பேறுகால முதுகுவலியை உடனே கவனிங்க !

By Mayura Akilan

முதுகுவலி என்பது இன்றைக்கு அனைவருக்கு உணரும் நோயாக உள்ளது. அதுவும் பேறுகாலத்தின் போது சுமார் 50 சதவீதம் பெண்கள் கீழ் முதுகுவலியை அனுபவிக்கிறார்கள். பேறு காலத்தின் போதான முதுகுவலி, குறிப்பிடும் அளவுக்கு வலியையும், செயலிழப்பையும் கொண்டு வரலாம். மேலும் அடுத்த பிரசவத்தில் முதுகுவலி வரவும் காரணமாக இருக்கலாம்.

தாயின் எடை அதிகரிப்பு, உடற்பயிற்சி, வேலை பளு போன்றவற்றினால் ஆகியவற்றைப் பொறுத்து பேறு காலத்தின் போது முதுகுவலி வரலாம். முட்டியை மடக்காமல் நேரடியாக குனிவது போன்றவையும் பேறு காலத்தின் போதான முதுகுவலியை அதிகரிக்கும்.

வயிற்று வகிட்டு, குறுக்கு வட்டம் மற்றும் கீழ்முதுகு முன்கூனல் ஆகியவை பேறு காலத்தின் போது ஏற்படும் கீழ் முதுகு வலியோடு சம்பந்தப்பட்டவைகளாகக் காணப்படும்.

நிற்றல், உட்காருதல், முன்னே குனிதல், பளு தூக்குதல் மற்றும் நடத்தல் ஆகியவை பேறு காலத்தின் போது முதுவலியை அதிகரிக்கக் கூடியவைகளாகும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

பேறு காலத்தின் போதான முதுகுவலியானது இரவு நேரத்தில் தூங்கவிடாமல் செய்யும். தொடை மற்றும் புட்டங்களுக்கு செல்லும் வலியானது நோயாளியை மிகவும் மன உளைச்சலை உண்டு பண்ணும்.

முதுகு வலி வராமல் தவிர்க்க உடலின் பாகங்களை சமமாக வைக்கவேண்டும். எடை மிகுந்த பொருட்களை தூக்கும் போது கவனமாக கையாளவேண்டும். மாடிப்படி ஏறுதல் மற்றும் முதுகு அல்லது இடுப்பை சுற்றியுள்ள முனைப்புள்ளிகளில் திரும்பத் திரும்ப தோன்றும் அசைவுகள் ஆகியவற்றைத் தவிர்த்தால் வலி குறையும்.

Story first published: Saturday, May 19, 2012, 18:55 [IST]
Desktop Bottom Promotion