Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உங்கள் குழந்தைகள் ஸ்மார்ட் போன் பார்க்கிறார்களா? உடனே செட்டிங்ஸில் இதை மாற்றுங்கள்..!
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான குழந்தைகள் ஸ்மார்ட்போனும் கையுமாக காணப்படுகிறார்கள். இது பெற்றோர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த நாட்களில் குழந்தைகள் தங்கள் பள்ளி புத்தகங்கள் மற்றும் பாடங்களை விட அதிக நேரம் ஸ்மார்ட் போன், டேப், லேப்டாப் ஆகியவற்றில்தான் தங்களுக்கு பிடித்தமான பொம்மைகள் மற்றும் வீடியோக்களைப் பார்க்கிறார்கள்.
குழந்தைகளின் கைகளில் தொடர்ந்து கேஜெட்கள் இருப்பது அவர்களின் கண்களையும் உடலையும் பாதிக்கிறது. மனதிற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. பல நேரங்களில் இணையம் தொடர்பான ஆபத்து கேஜெட்களால் ஏற்படுகிறது. இன்று குழந்தைகளின் கைகளில் மொபைல் இருப்பதால், அவர்கள் இணையத்தில் ஆபாச புகைப்படங்களை அணுகுவது மிகவும் எளிதானது. இதன் காரணமாக குழந்தைகள் தவறான பாதையில் பயணிக்கும் அபாயமும் அதிகம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஆகவே குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்களை கொடுப்பதற்கு முன்பு போனில் உள்ள சில செட்டிங்ஸை நீங்கள் கட்டாயமாக மாற்ற வேண்டும்.

பல சமயங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பிடிவாதத்திற்கு அடிபணிவார்கள். அவர்களின் செல்போன் அல்லது எந்த கேஜெட்டையும் அவர்களிடமிருந்து எல்லா நேரங்களிலும் பறிக்க முடியாது. எனவே, குழந்தைகள் இன்டர்நெட் அல்லது செல்போனை பாதுகாப்பாக வைத்திருக்க பெற்றோர்கள் சில குறிப்புகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன குறிப்புகள் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
1. குழந்தைகளுக்கான மொபைலைப் பாதுகாப்பானதாக்குங்கள். இது வயது வந்தோருக்கான உள்ளடக்கத்திலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கும். அதற்கு முதலில் Android இல் Google Play-ல் சில கட்டுப்பாடுகளை செட்டிங்சில் இயக்கப்பட்டிருக்க வேண்டும். இது குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற ஆப்ஸ், கேம்கள் மற்றும் பிற இணைய ஆதாரங்களைப் பதிவிறக்குவதைத் தடுக்கிறது.
2. இதற்கு முதலில் குழந்தையின் சாதனத்தில் உள்ள கூகுள் பிளே ஸ்டோருக்குச் செல்லவும். அதில், 'Parental Controls' என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதைத் தட்டவும். பின்னை அமைக்கும்படி கேட்கப்படுவீர்கள். பின்னை அமைப்பதன் மூலம் பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்புகளை மாற்றலாம். பின்னை அமைத்த பிறகு, ஒவ்வொரு வகைக்கும் ஸ்டோர் அடிப்படையிலான வயதுக் கட்டுப்பாடுகளை அமைக்கலாம். இந்த சீக்ரெட் பின்னை பற்றி உங்கள் குழந்தைக்கு சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
3. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களும் பெற்றோர் கட்டுப்பாட்டு விருப்பத்தை கொடுக்க வேண்டும். சமூக ஊடகப் பயன்பாடுகளில் பெற்றோர் கட்டுப்பாடுகளை இயக்குவதன் மூலம், குழந்தைகளின் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்கலாம் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்தைப் பார்ப்பதிலிருந்து அவர்களைத் தடுக்கலாம்.
4. பல நேரங்களில், வசதிக்காக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொந்த மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி எல்லா பயன்பாடுகளையும் இயக்க அனுமதிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கான பிரத்யேக மின்னஞ்சல் ஐடியை உருவாக்குவது பாதுகாப்பான முறையாகும்.
5. இதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களிலிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் இணைய செயல்பாட்டை எளிதாகக் கண்காணிக்கவும் முடியும்.
6. உங்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்தால், இன்டர்நெட் பாதுகாப்பு பற்றி அவர்களிடம் சொல்லிக்கொண்டே இருங்கள். வைரஸ், மால்வேர், சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகள் பற்றி குழந்தைகளுக்குக் கற்பித்தல் மற்றும் மோசடிகளைக் கண்டறிவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.
7. வெப் பிரவுசர்கள் மற்றும் சர்ச் இஞ்சின்களில் சேஃப் சர்ச் செட்டிங்ஸ் (Safe Search Settings) ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வதன் மூலமாக ஒரு சில ஆபாசம் கலந்த தேடல் முடிவுகளை நீங்கள் ஃபில்டர் செய்யலாம். இதனால் உங்கள் குழந்தை ஆன்லைனில் எதையாவது தேடும்பொழுது வயதுக்கு உட்பட்ட கன்டென்டுகள் மட்டுமே அவர்களுக்கு காண்பிக்கப்படும்.
8. உங்கள் குழந்தை சாதனத்தை எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறது என்பதை கட்டுப்படுத்துவதற்கு ஸ்கிரீன் டைம் லிமிட் அமைக்கலாம். இவ்வாறு செய்வது உங்கள் குழந்தை அதிகப்படியாக போன் பயன்படுத்துவதில் இருந்து நீங்கள் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











