Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய பொதுவான கேள்விகளும்... பதில்களும்...
இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த பிறப்புக் கட்டுப்பாட்டில் பல வகைகள் உள்ளன. அதில் மாத்திரைகள், கருத்தடை சாதனங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி பிறப்புக் கட்டுப்பாட்டு முறையை பின்பற்றும் முன், பலருக்கு மனதில் ஒருசில கேள்விகள் எழக்கூடும்.
அதில் ஒருசில கேள்விகளை வெளிப்படையாக மற்றவர்களிடம் கேட்க முடியாமல் இருப்போம். அதிலும் பெண்களுக்கு அதிக அளவில் கேள்விகள் எழும். உதாரணமாக, பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்னர், ஒரு மணிநேரத்திலேயே அது வெளிவந்துவிட்டால், என்ன செய்வது? மீண்டும் ஒரு மாத்திரையை எடுக்க வேண்டுமா அல்லது தேவையில்லையா? இதுப்போன்று பல கேள்விகள் உள்ளன.
இதுப்போன்று வேறு: பிறப்பு கட்டுப்பாடு முறையினால் எதிர்கொள்ளக்கூடிய பக்க விளைவுகள்!!!
இங்கு அப்படி பல பெண்களின் மனதில் எழும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் பற்றிய சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்டி பயாட்டிக்ஸ் எடுக்கும் போது பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுக்கலாமா?
சில வகையான Rx மருந்துகள், பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளின் சக்தியை குறைத்துவிடும். இருப்பினும் Rifampin அல்லது Rifabutin ஆன்டி பயாடிக்ஸ்களை எவ்விதத்திலும் பாதிக்காது. இருந்தாலும், இதைப் பற்றி ஒருமுறை மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.

கருப்பையக சாதனம் (Intra Uterine Device) விழுந்துவிட்டால் என்ன செய்வது?
ஒருவேளை பிறப்புறுப்பு வழியாக செலுத்தப்படும் கருப்பையக சாதனம் விழுந்துவிட்டால், அதனை உடனே எடுத்து கழுவி தாமாகவே மீண்டும் செலுத்தாமல், மருத்துவரிடம் சென்று பொருத்திக் கொள்ளுங்கள்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் சிறிது நேரத்தில் வெளிவந்துவிட்டால், அதன் பலன் கிடைக்குமா இல்லையா?
சிலருக்கு பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் போட்டு 3 மணிநேரத்திற்குள் வாந்தி வரும். அப்படி வாந்தி வந்தால், அந்த மாத்திரையின் பலன் கிடைக்காது. எனவே அப்போது மற்றொரு மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை போட்ட பின்னரும் காண்டம் பயன்படுத்த வேண்டுமா?
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரையை எடுத்துக் கொண்ட பின்னரும், காண்டம் பயன்படுத்தினால், நிச்சயம் கருவுறாமல் இருக்கலாம்.

முறையற்ற மாதவிடாய் சுழற்சியினால் அவஸ்தைப்பட நேரிடுமா?
பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அனைத்து பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளும் ஒரே மாதிரியானதா?
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அவற்றில் காம்பினேஷன் மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோஜென் ஹார்மோன்களும், மினி மாத்திரைகளில் புரோஜெஸ்டிரோன் மட்டும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











