Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
குழந்தையின் கண்கள் ஒளிருதா? கவனிங்க!

ஒளிரும் கண்கள்
கண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கருவிழியில் வெள்ளை படலம் படர்ந்து, இரவில் மிருகங்களின் கண்கள் ஒளிர்வது போல் இருக்கும். மாறுகண் பாதிப்பு இருப்பது போல் தோற்றமளிக்கும். சில குழந்தைகளுக்கு கண்கள் சிவப்பாக இருக்கும்.
கண்களில் வலி ஏற்படும், கண்ணின் பாவை பல நிறங்களாக மாறும்.
கண்களில் வரும் இந்த புற்றுநோய் மிகவும் ஆபத்தானது. இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் கண்பார்வை முற்றிலும் இழக்க நேரிடும். புற்றுநோயானது முகம் முழுவதும் பரவி அது மற்ற உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே இந்த அறிகுறிகள் தென்பட்ட உடனே கண்மருத்துவர்களை அணுகவேண்டும் என்பது அவர்களின் அறிவுரையாகும். மேலும் மூன்று வழிமுறைகளில் இதனை குணப்படுத்தலாம் எனவும் கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண் பார்வை இழப்பு
அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவது. இதனால் சில சமயம் கண்பார்வை இழக்கும் அபாயம் உள்ளது.
இன்ட்ரா எட்ரியல் கீமோதெரபி
இன்ட்ரா கீமோதெரபியில், லேசர் கதிர்களை கண்களுக்கு வெளியே செலுத்தப்படுகிறது. இது புற்றுநோய் கட்டியில் ஊடுருவி சென்று அதனை அழிக்கும். கண்பார்வைக்கு பாதிப்பு இல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.
கண்களுக்கு மேல் சின்ன வட்டமான பிளேட் வைத்து அதன் வழியாக கண்களுக்கு லேசர் கதிர்களை செலுத்தும் முறைக்கு பிராகி தெரபி. இது புற்றுநோய் கட்டியை மட்டும் தாக்கும். முகத்தில் மற்ற பாகங்களை பாதிக்காது. அதே சமயம் கண் பார்வையும் காப்பாற்ற முடியும்.
பெரியவர்களையும் பாதிக்கும்
இந்த நோய் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் பாதிக்கும். பெரியவர் களை பொறுத்தவரை, நாற்பது வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படும். மெலனாமா புற்றுநோய் என்று அழைக்கப்படும் இந்த நோயின் பாதிப்பு கருவிழி முழுதும் வெள்ளை படலம் படர்ந்து இருக்கும்.
பார்வை குறைவது மட்டும் இல்லாமல் பக்கவாட்டில் உள்ள பொருட்களைப் பார்க்கும் திறனும் குறையும். இவர்களுக்கு பிராகி தெரபி சிகிச்சை மூலம் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்றார்.



Click it and Unblock the Notifications











