அமைதியை அடைவோம். ரத்த ஓட்டம் சீராகி மனம் அமைதியடைவதால் உடலுக்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் நிச்சயம் நல்ல பலனை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆக்ஸிஜன் பேஷியல்
ஆக்ஸிஜன் பேஷியல் செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற வரிகளும், சுருக்கங்களும் நீங்கும். ஹைடிராக்டிங் பேஷியல் வறட்சியைப் போக்கி நீர்ச்சத்தினை தக்கவைக்கிறது. அதேசமயம் முகப்பரு உள்ள கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னரே பேஷியல் செய்து கொள்ள வேண்டும் என்று அழகியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
செய்யக்கூடாதாவை
அரோமா தெரபி, ரசாயனங்கள் பயன்படுத்தி பேஷியல், சூடான கற்கள், ஆழமான கிளன்சிங், மின்னணு பொருட்களைப் பயன்படுத்தி பேஷியல் செய்யக்கூடாது.



Click it and Unblock the Notifications