Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?

ஆனால் அவ்வாறு அவசரப்பட்டு பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு எடுத்துவிட்டால், பின் குழந்தை பிறந்த பின்னர் அவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடும். அதிலும் தனிக்குடும்பமாக இருந்தால், பெரும் அவஸ்தையாகிவிடும். அதுவே கூட்டுக் குடும்பம் இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் வீட்டில் உள்ளோரே குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆகவே அத்தகைய பெரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, விடுப்புகளை எப்போது எடுத்தால், அந்த விடுமுறை சரியாக இருக்கும் என்பதை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.
எப்போது பிரசவ கால விடுப்பு (ML) எடுத்தால் நல்லது?
* சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள், கண்டிப்பாக அநந்த நேரத்தில் பிரசவ கால விடுப்புகளை எடுத்தாக வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுத்துவிட்டால் தான், உடல் நிலையை சரியாக கவனிக்க முடியும். ஏனெனில் குழந்தையை விடவா வேலை முக்கியம். ஆகவே இந்த நேரம் மிகவும் முக்கியமானது. எனவே இந்த நேரத்தில் பிரசவ கால விடுப்பு அவசியமானது.
* கர்ப்பமாக இருக்கும் நேரம் முதல் மூன்று மாதத்தில் வேண்டுமானாலும் பிரசவ கால விடுப்புகளை எடுக்கலாம். அதிலும் ஒரு மாத விடுப்பு இந்த நேரத்தில் போதுமானது. ஏனெனில் இந்த நேரம் அதிக வேலைப் பளு மற்றும் அதன் காரணமாக மனதில் அழுத்தம் ஏற்பட்டாலும், கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஆகவே இப்போது பாதியையும், மீது விடுப்பை பிரசவத்தின் போதும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தையுடனும் சந்தோஷமாக நேரம் செலவழித்தது போல் இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லை என்று இருப்பவர்கள், பிரசவம் ஏற்படும் இரண்டு நாட்களுக்கு முன் இருந்து விடுப்பு எடுத்தால் போதுமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் விடுப்பு எடுத்து எதற்காக நாட்களை வீணடிக்க வேண்டும். பிரசவத்தின் போது எடுத்தால், குழந்தையுடன் வேலைக்கு போக வேண்டுமே என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், அழகாக நாட்களை குழந்தையுடன் செலவழிக்கலாமே!
* பிரசவத்திற்கு பின் குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதிலும் சிசேரியன் என்றால் குறைந்தது இரண்டு மாதமாவது வீட்டில் இருந்து, ரெஸ்ட் எடுக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் தையல்கள் அனைத்தும் காய்ந்து, அதனால் ஏற்பட்ட புண்ணும் சரியாகும். ஆகுவே இந்த நேரத்தில் எடுப்பது தான் எப்போதும் சரியானது. ஒரு வேளை விடுப்பு இல்லையென்றாலும், பணம் போனாலும் பரவாயில்லை என்று விடுப்பு போட்டுவிடுங்கள். உயிரை விட வேலை ஒன்றும் முக்கியமில்லை.
ஆகவே மகப்பேறு விடுப்பு எடுக்க நினைப்பவர்கள், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, விடுப்பு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். இதனால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமடைவதோடு, குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்கலாம்.



Click it and Unblock the Notifications