Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
பெற்றோர்களே! பருவ மழையால் ஏற்படும் காய்ச்சல் & டைபாய்டு நோய்களிலிருந்து உங்க குழந்தையை எப்படி பாதுகாக்கலாம்?
கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, பருவமழை தொடங்கிவிட்டது. பருவமழை காலநிலை என்பது மிகவும் இனிமையானது. சுடசுட பக்கோடா சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் சரியான நேரம் இது. அத்துடன் பல பருவகால நோய்களும் ஏற்படும் அபாயமும் அதிகம் உள்ளது.
பருவகால நோய்தொற்றுக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். நம் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படத் தொடங்குவதற்கான நேரம் இது. கடுமையான கோடையில் இருந்து இதமான குளிர்ந்த பருவக்காற்றுக்கு சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் நமது மனநிலையில் மாற்றங்களை கொண்டு வருவது மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

எனவே நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதும், காற்று வீசும் பருவமழை மாதங்களில் ஏற்படும் அலை மற்றும் பிற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதும் முக்கியம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது குழந்தைகள், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மழைக்கால நோய்கள் மற்றும் அவற்றின் தடுப்பு
பருவமழை எல்லா மக்களுக்கும் சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை அதிகம் பாதிக்கும் பல நோய்களை இந்த பருவமழை கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டும்.
இல்லையெனில், நோய்கிருமிகள் எளிதில் பரவும் அபாயம் அதிகமாக இருக்கும். சில நோய்கள் மற்றும் அவற்றிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மலேரியா
மலேரியா மற்றும் சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள், மழைக்கால கொசுக்களால் பரவுகின்றன. இந்த நோய் அதிக காய்ச்சல், சொறி, தலைவலி, தசை வலி மற்றும் பிற அசௌகரியங்களுடன் உங்களுக்கு அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே, இந்த நோய்களிலிருந்து உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பாதுகாப்பது முக்கியம்.
உங்கள் குழந்தையின் மீது கொசு விரட்டியை தடவி, கொசுக்களால் கடிக்காதவாறு முழுக் கை ஆடை அணிந்திருப்பதை உறுதிசெய்யவும். வீட்டிற்கு அருகில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
டைபாய்டு
மழைக்காலத்தில் அதிகம் காணப்படும் மற்றொரு நோய் டைபாய்டு. அசுத்தமான நீர் மற்றும் உணவு காரணமாக இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. இது காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
ஹெபடைடிஸ் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அசுத்தமான நீரால் பரவக்கூடிய நோய்கள் நிறைய உள்ளன. இதுபோன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
- சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்கவும்
- சுத்தமான உணவை உண்ணுங்கள்
- தெருக்களில் விற்கப்படும் உணவுகளை தவிர்க்கவும்
- சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை கழுவ வேண்டும்
பூஞ்சை தொற்று
சுற்றுச்சூழலில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக பூஞ்சை தொற்று ஏற்படுகின்றன. உங்கள் குடும்ப உறுப்பினர்கள், இந்த பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், தோலோடு தோல் தொடர்பு கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கு பரவலாம்.
மேலும், சுகாதாரமின்மையாலும் இந்த நோய்த்தொற்றை பெறலாம். சில தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அவை:
- நல்ல சுகாதாரத்தை பேணுதல்
- உங்கள் கைகள், கால்கள், கால்கள், அக்குள்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
- துண்டுகள் மற்றும் சுகாதாரப் பொருட்களை மற்றவருடன் பகிர்வதைத் தவிர்க்கவும்
சாதாரண சளி
பருவமழை தொடங்கியவுடன் நாம் பார்க்கும் பொதுவான நோய் சளி. இது சோர்வு, காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பிற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது ஒரு தொற்று நோய், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும். நீங்கள் எடுக்கக்கூடிய சில தடுப்பு நடவடிக்கைகள் இங்கே:
- அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்
- பொதுவான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்
- தும்மும்போதும் இருமும்போதும் வாயை மூடிக்கொள்ளுங்கள்
- நிறைய திரவங்களை குடிக்க வேண்டும்



Click it and Unblock the Notifications












