Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைங்க வெடி வைக்கும் போது பத்திரமாக பாத்துக்கோங்க...

பட்டாசு வெடிக்கும் போது இருக்க வேண்டியவை....
* குழந்தைகள் பட்டாசு வைக்க போகும் போது, அவர்களை மறக்காமல் செருப்புகளை அணிந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும். இல்லையெனில் அவர்கள் கால்களில் தீக்காயங்கள் ஏற்படும்.
* வெடி வைக்கும் போது குழந்தைகளுக்கு பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. அதிலும் சங்கு சக்கரம் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
* கம்பி மத்தாப்பு விட்டதும், அதனை அப்படியே கீழே போட்டு விடாமல், அருகில் ஒரு வாளி நீரை வைத்து, அதில் அந்த கம்பிகளை போட்டால், அங்கும் இங்கும் ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு தீக்காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
* குழந்தைகள் வெடி வைக்க நினைக்கும் போது, அவர்கள் பக்கத்திலேயே பெற்றோர்கள் இருக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு நீளமான ஊதுபத்திகளை கொடுத்து, வெடிக்க வைக்க வேண்டும்.
* முக்கியமாக பூத்தொட்டி வைக்கும் போது, அவர்களை உட்கார்ந்து வைக்கவிடாதீர்கள். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே பயந்து கொண்டு வெடி வைக்கும் போது, என்ன தான் பெற்றோர்கள் அருகில் இருந்தாலும், அவர்கள் தவறி கீழே விழந்துவிடுவார்கள்.
* குழந்தைகள் பட்டாசு வைக்கும் போது அவர்களை பயமுறுத்த வேண்டாம். பின் அதுவே அவர்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்திவிட்டு, காயத்தையும் ஏற்படுத்தும்.
* மேலும் வெடி வெடிக்கும் போது, அதனை உற்று பார்க்க வைக்காதீர்கள். ஏனெனில் சில வெடிகளிலிருந்து வரும் தீத்துகள்கள், அவர்களின் கண்களில் பட்டு, பின் அது அவர்களது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பார்வையே போய்விடும்.
* வெடி வெடிக்கும் போது, குழந்தைகளை எந்த ஒரு உணவையும் கைக் கழுவாமல் சாப்பிட விடாதீர்கள்.
தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவிகள்...
* கண்களில் தீத்துகள்கள் பட்டால், உடனே தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும். அதிலும் கண்களில் எரிச்சல் போகும் வரை கண்களை கழுவி, பின் மருத்துவரை அணுக வேண்டும். முக்கியமாக கண்களை கழுவும் போது குளிர்ந்த நீரை பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர்ந்த நீர் உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்துவிட்டு, பாதிப்பை ஏற்படுத்தும்.
* வெடி வெடிக்கும் போது சிறிய தீக்காயம் ஏற்பட்டால், உடனே வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவினால் சரியாகிவிடும். ஆனால் பெரிய காயம் ஏற்பட்டால், உடனே 108-க்கு போன் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications











