For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இயற்கை முறை குடும்ப கட்டுப்பாடு பற்றி உங்களுக்கு தெரியுமா?

கருவுறுதலை தடுக்க உதவும் மிக முக்கியமான விஷயம்; இயற்கை முறை கட்டுப்பாடு பற்றிய தகவல்கள், கருவுறுதலை தடுக்க உதவும் இயற்கை முறைகள் குறித்து இங்கு படிக்கலாம்.

|

ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குவதே தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளுக்கு அர்த்தத்தை தேட, தனக்கென ஒரு உறவை சாவு வரும் வரை உருவாக்கிக் கொள்ள மற்றும் தங்களின் சாயலை இந்த மண்ணில் விட்டுச் செல்ல தான். இந்த விஷயங்களுள் தம்பதியரின் மிக முக்கிய ஆசையாக இருப்பது தங்களின் சாயலை பெற்று எடுத்து, அது பெரும் புகழும் வாழ, தங்கள் வளர்ப்பு அர்த்தமானதாக அமைய வேண்டும் என்பது தான்.

Fertility Awareness: Natural Family Planning

இதில் சாயல் என்று குறிப்பிட்டதை அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர் என்று நம்புகிறோம்; சாயல் என்று குறிப்பிட்டது குழந்தையை தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆசையின் எல்லை!

ஆசையின் எல்லை!

இப்படி தம்பதியரின் கனவான குழந்தையை ஒரு கால கட்டத்தில் தம்பதியர் வேண்டாம் என்று நிறுத்தி வைக்க, குழந்தை உருவாகாமல் தடுக்க, உருவான குழந்தையை அழிக்க என பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தம்பதியரின் மிக முக்கியமான ஆசைக்கே ஒரு எல்லை விதிப்பதற்கு வாழ்வில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் காரணங்களாக விளங்குகின்றன.

இந்த காரணங்களுள் முக்கியமாக குழந்தை போதும் என்ற நிலையை எட்டுதல். தவறான நேரத்தில் உருவாகும் குழந்தை அல்லது எதிர்பாராத நேரத்தில் உருவாகும் குழந்தை போன்றவை விளங்குகின்றன.

விரும்பத்தகாத கருவுறுதல்!

விரும்பத்தகாத கருவுறுதல்!

இந்த காரணங்களால் ஏற்படும் கருவுறுதலை தம்பதியர் விரும்புவதில்லை. ஆகையால் இந்த வகையில் ஏற்படும் தம்பதியருக்கு விருப்பம் இல்லாத கருவுறுதலை தடுக்க பல்வேறு பிறப்புக் கட்டுப்பட்டு சாதனங்களும், கரு உருவான பின் அழிக்க உதவும் பல கருத்தடை சாதனங்களும் சந்தையில் தற்காலத்தில் கிடைக்கின்றன. இருப்பினும் கரு உருவாகிய பின் அழிப்பது ஒரு உயிரை கொள்வதற்கு சமம் என்பதால், உருவாகாமல் தடுப்பதே சிறந்தது.

பாதிப்பில்லாத முறை!

பாதிப்பில்லாத முறை!

இவ்வாறு கரு உருவாகாமல் தடுக்க மேற்கொள்ளப்படும் முறைகள் தம்பதியர் இருவரின் உடல் நிலையையும், முக்கியமாக பெண்ணின் உடல்நிலையை பாதிக்காமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்! அதே போல் கருத்தடையை பயன்படுத்தினாலும் கூட அதையும் பெண்ணின் உடல் நிலையை எந்த விதத்திலும் பாதித்திடாத வகையில், இயற்கை முறையில் பயன்படுத்துவது நல்லது.

இந்த பதிப்பில் இயற்கை முறையில் பிறப்பு கட்டுப்பாட்டை அதாவது குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முறையை குறித்து படித்து அறியலாம்.

இயற்கை முறை கட்டுப்பாடு!

இயற்கை முறை கட்டுப்பாடு!

இயற்கை முறை கட்டுப்பாடு என்பது எந்த வித மாத்திரை, ஊசி மற்றும் மருந்துகளின் உதவி இன்றி எவ்வித வீடு வைத்திய முறைகளை கூட கையாளாமல் குழந்தைப் பிறப்பை தடுப்பது அல்லது கட்டுப்படுத்துவது ஆகும். இந்த முறையில் பெண்ணின் மாதவிடாய் சுழற்சி தான் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இந்த முறை முழுக்க முழுக்க பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை சார்ந்து அமையும் ஒரு முறை ஆகும்.

இந்த இயற்கை முறை குடும்பக் கட்டுப்பாட்டினை ரிதம் முறை குடும்பக் கட்டுப்பாடு என்றும் அழைப்பர்.

