Latest Updates
-
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்..
வேலைக்குப் போகும் பெற்றோரா? குழந்தைகளை கொஞ்சம் கவனிங்க!

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் முதலில் எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும்தான் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். காலையில் அவர்களுடன் செலவிடும் சில மணிநேரங்கள் குழந்தைகளுக்காக என்பதை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான விசயங்களை அக்கறையுடன் செய்யவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது எதையும் தேடி டென்சன் ஆவதை விட முதல்நாள் இரவே எதையும் திட்டமிட்டு எடுத்துவைத்துவிட்டால் குழந்தைகளுடனான நேரம் மகிழ்ச்சியாக கழியும்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த உடன் குழந்தைகள் நம்முடன் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நமக்கோ வீட்டு வேலைகள் சரியாக இருக்கும். துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, சமையல் செய்வது என வேலையில் நுழைந்து விடுவோம். இதனால் குழந்தைகளின் பூப்போன்ற முகம் வாடிப்போகும். எனவே குழந்தைகளையும் நம்முடன் வேலையில் பங்கெடுத்துக்கச் சொல்லாம். இதனால் அவர்கள் நம்முடன் பேசியது போல ஆயிற்று அவர்களும், வேலையை கற்றுக்கொண்டது போலவும் ஆயிற்று. குழந்தைகள் பெற்றோரை மிஸ் செய்யமாட்டார்கள்.
பள்ளியிலும் வீட்டிற்குள்ளேயும் அடைந்து கிடைக்கும் குழந்தைகளை அவ்வப்போது வெளியில் அழைத்துச்செல்லுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் உற்சாகமாக விளையாடுவார்கள். பெற்றோர்கள் நம்முடன் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும். வாரம் ஒருமுறை ஷாப்பிங், மாதம் ஒரு முறை சினிமா, பீச், பார்க் என்று வெளியே சென்று வந்தால் அவர்களுக்கு பெற்றோர்களுடனான ஒட்டுதல் அதிகரிக்கும். இது போன்ற சின்ன சின்ன விசயங்கள்தான் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உயிரோட்டமான உறவினை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன்.



Click it and Unblock the Notifications