Just In
- 27 min ago கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- 1 hr ago ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- 2 hrs ago Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- 3 hrs ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
Don't Miss
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Movies கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
- News மதம் Vs மக்கள் திட்டங்கள்: பாஜகவின் கடலோர கர்நாடகா கோட்டையின் 3 தொகுதிகளை வேட்டையாடுமா காங்கிரஸ்?
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாய்ப்பால் கொடுப்பது குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
உங்களுக்கு சமீபத்தில் தான் பிரசவம் நடந்ததா? அப்படியெனில் உங்கள் மனதில் பல கேள்விகள் எழும். அவை அனைத்திற்கும் பதிலை யாரிடம் கேட்பது என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அத்தகைய தாய்மார்களுக்காக ஒருசில கேள்விகளுக்கான பதிலை விளக்கமாக கொடுத்துள்ளது.
அதில் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும், எத்தனை வயது வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது பற்றியும், தாய்ப்பாலின் ஆரோக்கிய நன்மைகளையும் மற்றும் பல கேள்விகளுக்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்ப்போமா!!!
தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்கொள்ள வேண்டிய டயட்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சரிவிகித டயட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் ஒரு நாளைக்கு 550 கலோரிகள் அதிகமாகவும், 25 கி புரோட்டீனையும் தவறாமல் எடுக்க வேண்டும். ஆனால் எளிதில் செரிமானமாகாத உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது. மெதுவாகவும் அதே நேரம் சரியான நேரத்திலும் உணவை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக புதிய தாய்மார்கள் காப்ஃபைன் உள்ள பொருட்களை அதிகம் எடுக்கக் கூடாது.
சில பெண்களுக்கு ஏன் போதிய தாய்ப்பால் சுரப்பதில்லை?
தாய்ப்பால் போதிய அளவில் சுரக்காமல் இருக்காது. அப்படியே சுரக்காமல் இருந்தால், அது அந்த தாயின் உடலில் உள்ள சுரப்பிகளில் பிரச்சனை இருந்தால் தான் ஏற்படும். பொதுவாக பெண்களுக்கு எவ்வளவு பால் சுரக்கிறதோ அதுவே அந்த குழந்தைக்கு போதுமானதாக இருக்கும்.
தாய்ப்பால் கொடுப்பதற்கு எந்த நிலை சிறந்தது?
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது மேற்கொள்ளும் நிலை மிகவும் முக்கியமானது. அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் போது பெண்கள் மிகவும் ரிலாக்ஸாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும். அதற்கு முதுகிற்கு பின்புறம் 2 தலையணைகளை வைத்துக் கொண்டு, ஒரு தலையணையை மடியில் வைத்து, குழந்தையை தலையணையின் மேல் வைத்துக் கொண்டு, கையால் குழந்தையை சரியாக பிடித்துக் கொண்டு, குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். முக்கியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையும் தாயும் கண்களால் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தாய் குழந்தையை நன்கு அரவணைத்து இருக்க வேண்டும். ஒருவேளை சரியான நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காவிட்டால், அது மார்பக காம்புகளில் புண் அல்லது வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும். பின் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் கொடுக்கலாம்?
ஆரம்பத்தில் குழந்தையின் செய்கைகளைக் கொண்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதில் அழுதாலோ, வாயை சப்பியவாறு இருந்தாலோ அல்லது கண்களின் அசைவு அதிகமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இப்படி பார்த்தால், குழந்தைக்கு ஒரு நாளைக்கு 8-10 முறை, 3-4 மணிநேரத்திற்கு ஒருமுறை கொடுக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இரவு நேரத்தில் தாய்ப்பால் அதிகம் சுரக்கக்கூடியதால், இரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இந்நேரத்தில் குழந்தையின் பசியை அழுகையைக் கொண்டு அறியலாம்.
எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம்?
முன்பெல்லாம் 4 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டி பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்கள் வரை மட்டும் தாய்ப்பால் கொடுத்து பின் நிறுத்தியதால், பல குழந்தைகள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு உட்பட்டனர். ஆகவே இதனை கருத்தில் கொண்டு, 2001 இல் உலக சுகாதார நிறுவனம், பெண்கள் குறைந்தது 6 மாத காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் 6 மாதங்களுக்குப் பின் குழந்தை உணவுகள், தயிர் மற்றும் வாழைப்பழத்தைக் கொடுக்க சொல்லியது. ஆனால் அதே சமயம் தாய்ப்பால் கொடுப்பதை நறுத்தக்கூடாது. மொத்தத்தில் எவ்வளவு வயது வரை உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அதனைப் பொறுத்து குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. ஆகவே உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.