பெற்றோர்களே! உங்க குழந்தைங்க இரண்டு பேரும் எப்பவும் சண்டை போடுறாங்களா? அப்ப நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?

உங்கள் குழந்தைகள் இருவரும் உடல் ரீதியாக சண்டை போடும்போது பெற்றோர்கள் ஈடுபட வேண்டும். உண்மையில், விஷயங்கள் அதிகரிக்கும் முன் தலையிடுவது நல்லது

உங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒன்றாக விளையாடும் போது, ஒன்றாகப் படிக்கும் போது அல்லது ஒன்றாக உறங்கும் போது அவர்கள் மிகவும் அபிமானமாக இருப்பார்கள். இருப்பினும், எந்த பெற்றோரும் பார்க்க விரும்பாத ஒரு பயங்கரமான தருணம், தங்கள் குழந்தைகள் சண்டையில் ஈடுபடுவது. உங்கள் குழந்தைகள் எவ்வளவு நன்றாகப் பிணைந்திருந்தாலும், எந்தவொரு உறவிலும், ஆரோக்கியமான உறவுகளில் கூட, மோதல்கள் அல்லது சண்டைகள் இருப்பது ஒரு இயல்பான பகுதியாகும். உடன்பிறந்தவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதெல்லாம் ஒன்று சேர்ந்து தீர்வு காண்பதுதான்.
ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தைகள் சண்டையிடத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தலையிட்டால், மோதல்களைத் தாங்களாகவே கையாளும் வகையில் அவர்களின் பரஸ்பர வளர்ச்சியைத் தடுக்கலாம்.

how-much-should-parents-intervene-when-siblings-fight-in-tamil

இருப்பினும், உங்கள் குழந்தைகள் சிறியவர்களாகவும், இன்னும் கற்றுக்கொண்டும் வளர்த்துக்கொண்டும் இருந்தால், அவர்கள் எல்லா கடினமான சூழ்நிலைகளையும் கையாள முடியும் என்று எதிர்பார்ப்பது நல்லதல்ல. எனவே, உங்கள் குழந்தைகளின் சண்டையில் நீங்கள் தலையிட வேண்டுமா? இல்லையா? ஆம் எனில், எப்போது தலையிட வேண்டும்? என்று தெரிந்துகொள்ள இக்கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதிர்பார்ப்புகளை குறைக்கவும்

எதிர்பார்ப்புகளை குறைக்கவும்

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளின் மோதல்களைத் தீர்க்க, நீங்கள் முதலில் உங்கள் பொறுமையின் அளவை அதிகரிக்க வேண்டும் மற்றும் உங்கள் எதிர்பார்ப்புகளின் அளவைக் குறைக்க வேண்டும். உடன்பிறந்தவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால், அவர்கள் அடிக்கடி சண்டை இட்டுக்கொள்வது நல்லதல்ல. பெற்றோர் ஆகிய நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல், ஒவ்வொரு சிறிய வாதத்தின் தொடக்கத்திலும் உங்கள் குழந்தைகள் இருவரையும் கட்டுப்படுத்த வேண்டும். குழந்தைகளிடையே விட்டுக்கொடுக்கும் பண்பை வளர்க்க வேண்டும்.

எப்படி நிறுத்துவது என்று கற்றுக் கொடுங்கள்?

எப்படி நிறுத்துவது என்று கற்றுக் கொடுங்கள்?

பிரச்சனையை உங்கள் குழந்தைகளையே கையாளச் சொல்வதற்கு முன், அதைச் செய்வதற்கான திறமை உங்கள் பிள்ளைகளுக்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் எப்படிக் கேட்பது மற்றும் புரிந்துகொள்வது என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் கற்றுக்கொடுங்கள். சூழ்நிலையால் வாக்குவாதம் அதிகமாகிவிடாமல், விஷயங்கள் சூடுபிடிக்கும்போது எப்போது நிறுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவரை மட்டுமே குறை கூற வேண்டாம்

ஒருவரை மட்டுமே குறை கூற வேண்டாம்

பெரும்பாலும், பெற்றோர்கள் மூத்த பிள்ளையையே திட்டுகிறார்கள். வயதில் மூத்த பிள்ளை அனுசரித்து, உடன் பிறந்தவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால், ஆதிக்கம் செலுத்தவும் சண்டை அதிகரிக்கவும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே குறை கூறுவதும், மற்றொரு குழந்தையை ஒன்றும் சொல்லமால் இருப்பது நல்லதல்ல. இதனால், உங்கள் குழந்தை உங்களை விட்டு விலக வாய்ப்புள்ளது. அதனால்தான் விஷயங்கள் மோசமாக இல்லாவிட்டால், உங்கள் பிள்ளைகள் மோதல்களைத் தாங்களாகவே கையாளட்டும்.

எப்போது தலையிட வேண்டும்?

எப்போது தலையிட வேண்டும்?

உங்கள் குழந்தைகள் இருவரும் உடல் ரீதியாக சண்டை போடும்போது பெற்றோர்கள் ஈடுபட வேண்டும். உண்மையில், விஷயங்கள் அதிகரிக்கும் முன் தலையிடுவது நல்லது. உடல் ரீதியான சண்டைகளை உடனடியாக நிறுத்துவதுடன், ஒரு குழந்தை தனது வார்த்தைகளால் மற்றவரை காயப்படுத்தினலோ அல்லது அவமானப்படுத்தினால், நீங்கள் உடனடியாக தலையிட வேண்டும்.

ஒன்றாக முடிவெடுக்கும்போது பாராட்டுங்கள்

ஒன்றாக முடிவெடுக்கும்போது பாராட்டுங்கள்

குழந்தைகள் அதிகமாக கோபப்படும்போது பெரும்பாலான பெற்றோர்கள் விரைவாகக் கண்டிக்கிறார்கள். இருப்பினும், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளை மிகவும் சாதகமாகச் செயல்பட ஊக்குவிக்க நீங்கள் அவர்களின் நல்ல பகுதியிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைகள் தாங்களாகவே அமைதியான தீர்வுக்கு வரும்போது, அவர்களைப் பாராட்டுவதை உறுதிசெய்யுங்கள். அவர்கள் எப்படி எப்போதும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion