Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
பெண்களே! தாய்ப்பாலின் அளவை அதிகரிக்கணுமா? இந்த ஈஸியான வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க...!
பல புதிய தாய்மார்கள் போதுமான அளவு தாய்ப்பால் தங்களுக்கு சுரப்பதில்லை என்று கவலைப்படுகிறார்கள், ஆனால் உங்கள் குழந்தை ஆரோக்கியமாகவும், சிறந்த வளர்ச்சியுடனும் இருக்க, தாய்ப்பால் சுரப்பு போதுமான அளவில் இருக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கு பாலூட்டுவதற்கும் சிறந்த சத்தான, நன்கு சமநிலையான மற்றும் மாறுபட்ட உணவு வகைகளை உண்ண வேண்டியதும் அவசியம்.

கேலக்டாகோக் தாய்ப்பாலின் உற்பத்தியை இயற்கையாக அதிகரிப்பதாக பொதுவாக நம்பப்படும் உணவுகளில் ஒன்று; அவற்றை அவ்வப்போது மிதமாக சிறிதளவில் முயற்சிப்பது நல்லது. ஆனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க மூலிகை சிகிச்சைகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது. தாய்ப்பாலை அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களைப் பார்க்கலாம்.
வெந்தய நீர்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதில் மிகவும் பிரபலமான மூலிகை வெந்தயம் ஆகும், இது பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் பானங்களின் முக்கியமான ஒன்று. மேலும், வெந்தயம் ஒரு துணை உணவாக அல்லது மாத்திரையாக வழங்கப்படுகிறது. ஆசியா மற்றும் மத்திய தரைக்கடலைத் தாயகமாகக் கொண்ட இந்த மூலிகையை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரே இரவில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்கும்.
சோம்பு தேநீர்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் மற்றொரு பாரம்பரிய உணவு பொருள் பெருஞ்சீரகம் ஆகும். குழந்தைக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு மற்றும் வாயுவிலிருந்து அவர்களை பாதுகாக்க உதவுவதற்கு பெருஞ்சீரகம் தாய்மார்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதற்குப் பின் இருக்கும் காரணம் என்னவென்றால், பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை செரிமானத்திற்கு உதவுவதற்கும் வயிற்றுக் கோளாறுகளைத் தணிப்பதற்கும் பயன்படுத்துவது, தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதோடு பிறந்த குழந்தைக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெருஞ்சீரகம் தாய்ப்பாலோடு சேர்த்து கொடுக்கிறது.
இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், பல தாய்மார்கள் பெருஞ்சீரகம் தங்களுக்கு அல்லது தங்கள் குழந்தைக்கு பயனளித்ததாக நம்புகிறார்கள். பிரசவத்திற்குப் பின் வரும் பாரம்பரிய பானங்களில் பெருஞ்சீரக தேநீர் மற்றும் பெருஞ்சீரக நீர் முக்கிய பங்கு வகிக்கிறது.
எள் உருண்டை
கால்சியம் சார்ந்த உணவு ஆதாரங்களில் பால் பொருட்கள் அல்லாத ஒன்று எள் ஆகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் ஒரு அத்தியாவசிய கனிமம். உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி இரண்டும் கால்சியத்தையும் சார்ந்து இருக்கிறது. அதனால் தான் பாலூட்டும் தாய்மார்கள் எள்ளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். கறுப்பு எள், பேரீச்சம்பழம், துருவிய தேங்காய் மற்றும் உங்களுக்கு விருப்பமான விதைகளைச் சேர்த்து உருண்டைகளாக செய்து முயற்சிக்கவும்.
முருங்கைக்காய் ஜூஸ்
கேலக்டாகோக் எனப் புகழ்பெற்ற முருங்கை பால் தாய்ப்பால் சுரப்பை தூண்டும் திறன் உள்ளது. கறிகள் அல்லது சூப்கள் செய்யும் போது முருங்கைக்காய் சேர்ப்பது நல்ல பலனை தரும். அன்றன்றைக்கு பறித்த முருங்கைக்காயை சாறு செய்து, ஒரு மாதத்திற்கு தினமும் அரை கிளாஸ் அளவிற்கு சாப்பிடுங்கள். தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, ஒரு மாதத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிப்பது சிறந்தது.
மசூர் பருப்பு சூப்
மசூர் பருப்பு கேலக்டாகோக் உணவுகளில் ஒன்று என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது, அதாவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுவதில் பெரும் பங்காற்றுகிறது. இதை பருப்பு சூப்பாகவோ அல்லது உணவின் ஒரு பகுதியாகவோ சாப்பிடலாம். இந்த இளஞ்சிவப்பு நிற பருப்பை ஒரு கிண்ண அளவில் உட்கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ஒரு ஸ்பூன் நெய், ஒரு சிட்டிகை மிளகு மற்றும் உப்பு சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
