Latest Updates
-
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்!
உங்க குழந்தை தொட்டதுக்கு எல்லாம் அழுவுதா? பயப்படுதா? அப்படினா... நீங்க இத செய்யுங்க...!
உலகின் யதார்த்தங்களை அவர்களுக்கு உணர்த்துவதோடு, எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்துகையில், அவர்களிடம் இரக்கமாகவும் இருங்கள்.
யாரும் பாதுகாப்பற்றவர்களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ பிறப்பதில்லை. நிராகரிப்பு, விமர்சனங்கள், அநாகரிகமான வார்த்தைகள் நடத்தைகள் ஒரு நபருக்கு கிடைக்கும்போது, அவர்கள் தங்களை குறைவாக உணர அல்லது சிந்திக்க வழிவகுக்கிறது. இதனால் குழந்தைகளும் சுயமரியாதையை இழந்து பாதுகாப்பற்றவர்களாக மாறும் நிகழ்வுகளுக்கு ஆளாகலாம். அதாவது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக எப்போதும் இருக்க வேண்டும், அவர்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும், அவர்களை உயர்த்தவும், அவர்களை மேலும் விரும்புவதாகவும், அதிக அன்பு கொண்டவர்களாகவும் உணர வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்வது, அவர்கள் எவ்வளவு பிடிவாதமாக இருந்தாலும், சமாதானப்படுத்த முடியாவிட்டாலும், உங்கள் பாதுகாப்பற்ற குழந்தைக்கு உதவவும். வாழ்க்கையில் நம்பிக்கையை அதிகரிக்க நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

காரணத்தை கண்டறியவும்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற குழந்தையாக இருந்தால், அது மிகவும் அவசியமானதாகிறது. நீங்கள் உரையாடல்களை நடத்தினால் மட்டுமே அவர்களின் பாதுகாப்பின்மையின் மூலத்தைக் கண்டறிய முடியும். நீங்கள் அதைச் செய்தவுடன், நீங்கள் அவர்களுக்கு உதவவும், அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தவும், மேலும் அதிக நம்பிக்கையுடனும், மேம்படுத்தப்பட்டதாகவும், குறைவான பாதுகாப்பற்றதாகவும் உணர பல்வேறு வழிகளை நீங்கள் செய்யலாம்.

தங்களை நேசிக்க கற்றுக்கொடுங்கள்
உங்கள் பிள்ளை எத்தனை தவறுகளைச் செய்தாலும், அந்தச் செயல்பாட்டின் மூலம் அவர்களை வழிநடத்தி, அந்த ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் அவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லுங்கள். அவர்கள் தன்னம்பிக்கை இழந்து மற்றும் குற்ற உணர்விற்கு ஆளாக்க வேண்டாம். இது அவர்களின் பாதுகாப்பின்மைக்கு பங்களிக்கும். தங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள் மற்றும் மக்களின் விமர்சனங்கள், எதிர்மறை உணர்ச்சிகள் மற்றும் கருத்துகள் அவர்களுக்கு வர விடாதீர்கள்.

சமூக ஊடக நகர்வுகளை கண்காணிக்கவும்
டிஜிட்டல் உலகம் நம் வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளதால், உங்கள் குழந்தையின் பாதுகாப்பின்மைக்கு சமூக ஊடக தளங்கள் ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்கலாம். விமர்சனக் கருத்துகள், எதிர்மறை தீர்ப்புகள் அல்லது ட்ரோல்கள் போன்றவற்றில் உங்கள் குழந்தை பாதிக்கப்படலாம். அவர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், அவர்களின் இடத்தை சீர்குலைக்காதீர்கள் மற்றும் அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாதீர்கள்.

அன்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
ஒரு நல்ல பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அன்பாக இருப்பதற்கும், நிபந்தனையற்ற அன்பைக் காட்டுவதற்கும் நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் எப்படி வெல்வீர்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பற்ற குழந்தை என்று வரும்போது, அவர்களை விமர்சிப்பது மற்றும் அவர்களின் எல்லா முயற்சிகளுக்கும் அவர்களை நச்சரிப்பது அவர்களின் மனதில் அதிக சுமையை ஏற்படுத்துகிறது. இது, பெற்றோர்கள் கையாளும் சரியான வழி அல்ல. பெற்றோர்கள் மோசமான வழிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் முயற்சிகளை அங்கீகரித்து அவர்களை சிறந்தவர்களாக மாற்றுங்கள்.

வீட்டில் பாதுகாப்பான, அன்பான இடத்தை உருவாக்குங்கள்
உங்கள் குழந்தையின் பாதுகாப்பற்ற தன்மையை சமாளிக்க சிறந்த வழி, வீட்டில் அவர்களுக்கு பாதுகாப்பான, பாசமுள்ள இடத்தை உருவாக்குவதுதான். ஒரு பெற்றோராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களால் அவர்களைச் சுமக்காதீர்கள், மாறாக எல்லா எதிர்மறை ஆற்றலிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றுங்கள். உலகின் யதார்த்தங்களை அவர்களுக்கு உணர்த்துவதோடு, எதிர்கால போட்டிகளுக்கு அவர்களை தயார்படுத்துகையில், அவர்களிடம் இரக்கமாகவும் இருங்கள்.



Click it and Unblock the Notifications