Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
பிரசவ கால விடுப்பு எப்ப எடுத்தா நல்லது?

ஆனால் அவ்வாறு அவசரப்பட்டு பிரசவத்திற்கு முன்னரே விடுப்பு எடுத்துவிட்டால், பின் குழந்தை பிறந்த பின்னர் அவர்களை சரியாக கவனிக்க முடியாமல் போய்விடும். அதிலும் தனிக்குடும்பமாக இருந்தால், பெரும் அவஸ்தையாகிவிடும். அதுவே கூட்டுக் குடும்பம் இருந்தால், எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் வீட்டில் உள்ளோரே குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆகவே அத்தகைய பெரும் குழப்பத்தில் இருப்பவர்களுக்கு, விடுப்புகளை எப்போது எடுத்தால், அந்த விடுமுறை சரியாக இருக்கும் என்பதை கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் சில டிப்ஸ்களை கூறுகின்றனர்.
எப்போது பிரசவ கால விடுப்பு (ML) எடுத்தால் நல்லது?
* சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகள் இருப்பவர்கள், கண்டிப்பாக அநந்த நேரத்தில் பிரசவ கால விடுப்புகளை எடுத்தாக வேண்டும். அவ்வாறு விடுப்பு எடுத்துவிட்டால் தான், உடல் நிலையை சரியாக கவனிக்க முடியும். ஏனெனில் குழந்தையை விடவா வேலை முக்கியம். ஆகவே இந்த நேரம் மிகவும் முக்கியமானது. எனவே இந்த நேரத்தில் பிரசவ கால விடுப்பு அவசியமானது.
* கர்ப்பமாக இருக்கும் நேரம் முதல் மூன்று மாதத்தில் வேண்டுமானாலும் பிரசவ கால விடுப்புகளை எடுக்கலாம். அதிலும் ஒரு மாத விடுப்பு இந்த நேரத்தில் போதுமானது. ஏனெனில் இந்த நேரம் அதிக வேலைப் பளு மற்றும் அதன் காரணமாக மனதில் அழுத்தம் ஏற்பட்டாலும், கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். ஆகவே இப்போது பாதியையும், மீது விடுப்பை பிரசவத்தின் போதும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் குழந்தையுடனும் சந்தோஷமாக நேரம் செலவழித்தது போல் இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இதுவரை இல்லை என்று இருப்பவர்கள், பிரசவம் ஏற்படும் இரண்டு நாட்களுக்கு முன் இருந்து விடுப்பு எடுத்தால் போதுமானது. எந்த பிரச்சனையும் இல்லாமல் விடுப்பு எடுத்து எதற்காக நாட்களை வீணடிக்க வேண்டும். பிரசவத்தின் போது எடுத்தால், குழந்தையுடன் வேலைக்கு போக வேண்டுமே என்று எந்த ஒரு பதட்டமும் இல்லாமல், அழகாக நாட்களை குழந்தையுடன் செலவழிக்கலாமே!
* பிரசவத்திற்கு பின் குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டும். அதிலும் சிசேரியன் என்றால் குறைந்தது இரண்டு மாதமாவது வீட்டில் இருந்து, ரெஸ்ட் எடுக்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் தையல்கள் அனைத்தும் காய்ந்து, அதனால் ஏற்பட்ட புண்ணும் சரியாகும். ஆகுவே இந்த நேரத்தில் எடுப்பது தான் எப்போதும் சரியானது. ஒரு வேளை விடுப்பு இல்லையென்றாலும், பணம் போனாலும் பரவாயில்லை என்று விடுப்பு போட்டுவிடுங்கள். உயிரை விட வேலை ஒன்றும் முக்கியமில்லை.
ஆகவே மகப்பேறு விடுப்பு எடுக்க நினைப்பவர்கள், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் வைத்து, விடுப்பு எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். இதனால் உங்கள் உடல் நலம் ஆரோக்கியமடைவதோடு, குழந்தையையும் ஆரோக்கியமாக வளர்க்கலாம்.



Click it and Unblock the Notifications











