Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
ஒரு பெண்ணுக்கு குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?
முன்கூட்டிய பிரசவம் அல்லது குறைப்பிரசவதிற்கான அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாகப் பார்க்கலாம். அது பற்றியதொரு விளக்கமான தொகுப்பு தான் இது.
ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் பிரசவம் என்பது மறுஜென்மம் போன்றது. ஒரு புதிய உயிரை உலகிற்கு அறிமுகம் செய்யும் நாள் அது. இத்தகைய பிரசவத்தில் அவ்வப்போது சில சிக்கல்கள் எழுந்து கர்ப்பிணி பெண்ணையும் சுற்றியிருப்பவரையும் பயத்தில் ஆழ்த்தும்.
பிரசவத்தில் மிகவும் சிக்கலானது குறிப்பிட்ட தேதிக்கு முன்பாக நிகழும் பிரசவம். அதாவது 37 வாரங்களுக்கு முன்னதாக நடக்கும் இத்தகைய பிரசவம் குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது. இதனைக் குறை பிள்ளைப்பேறு என்றும், இப்படி குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை குறைமாதக் குழந்தை என்றும் அழைப்பார்கள்.

ஆரோக்கிய குறைபாடு, சுவாசிப்பதில் சிரமம், போன்ற பாதிப்புகள், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்ற தொற்று பாதிப்புகள் போன்றவற்றை இந்த குறைபிரசவ குழந்தைகள் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
குறை மாத பிரசவத்திற்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் ஆகியவற்றை புறக்கணிக்க வேண்டாம். கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் கர்ப்பிணிகளுக்கு தென்பட்டால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

கருப்பை சுருக்கம்
கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இந்த கருப்பை சுருக்கம் உண்டாகும். இந்த சுருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வலி அதிகரித்த அளவு இருந்தால் அது குறை மாத பிரசவ அறிகுறியாக இருக்கலாம். வயிற்றைச் சுற்றி இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டுவது போன்ற வலி தோன்றும். இந்த வலி விட்டு விட்டு வரும். கீழே படுப்பதால் அல்லது உங்கள் அங்க நிலைகளை மாற்றுவதால் இந்த பிரசவ வலி குறையாது.

இடுப்பு அழுத்தம்
கர்ப்பகாலத்தின் கடைசி கட்டங்களில் இடுப்பில் ஒரு வித அழுத்த அவ்வப்போது உண்டாகும். ஆனால் இந்த அழுத்தம் மிக அதிகம் உணரப்படும்போது , அது குறை மாத பிரசவ வலியின் அறிகுறியாக இருக்கலாம். இடுப்பு வலி ஏற்படுவதன் காரணம், குழந்தை வெளியில் வர முயற்சிப்பது ஆகும். குழந்தை பிறக்கக் கூடிய நிலைக்கு வந்துவிட்டதை இந்த வலி உணர்த்தும்.

பனிக்குடம் உடைவது
பிறப்புறுப்பில் திடீரென்று அதிக நீர் வெளியேற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். குறைமாத பிரசவத்தின் மற்றொரு அறிகுறி, சிவப்பு இரத்தம் வெளியேற்றம் அல்லது நீர் வெளியேற்றம். கர்ப்பப்பை வாய் அல்லது பிறப்புறுப்பு வாய் திறந்து கொள்வதால் இந்த நீர் வடிதல் ஏறபடலாம்

வலி
மாதவிடாய் வலியை ஒத்த வலி பிரசவத்தின் அறிகுறியாகும். மோசமான வயிற்று வலியைப் போல் தொடங்கும் இந்த வலி பிரசவ வலியின் ஆரம்ப அறிகுறியாகும். அடுத்த சில மணி நேரத்தில் இந்த வலி குறையாது.

கீழ் முதுகு வலி
முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அதிக வலி, மற்றும் உங்களால் எங்கும் அசைய முடியாத வலி, உட்கார முடியாமல் நிற்க முடியாமல் வலி ஆகியவை இருந்தால் மருத்துவரிடம் செல்வது நல்லது. வலியுடன் கூட, கீழ் முதுகு பகுதியில் ஒரு வித அழுத்தத்தை நீங்கள் உணர முடியும். அதிக பாரத்தை சுமக்கும்போது உண்டாகும் உணர்வு போல் இந்த உணர்வு இருக்கும்.

குழந்தையின் அசைவு
குழந்தையின் அசைவில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் ஏற்பட்டால், அது குறைமாத பிரசவத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் குழந்தை வயிற்றில் இருந்து கீழே தள்ள முயற்சிப்பதை உங்களால் உணர முடிந்தால் அதனைப் புறக்கணிக்க வேண்டாம்.

அடையாளம் மற்றும் அறிகுறிகள்
. மயக்கம் மற்றும் கண்கள் இருட்டிக் கொண்டு வருவது போல் உணர்வு
. திட்டுக்கள் தோன்றுவது, பார்வை மங்குவது
. தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் சில்லிடுவது
. கைகள் மற்றும் பாதங்கள் திடீரென்று வீக்கம் அடைவது மற்றும் வலியுடன் கூடிய அசௌகரியம் உணரப்படுவது

இறுதி மூன்று மாதங்கள்
கர்ப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் இருக்கும்போது, எந்த ஒரு சிறிய மாற்றத்தையும் புறக்கணிக்கக் கூடாது. குறைப்பிரசவத்தை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். மருத்துவ சிகிச்சையில் கவனக் குறைபாடு நிகழ்ந்தால் தாய்க்கும் குழந்தைக்கும் சரி செய்யமுடியாத சேதம் உண்டாகும்.



Click it and Unblock the Notifications