Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
கடற்கன்னி உருவில் வளர்ந்த சிசு - கருகலைப்பு செய்த 23 வயது தாய்!
ஆறாவது மாதத்தில் கருவில் சிசு கடற்கன்னி உருவில் வளர்வதை கண்டு கருகலைப்பு செய்துவிட்டார் தாய்.
கடற்கன்னி என்பதை நாம் கற்பனையில், கதைகளில் மட்டுமே கண்ட விஷயம். மற்றும் அவ்வப்போது சிலர் அங்கே கடற்கரையில் இறந்த நிலையில் கடற்கன்னி கண்டெடுக்கப்பட்டதாக புரளிகளும் பரப்புவார்கள்.

ஆனால், மெர்மெய்ட் சின்றோம் என்ற தாக்கம் கருவில் வளரும் சிசுவை கடற்கன்னி போன்ற உரு அடைய செய்யும். இது லட்சங்களில் ஒரு சிசு எதிர்கொள்ளும் பாதிப்பு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வூ!
இந்த சம்பவம் சில மாதங்களுக்கு முன் சீனாவில் நடந்தது. வூ எனும் 23 இளம் தாய் கர்ப்பமாக இருந்தார். தனது குழந்தையை ஈன்றெடுக்க எல்லா தாய்மார்களை போல பெரும் கனவுகளையும் சேர்த்து சுமந்து கொண்டிருந்தார்.

கடற்கன்னி உரு!
ஆனால், ஆறாவது மாதத்தில் அல்ட்ராசவுண்ட் ரிசல்ட்டில் குழந்தையின் உரு கடற்கன்னி போன்று தோற்றமளிப்பது தெரியவந்தது.

கருகலைப்பு!
இதை அறிந்த உடனேயே வூ, கருகலைப்பு செய்துவிட முடிவு செய்து, பிரசவத்திற்கு முன்னரே கருவை அழிக்க கூறிவிட்டார்.

டாக்டர்கள்!
வூ ஆறு மாத கர்ப்பிணியாக இருந்ததால், அபார்ஷன் செய்வதில் சில சிரமங்கள் இருந்தன. இதனால் வூவை பரிசோதனை செய்த பிறகே மருத்துவர்கள் அபார்ஷன் செய்தனர்.

என்ன பாதிப்பு?
உண்மையில் கடற்கன்னி போன்று சிசு கருவில் உரு தோற்றம் கொண்டது மெர்மெய்ட் சின்றோம் என கூறுகின்றனர். இது லட்சங்களில் ஒரு கருவில் தோன்றும் அறியவகை தாக்கம் ஆகும்.
அதாவது இந்த வகை குழந்தைகள் இரு கால்களும் பிணைந்து ஒரே கால் போன்ற (கடற்கன்னி உருவம் போல) உருவ அமைப்பு பெற்றிருப்பார்கள்.

ஷிலோ பெபின்!
அமெரிக்காவை சேர்ந்த ஷிலோ பெபின் எனும் பெண் குழந்தை இந்த பாதிப்பில் பிறந்த மிகவும் பிரபலமான பெண் ஆவார். பல அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டும், இவர் தனது 10 வயதில் இறந்துவிட்டார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications