Just In
- 19 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்டா முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டில் செய்யும் கர்ப்ப சோதனை முடிவுகள் தவறாக வர காரணம் இதுதானாம்... அலட்சியமா இருக்காதீங்க...!
பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும்போது அல்லது மாதவிடாய் தள்ளிப்போகும் போது ஒரு கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது உங்களை உறுதிப்படுத்தவும் பெண்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும் ஒரு வழியாகும்.
பெண்கள் கருத்தரிக்க முயற்சிக்கும்போது அல்லது மாதவிடாய் தள்ளிப்போகும் போது ஒரு கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது உங்களை உறுதிப்படுத்தவும் பெண்களின் சந்தேகங்களை உறுதிப்படுத்தவும் ஒரு வழியாகும். இருப்பினும், அனைத்து கர்ப்ப பரிசோதனைகளும் 100% சரியானவை அல்ல.
கர்ப்ப பரிசோதனையில் தவறான முடிவுகள் வருவது அரிதாக இருந்தாலும் அவ்வாறு ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது. ஒரு தவறான பரிசோதனை முடிவு நீங்கள் கர்ப்பமாக இருப்பதாக சோதனை கூறும்போது, நீங்கள் கர்ப்பமாக இல்லாதபோது கூறுவது பெண்களுக்கு மிகவும் மன அழுத்தத்தை அல்லது தற்காலிகமாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதற்கான காரணங்கள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமீபத்தில் கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால்
கருச்சிதைவுகள் கடினமானது மற்றும் உங்கள் உடல் கர்ப்பத்திற்கு முந்தைய ஹார்மோன் அளவை மீண்டும் பெறுவதற்கு நேரம் எடுக்கும். அவ்வாறு செய்யும்போது, கர்ப்ப பரிசோதனையில் தவறான நேர்மறையான அறிகுறியைப் பார்ப்பது பெண்களை கவலையடையச் செய்யலாம். அதேபோல், கருக்கலைப்புக்கு உள்ளாகும் பெண்களும் பல தவறான நேர்மறை முடிவுகளைக் காணலாம். இது சீரான நிலைக்கு வர ஆறு வாரங்கள் வரை ஆகலாம்.
எகோடாபிக் கர்ப்பம்
இனப்பெருக்க அமைப்பில், கருப்பை வெளியே கருவுறும் போது அல்லது பொருத்தப்படும்போது ஒரு கர்ப்பம் எக்டோபிக் என்று கூறப்படுகிறது. எக்டோபிக் கர்ப்பங்கள் சாத்தியமானவை அல்ல என்றாலும், அவை உங்கள் கர்ப்ப ஹார்மோன் அளவை மிக விரைவில் பாதிக்கும் மற்றும் சோதனை தவறான நேர்மறை முடிவை ஏற்படுத்தும். எக்டோபிக் கர்ப்பத்தின் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் நீங்கள் மருத்துவரிடம் விரைந்து சென்று பரிசோதிக்க வேண்டும்.
MOST READ: தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் அந்தப்புர ரகசியங்கள்... அதிர்ச்சியாகம படிங்க...!
கருவுறுதல் மருந்துகளை எடுத்துக் கொள்வது
கருவுறுதல் மருந்துகளில் உள்ள பெண்கள் பெரும்பாலும் ஹார்மோன் வெளியிடும் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர், அவை முட்டை விநியோகத்தை பாதிக்கின்றன அல்லது கர்ப்ப பரிசோதனையை தவறான நேர்மறை முடிவுகளை காட்ட கட்டாயப்படுத்துகின்றன. ஆன்டிசைகோடிக் மருந்துகள் மற்றும் பதட்ட எதிர்ப்பு மருந்துகள் போன்ற வேறு சில மருந்துகளும் முடிவுகளை குழப்பக்கூடும்.
விரைவாக சோதனை எடுப்பது
வழக்கமாக மாதவிடாய் தவறுவது என்பது நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வதற்கான முதல் சமிக்ஞையாகும். இருப்பினும், ஒரு சோதனை எடுப்பதற்கு முன்பு ஒருவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஒன்று, நீங்கள் கர்ப்ப பரிசோதனையின் வழிமுறைகளைப் படித்து, துல்லியமான முடிவுகளைக் காண அதைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இரண்டாவதாக, ஆரம்பத்தில் சோதனை செய்வது ஆர்வமானதாக இருந்தாலும், ஆரம்ப முடிவுகள் முக்கியமான எச்.சி.ஜி ஹார்மோனை தவறாகக் கண்டறிந்து எதிர்மறையான முடிவுகளைத் தரும்.
சிக்கலான மருத்துவ நிலைகள்
சில நேரங்களில், நாள்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் மருத்துவ நிலைமைகள் உங்கள் ஹார்மோன் செயல்பாட்டைத் தடுக்கலாம் இதனால் நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ளும்போது தவறான முடிவைக் காண வாய்ப்புள்ளது. இது குறித்து உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், கருத்தரிக்கும் போது சிக்கலானதாகக் கருதப்படும் சில பொதுவான நிலைமைகளில் கருப்பை நீர்க்கட்டிகள், சிறுநீரக நோய்த்தொற்றுகள் மற்றும் யுடிஐக்கள் அடங்கும். தைராய்டு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஆகியவை உங்களை தவறான நேர்மறை முடிவுக்கு ஆளாக்கும்.
MOST READ: பெண்களின் கன்னித்தன்மை போனவுடன் அவர்களின் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
என்ன செய்ய வேண்டும்?
கர்ப்ப பரிசோதனைகள் கர்ப்பத்தை உறுதிப்படுத்தப்படுவதற்கான முதல்நிலை அறிகுறி மட்டுமே. எனவே ஒரு மருத்துவரை சந்தித்து விஷயங்களை கையாள்வது ஒருபோதும் மோசமானதல்ல. அதைப் பொறுத்து, மருத்துவர் உங்களுக்கு சிறுநீர் பரிசோதனை அல்லது இரத்த பரிசோதனைக்கு செல்ல அறிவுறுத்தலாம், இது கர்ப்பத்தை உறுதிப்படுத்த முடியும்.