Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
கர்ப்ப காலத்தில் டைட்டா டிரஸ் போடாதீங்க!

மனிதர்களின் மூளையில் அடிபாகத்தில் உள்ள இந்த சுரப்பி ப்ரோலாக்டின் என்னும் ஹார்மோனை சுரக்கிறது. ப்ரோலாக்டின் ஆண், பெண் இருவரிடமும் காணப்படுகிறது. ஆனால் பெண்கள் கர்ப்பமடைந்தால் இதன் சுரப்பு 10 மடங்கு அதிகரிக்கிறது. இதன் முக்கிய பணி கர்ப்பிணி பெண்களின் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டுவதுதான்.
கர்ப்பிணிகளின் மார்பகத்தின் பால் சுரக்கும் சுரப்பிகளை “ப்ரோலாக்டின்” உப்ப வைத்து பெரிதாக்குகிறது. கர்ப்ப காலத்தின் போது ப்ரோலாக்டின் பிட்யூட்ரியில் மட்டுமன்றி மார்பக திசுக்களிலும், கர்பப்பை ஈரமான சுவர்களிலும் உண்டாகிறது. குழந்தை பிறந்ததும் மூளை, பிட்யூட்டரியை, ப்ரோலாக்டினை ‘ரிலீஸ்’ செய்ய ஆணையிடும்.
தாய்ப்பால் சுரப்பு
கர்ப்ப காலத்தில் அதிகமாகும் பெண் ஹார்மோன் எஸ்ட்ரோஜன், ப்ரோலாக்டின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் குழந்தை பிறந்தவுடன் தரவேண்டிய தாய்ப்பால் உற்பத்தியை ப்ரோலாக்டின் தயாராக வைக்க உதவுகிறது. பிரசவத்திற்கு பின் பிறந்த குழந்தை தாய்பாலை பருகும் போது, ப்ரோலாக்டின் உற்பத்தி மேலும் தூண்டப்படுகிறது. அடுத்த பால் கொடுக்கும் வேளைக்கு தயாராக பால் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
தளர்வான உடைகள்
கர்ப்ப காலத்தில் மார்பகம், வயிறு, கருப்பை மற்றும் விலா எலும்பின் அளவு அதிகரிக்க காரணம் ஹார்மோன். ஏனெனில், அது அனைத்து பகுதிகளிலும் சுருக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தளர்வடையச் செய்து இப்பகுதிகளை பெரிதாக்குகிறது. எனவே கர்ப்ப காலத்தில் இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிந்தால் மார்பக அழுத்தத்தின் காரணமாக மேலும் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நெஞ்செரிச்சல்
கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களாகிய நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம், உதரவிதானம் இறுக்கமடைதல்,விலா அகலப்படுத்துதல் போன்ற காரணங்களால் மார்பு மற்றும் முதுகு வலி ஏற்படுகிறது. கர்ப்பகாலத்தில் சிறந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். நெஞ்சு எரிச்சல் தர கூடிய உணவு வகைகளை தவிர்க்கலாம். அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். அது சீரான பிரசவத்திற்கு வழி வகுக்கும்.
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு மார்பு இறுக்கம் இயல்பானதாக கருதப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் அவை கடுமையான பிரச்சனைகனை ஏற்படுத்தக்கூடும். அதாவது மார்பு அழுத்தம் அதிகமாக இருந்தால் ஆஸ்துமா, மாரடைப்பு இரத்தம் உறைதல் அல்லது ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.



Click it and Unblock the Notifications