Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?

ஆனால் அவ்வாறு அவசரப்பட்டு பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு எடுத்துவிட்டால், பின் குழந்தை பிறந்த பின்னர் அவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடும். அதிலும் தனிக்குடும்பமாக இருந்தால், பெரும் அவஸ்தையாகிவிடும். அதுவே கூட்டுக் குடும்பம் இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் வீட்டில் உள்ளோரே குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆகவே அத்தகைய பெரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, விடுப்புகளை எப்போது எடுத்தால், அந்த விடுமுறை சரியாக இருக்கும் என்பதை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.
எப்போது பிரசவ கால விடுப்பு (ML) எடுத்தால் நல்லது?
* சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள், கண்டிப்பாக அநந்த நேரத்தில் பிரசவ கால விடுப்புகளை எடுத்தாக வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுத்துவிட்டால் தான், உடல் நிலையை சரியாக கவனிக்க முடியும். ஏனெனில் குழந்தையை விடவா வேலை முக்கியம். ஆகவே இந்த நேரம் மிகவும் முக்கியமானது. எனவே இந்த நேரத்தில் பிரசவ கால விடுப்பு அவசியமானது.
* கர்ப்பமாக இருக்கும் நேரம் முதல் மூன்று மாதத்தில் வேண்டுமானாலும் பிரசவ கால விடுப்புகளை எடுக்கலாம். அதிலும் ஒரு மாத விடுப்பு இந்த நேரத்தில் போதுமானது. ஏனெனில் இந்த நேரம் அதிக வேலைப் பளு மற்றும் அதன் காரணமாக மனதில் அழுத்தம் ஏற்பட்டாலும், கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஆகவே இப்போது பாதியையும், மீது விடுப்பை பிரசவத்தின் போதும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தையுடனும் சந்தோஷமாக நேரம் செலவழித்தது போல் இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லை என்று இருப்பவர்கள், பிரசவம் ஏற்படும் இரண்டு நாட்களுக்கு முன் இருந்து விடுப்பு எடுத்தால் போதுமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் விடுப்பு எடுத்து எதற்காக நாட்களை வீணடிக்க வேண்டும். பிரசவத்தின் போது எடுத்தால், குழந்தையுடன் வேலைக்கு போக வேண்டுமே என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், அழகாக நாட்களை குழந்தையுடன் செலவழிக்கலாமே!
* பிரசவத்திற்கு பின் குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதிலும் சிசேரியன் என்றால் குறைந்தது இரண்டு மாதமாவது வீட்டில் இருந்து, ரெஸ்ட் எடுக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் தையல்கள் அனைத்தும் காய்ந்து, அதனால் ஏற்பட்ட புண்ணும் சரியாகும். ஆகுவே இந்த நேரத்தில் எடுப்பது தான் எப்போதும் சரியானது. ஒரு வேளை விடுப்பு இல்லையென்றாலும், பணம் போனாலும் பரவாயில்லை என்று விடுப்பு போட்டுவிடுங்கள். உயிரை விட வேலை ஒன்றும் முக்கியமில்லை.
ஆகவே மகப்பேறு விடுப்பு எடுக்க நினைப்பவர்கள், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, விடுப்பு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். இதனால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமடைவதோடு, குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்கலாம்.



Click it and Unblock the Notifications