Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
கர்ப்பகாலத்தில் அதிக கொழுப்பு உணவு ஆகாது!

கர்ப்பிணிகள் குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கேற்ப உணவுகளை உட்கொள்ளவேண்டும். ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளையும், கீரைகள், பச்சைக்காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணிகள் கொழுப்பு சத்து அதிகமாக உள்ள உணவு வகைகளை தவிக்க வேண்டும். கொழுப்பு நீக்கப்பட்ட பால், நறுமண தயிர் , பனீர் ஆகிய உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் நல்ல கொழுப்புக்கள்தான் அதிகம் உள்ளன. இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் புரதச் சத்து மற்றும் வைட்டமின் பி 12 அதிகமாக உள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவு வைட்டமின்களும், தாதுஉப்புக்களும் அடங்கியுள்ளன. இதில் நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே கர்ப்பகாலத்தில் அதிகஅளவில் காய்கறிகள் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிகமான பழச்சாறு குடிக்கலாம்,நீர் அதிகம் அருந்த வேண்டும். அதேசமயம் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழரசங்கள், உணவுப்பொருட்களை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் அவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதால் அவற்றை உண்ணும் போது கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும்.
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் கொண்டைக்கடலை,பாசி பயறு , காரமணி, பட்டாணி,ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் இவற்றை உண்ணுவது உடல் நலத்திற்கு நல்லது. அதிகமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும், முட்டை,ஆட்டுகறி,கோழிக்கறி மற்றும் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கொழுப்பு மற்றும் எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை உட்கொள்வது கர்ப்பிணித்தாய்க்கும், சேய்க்கும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவே நெய், வெண்ணெய்,தேங்காய் பால், டால்டா ஆகியவற்றை உணவுகளில் தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவற்றில் அதிகம் கொழுப்பு உள்ளது. அதற்குப் பதிலாக தாவர எண்ணெய்களில் சமைத்து சாப்பிடலாம். சூரியகாந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.



Click it and Unblock the Notifications