மாதவிடாய் சுழற்சியின் முக்கியத்துவம்!

மாதவிடாய் சுழற்சியின் முக்கியத்துவம்!

பெண்களில் கருத்தரிப்பு நிகழ்வதும் கருத்தடை ஏற்படுவதும் மாதவிடாய் சுழற்சியை அடிப்படையாய் கொண்டு தான். பெண்ணில் நடைபெறும் மாதவிடாய் சுழற்சி தான் கருவை ஆக்கவும் அழிக்கவும் கூடிய மிக முக்கியமான ஆயுதம் ஆகும். மாதவிடாய் சுழற்சியின் நாட்களை கணக்கிட்டு தான் பெண்களின் உடலில் கருத்தரிப்பு நிகழ்கிறது; மாதவிடாய் நாட்களை கணக்கிட்டு சரியான காலகட்டத்தின் பொழுது உடலுறவு கொண்டால், எளிதில் குழந்தை பிறப்பை அடைய முடியும்.

அதே போல், மாதவிடாய் சுழற்சி நாட்களை கணக்கிட்டு, சரியான தருணத்தில் கலவியில் ஈடுபடாமல் கட்டுப்பாட்டுடன் இருந்தால், எளிதில் பிறப்புக் கட்டுப்பாடு அதாவது குடும்பக் கட்டுப்பாட்டினை அடைய முடியும்.

எப்படி செயல்படுத்துவது?

எப்படி செயல்படுத்துவது?

இந்த இயற்கை முறை குடும்பக் கட்டுப்பாட்டினை சாதிக்க, ஒவ்வொரு மாதமும் பெண்ணின் உடலில் தவறாமல் மாதவிடாய் நிகழ்கிறதா என்று கவனித்து வருதல் அவசியம். மாதவிடாய் ஏற்படும் நாளை முதல் நாள் என்று கணக்கில் கொண்டு, அந்த முதல் நாளில் இருந்து மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரை அதாவது மாதவிடாய் முடியும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

அண்டத்தின் காத்திருப்பு!

அண்டத்தின் காத்திருப்பு!

மாதவிடாய் முடிந்த பின் முதல் நாளின் கணக்கில் இருந்து 11-21 நாட்கள் வரையிலான கால கட்டத்தில் பெண்ணின் உடலில் கருவுறுத்தலுக்கான ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் பெண்ணின் அண்டம் விந்துவிற்காக தயாராதல் போன்ற செயல்பாடுகள் நடைபெறும். அந்த சமயத்தில் நீங்கள் கலவியில் ஈடுபட்டுக் கொள்ளலாம்; ஆனால் கடைசி ஐந்து நாட்களை தவிர்ப்பது நல்லது. பின் 21 ஆம் நாளுக்கு பின்னான 12-24 மணி நேரங்களில் பெண்ணின் அண்டம் கருப்பைக்கு அருகில் ஆணின் விந்துவிற்காக காத்து நிற்கும்.

எளிதான முறை!

எளிதான முறை!

அந்த சமயத்தில் கலவி மூலம் விந்து உட்புகவில்லை எனில், காத்து நின்ற கரு உதிரமாக மாதவிடாய் சுழற்சியின் மூலம் வெளியேற்றப்படும். இதே போல் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்களை கணக்கில் கொண்டு, கூறிய செயல் முறையின் படி செயல்பட்டால், எந்த ஒரு ஊசி, மருந்து, மாத்திரை மற்றும் அறுவை சிகிச்சை இன்றி எளிதாக குடும்பக் கட்டுப்பாட்டினை அடைய முடியும்.

சரியாக பயனளிக்குமா?

சரியாக பயனளிக்குமா?

மாதவிடாய் சுழற்சியின் சரியாக கணக்கிட்டு மேற்படி கூறிய நாட்களில் சரியாக செயல்பட்டால் இந்த 100 சதவீதம் பலன் அளிக்கும். மேலும் இது உடல் நலத்தை எந்த விதத்திலும் பாதிக்காது. இந்த முறையில் கூறிய படி மாதவிடாய் நாட்களை கவனிக்க தவறி, சரியான நாட்களில் சரியாக ஈடுபடாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால் கூட மாதத்தின் முடிவில் மாதவிடாய் ஏற்படுகிறதா இல்லையா என்பதை பொறுத்து, வீட்டு வைத்திய முறையில் பப்பாளி போன்ற பலன்களை உண்டே கரு உருவாதலை எளிதில் தடுத்து விடலாம்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fertility Awareness: Natural Family Planning

Fertility Awareness: Natural Family Planning
Desktop Bottom Promotion