Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
தாலாட்ட நேரமில்லை: டிவிடியில் பாட்டுப் பாடும் 'மம்மி டாடிகள்'!

கிராமத்து வீடுகளுக்குப் போனால் சுவாரஸ்யமான தாலாட்டுக் காட்சிகளைப் பார்க்கலாம். அம்மா ஏதாவது வேலையாக இருப்பார், அவரது கைக்குழந்தை தூளியில் நெளிந்தபிட அழ ஆரம்பிக்கும். வேலையையும் விட முடியாது, குழந்தையிடமும் போக முடியாது. என்ன செய்வார் அந்த்த தாய்?
தூளியுடன் சேர்த்துக் கட்டியுள்ள கயிற்றை தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே பிடித்து மெதுவாக ஆட்டியபடி தாலாட்டுப் பாடலை எடுத்து விடுவார். ஆராரோ ஆரிராரோ, யாரடிச்சு நீ அழுத, அத்தை அடிச்சாரா அரளிப் பூ செண்டாலே, மாமன் அடிச்சாரோ மல்லிப் பூ செண்டாலே என்று அவர் குரல் எடுத்துப் பாடும் போது அதை மெய் மறந்து கேட்டபடி குழந்தை மீண்டும் கண்மூடித் தூங்க ஆரம்பிக்கும்.
நகர்ப்புறங்களில் இந்த மாதிரியான பாடல்களை இப்போது கேட்கவே முடிவதில்லை. பெண்களுக்குக் குரல் வளமோ, பாடல் அறிவோ இல்லை என்று அர்த்தம் இல்லை. அவர்களுக்கு இந்தப் பாட்டெல்லாம் இப்போது தெரிவதில்லை, தெரிந்தாலும் கூட பாடுதவற்கு நேரமில்லை.
இன்றைய காலகட்டத்தில் கணவனும், மனைவியும் வேலைக்குப் போனால் தான் வாழ்க்கையை சிரமமின்றி ஓட்ட முடிகிறது. அதனால் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. யாராவது ஒரு ஆயாவிடமோ அல்லது அக்கம் பக்கத்தினரிடமோ, பணத்தைக் கொடுத்து குழந்தையைப் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்கள்.
வேலை முடிந்து வீட்டுக்கு வருகையில் குழந்தையை தூக்கி வரும் தாய் அதை தாலாட்ட நேரமில்லாததால் தொட்டிலில் போட்டு டிவிடியை ஆன் செய்து விடுகிறார். பாட்டி, தாய் ஆகியோரின் தாலாட்டு கேட்டு குழந்தைகள் தூங்கிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது. இப்போது எஸ்.பி.பி., சித்ரா, சுஜாதா ஆகியோர் தான் பல்வேற வீட்டுக் குழந்தைகளுக்கு தாயாக மாறி டிவிடி மூலம் தாலாட்டு பாடி தூங்க வைக்கின்றனர்.
அதிலும் சில குழந்தைகளுக்கு குத்துப் பாட்டு கேட்டால் தான் தூக்கம் வருகிறது. எனவே தனுஷ், விஜய், அஜித்தின் குத்துப்பாட்டு கேட்டுக் கொண்டே தூங்கும் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
நாத்து நட பாட்டு, வேலை செய்ய பாட்டு, நடந்து போக பாட்டு, தூங்க பாட்டு என்று எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் வழக்கம் உள்ள தமிழகத்தில் அந்த வழக்கமெல்லாம் மாறிக்கொண்டிருப்பது வருத்தமான விஷயம்தான்.



Click it and Unblock the Notifications











