Latest Updates
-
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது! -
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
ஒரு மணி நேர இடைவெளியில் 6 குழந்தைகள் பெற்றெடுத்த பாகிஸ்தான் பெண்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
ஒவ்வொரு குழந்தையுமே ஒரு அதிசயம்தான், ஆனால் சில அரிதான சந்தர்ப்பங்களில் குழந்தை பிறப்பே அதிசயசமாக மாறுகிறது. அப்படி ஒரு அதிசயம்தான் சமீபத்தில் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனையில் ஒரு மணி நேரத்தில் ஆறு குழந்தைகளை பிரசவித்த அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது. டான் அறிக்கையின்படி, ஜீனத் வஹீத் ஏப்ரல் 19 அன்று ஒரு மணி நேரத்திற்குள் ஆண் குழந்தைகள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் என செக்ஸ்டுப்லெட்டுகளைப் பெற்றெடுத்துள்ளார்.

பிரசவ வலி காரணமாக வஹீத் கடந்த வியாழக்கிழமை மாலை (ஏப்ரல் 18) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவர் வெற்றிகரமாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
தாயும் அவருக்கு பிறந்த ஆறு குழந்தைகளும் எவ்வித பாதிப்பும் இன்றி நலமுடன் இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். கைக்குழந்தைகள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன, ஒவ்வொரு குழந்தையும் இரண்டு பவுண்டுகளுக்கும் குறைவான எடையுடன் பிறந்திருக்கிறார்கள்.
"புதிதாக பிறந்த ஆறு குழந்தைகளும் அவர்களின் தாயும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர், இருப்பினும் மருத்துவர்கள் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்துள்ளனர்,'' என மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஃபர்சானா பேட்டியில் தெரிவித்தார்.
செக்ஸ்டுப்லெட்ஸ் பிறந்தது குறித்து மருத்துவமனை ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மற்றும் அவர்கள் தங்கியிருந்த காலத்தில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ பராமரிப்பு மற்றும் வசதிகள் கிடைத்ததை உறுதியளித்தனர்.
" குழந்தைகள் வீட்டிற்குச் செல்லத் தயாராகும் வரை மருத்துவமனையின் குழந்தைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி, தொடர்ந்து அங்கு மருத்துவ கவனிப்பைப் பெறுவார்கள்" என்றும் கூறியுள்ளார்கள்.
மிகவும் அரிதான நிகழ்வு
ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறப்பது மிகவும் அசாதாரணமான நிகழ்வாகும், அதிலும் sextuplets ஒரு மிகவும் அரிதான நிகழ்வாகும், ஒவ்வொரு 4.5 மில்லியன் கர்ப்பங்களில் ஒரு முறை மட்டுமே இந்த அரிதான நிகழ்வு ஏற்படுகிறது.
ஒரு பெண் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களை சுமக்கும் பல கர்ப்பங்கள், கருவுற்ற முட்டை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு பிளவுபடும் போது (இதன் விளைவாக ஒரே மாதிரியான இரட்டையர்கள்) அல்லது வெவ்வேறு விந்தணுக்களால் (சகோதர இரட்டையர்களுக்கு வழிவகுக்கும்) தனித்தனி முட்டைகள் கருவுற்றால் ஏற்படும் என்று க்ளீவ்லேண்ட் கிளினிக் கூறுகிறது.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருக்கள் கொண்ட கர்ப்பங்கள் விதிவிலக்காக அசாதாரணமானவை மற்றும் ஒற்றைக் கர்ப்பத்துடன் ஒப்பிடும்போது இந்த வகை கர்ப்பங்கள் அதிக சிக்கல்களையும், ஆபத்தையும் கொண்டுள்ளன.
இருப்பினும், ஐவிஎஃப் (விட்ரோ கருத்தரித்தல்) மற்றும் கருவுறுதல் மருந்துகள் போன்ற கருவுறுதல் சிகிச்சைகள் அதிகரித்து வருவதால், சமீபத்திய ஆண்டுகளில் பல பிறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சிகிச்சைகள் கருப்பைகள் அதிக முட்டைகளை வெளியிட தூண்டுவதன் மூலம் ஒரே நேரத்தில் பல கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. 1974 இல் தென்னாப்பிரிக்காவில் முதல் அறியப்பட்ட sextuplets பிறந்தார்கள்.



Click it and Unblock the Notifications
