Latest Updates
-
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க..
வேலைக்குப் போகும் பெற்றோரா? குழந்தைகளை கொஞ்சம் கவனிங்க!

பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகள் முதலில் எதிர்பார்ப்பது அன்பும், அரவணைப்பும்தான் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். காலையில் அவர்களுடன் செலவிடும் சில மணிநேரங்கள் குழந்தைகளுக்காக என்பதை மனதில் கொண்டு அவர்களுக்குத் தேவையான விசயங்களை அக்கறையுடன் செய்யவேண்டும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது எதையும் தேடி டென்சன் ஆவதை விட முதல்நாள் இரவே எதையும் திட்டமிட்டு எடுத்துவைத்துவிட்டால் குழந்தைகளுடனான நேரம் மகிழ்ச்சியாக கழியும்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த உடன் குழந்தைகள் நம்முடன் விளையாட வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் நமக்கோ வீட்டு வேலைகள் சரியாக இருக்கும். துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது, சமையல் செய்வது என வேலையில் நுழைந்து விடுவோம். இதனால் குழந்தைகளின் பூப்போன்ற முகம் வாடிப்போகும். எனவே குழந்தைகளையும் நம்முடன் வேலையில் பங்கெடுத்துக்கச் சொல்லாம். இதனால் அவர்கள் நம்முடன் பேசியது போல ஆயிற்று அவர்களும், வேலையை கற்றுக்கொண்டது போலவும் ஆயிற்று. குழந்தைகள் பெற்றோரை மிஸ் செய்யமாட்டார்கள்.
பள்ளியிலும் வீட்டிற்குள்ளேயும் அடைந்து கிடைக்கும் குழந்தைகளை அவ்வப்போது வெளியில் அழைத்துச்செல்லுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் உற்சாகமாக விளையாடுவார்கள். பெற்றோர்கள் நம்முடன் நேரத்தை செலவிடுகின்றனர் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும். வாரம் ஒருமுறை ஷாப்பிங், மாதம் ஒரு முறை சினிமா, பீச், பார்க் என்று வெளியே சென்று வந்தால் அவர்களுக்கு பெற்றோர்களுடனான ஒட்டுதல் அதிகரிக்கும். இது போன்ற சின்ன சின்ன விசயங்கள்தான் வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையேயான உயிரோட்டமான உறவினை தக்கவைக்கும் என்கின்றனர் நிபுணர்கள் பின்பற்றிப் பாருங்களேன்.



Click it and Unblock the Notifications











