Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
குழந்தைங்க வெடி வைக்கும் போது பத்திரமாக பாத்துக்கோங்க...

பட்டாசு வெடிக்கும் போது இருக்க வேண்டியவை....
* குழந்தைகள் பட்டாசு வைக்க போகும் போது, அவர்களை மறக்காமல் செருப்புகளை அணிந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் கால்களில் தீக்காயங்கள் ஏற்படும்.
* வெடி வைக்கும் போது குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிலும் சங்கு சக்கரம் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* கம்பி மத்தாப்பு விட்டதும், அதனை அப்படியே கீழே போட்டு விடாமல், அருகில் ஒரு வாளி நீரை வைத்து, அதில் அந்த கம்பிகளை போட்டால், அங்கும் இங்கும் ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* குழந்தைகள் வெடி வைக்க நினைக்கும் போது, அவர்கள் பக்கத்திலேயே பெற்றோர்கள் இருக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு நீளமான ஊதுபத்திகளை கொடுத்து, வெடிக்க வைக்க வேண்டும்.
* முக்கியமாக பூத்தொட்டி வைக்கும் போது, அவர்களை உட்கார்ந்து வைக்கவிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பயந்து கொண்டு வெடி வைக்கும் போது, என்ன தான் பெற்றோர்கள் அருகில் இருந்தாலும், அவர்கள் தவறி கீழே விழந்துவிடுவார்கள்.
* குழந்தைகள் பட்டாசு வைக்கும் போது அவர்களை பயமுறுத்த வேண்டாம். பின் அதுவே அவர்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்திவிட்டு, காயத்தையும் ஏற்படுத்தும்.
* மேலும் வெடி வெடிக்கும் போது, அதனை உற்று பார்க்க வைக்காதீர்கள். ஏனெனில் சில வெடிகளிலிருந்து வரும் தீத்துகள்கள், அவர்களின் கண்களில் பட்டு, பின் அது அவர்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பார்வையே போய்விடும்.
* வெடி வெடிக்கும் போது, குழந்தைகளை எந்த ஒரு உணவையும் கைக் கழுவாமல் சாப்பிட விடாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்...
* கண்களில் தீத்துகள்கள் பட்டால், உடனே தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அதிலும் கண்களில் எரிச்சல் போகும் வரை கண்களை கழுவி, பின் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக கண்களை கழுவும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர்ந்த நீர் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
* வெடி வெடிக்கும் போது சிறிய தீக்காயம் ஏற்பட்டால், உடனே வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவினால் சரியாகிவிடும். ஆனால் பெரிய காயம் ஏற்பட்டால், உடனே 108-க்கு போன் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications