Just In
- 41 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு இரவில் இந்த தாய் செய்த காரியத்தால் இரட்டை குழந்தைகளுக்கு 2 அப்பா..! இப்படியுமா நடக்கும்..!
ஆணும் பெண்ணும் இந்த உலகில் ஒரு உயிரை ஜீவிக்கும் போது அதனால் அடையும் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. இதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் அவ்வளவு தான். நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சி இருவருக்கும் உண்டாகும். ஆனால், இங்கு ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்ததில் தான் இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக பெரிய இடி விழுந்துள்ளது.
இரட்டை குழந்தையாக பிறந்த குழந்தைகளுக்கு 2 அப்பா என்பது தான் இதில் தூக்கி வாரி போடும் விஷயமே. அது எப்படி இரட்டை குழந்தைகளின் அப்பா வெவ்வேறாக இருக்க முடியும்..? என்பது தான் இன்று சீனாவை உலுக்கிய செய்தி. ஒரே இரவில் இரட்டை குழந்தைகளுக்கு நேர்ந்த இப்படி ஒரு விஷயத்தை நாம் யாரும் இது வரை கேட்டிருக்க மாட்டோம்.
எப்படி இரட்டை குழந்தைகளின் அப்பா 2 பேராக உள்ளனர்? எதனால் இப்படி ஒரு அதிர்ச்சி நிகழ்வு ஏற்பட்டது? இதற்கான உண்மை காரணம் என்ன? போன்ற பல தகவல்களை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
யார் இந்த தம்பதிகள்?
சீனாவை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இரட்டை குழந்தை பிறந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சாதாரண இரட்டை குழந்தையாக இருந்தால் இன்று பெரிய அளவில் பேச்சு ஏற்பட்டிருக்காது. இந்த குழந்தைகளின் DNA மாறுபட்டிருப்பது தான் தற்போதைய பிரச்சினையே!
மாறுபாடுகள்...
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் முகம், கை, கால்கள் எல்லாம் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும்.
ஆனால், இந்த சீன குழந்தைகளின் கண்கள், வாய், முக அமைப்பு, மூக்கு எல்லாமே மாறுபட்டிருந்தது. எனினும், இவர்களின் தந்தை இதை பெரிதாக ஆரம்பத்தில் கண்டு கொள்ளவில்லை.
அதிர்ச்சி!
இந்த குழந்தைகளின் தாய் எதற்ச்சையாக DNA டெஸ்ட் எடுத்த போது தான் மருத்துவமனையே அதிர்ந்துள்ளது. காரணம், இரட்டை குழந்தைகளின் DNA இரண்டும் முற்றிலுமாக வேறுபட்டிருந்தது.
ஒரு குழந்தைக்கு அந்த பெண்ணின் கணவரின் DNA -வும், மறு குழந்தைக்கு வேறு ஒருவரது DNA-வும் இருந்தது.
MOST READ: சிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
ஒரு இரவு..!
இப்படி ஒரு அதிர்ச்சியை அந்த பெண்ணே எதிர்பார்த்து இருக்க மாட்டார். இந்த நிகழ்வை பற்றி அந்த பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் தனது அலுவலகத்தில் பணி புரியும் ஒருவருடன் ஒரே ஒரு முறை உடலுறவு கொண்டதாக கூறியுள்ளார். இதனால் தான் இப்படி இரு குழந்தைகளுக்கு அப்பா மாறி உள்ளனர்.
2 வேறு விந்தணுக்கள்..!
இப்படி ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டை குழந்தைகளுக்கு எப்படி வெவ்வேறு DNA இருக்க முடியும் என்பதற்கான பதில் இதோ. அதாவது, அப்பெண்ணின் கருமுட்டையில் 2 வேறு விந்தணுக்கள் ஒரே மாதவிடாய் சுழற்சியின் போது உள் நுழைந்தால் இப்படிப்பட்ட நிலை உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரே மாதத்தில் 2 ஆண்களுடன் உடலுறவு வைத்து கொண்டதால் இந்த நிலை அந்த பெண்ணிற்கு உண்டாகி உள்ளது.
கருமுட்டை
2 விந்தணுக்களில் இருந்து 2 குழந்தைகள் உருவாகி இருக்கும். ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆண்களின் விந்தணு என்பதால் இந்த குழந்தைகளின் DNA மாற்றம் பெற்றுள்ளது. இதை மருத்துவ துறையில் "heteropaternal superfecundation" என்று அழைப்பார்களாம்.
மருத்துவ வரலாறு!
இதுவரை இப்படி ஒரு அதிசயத்தை மருத்துவ வரலாற்றிலே கண்டதில்லை என சீன மருத்துவர்கள் அதிர்ந்துள்ளனர். இரட்டையாக குழந்தை பிறந்தால் அவர்களின் DNA ஒரே மாதிரி இருப்பது தான் வழக்கம்.
ஆனால், இம்முறை முற்றிலும் மாறுபட்டுள்ளது. இதை மருத்துவர்களின் டோனில் சொல்ல வேண்டுமென்றால் "இட் ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்".
சமூக வலைத்தளங்கள்
இப்படி ஒரு செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், மருத்துவ துறையிலும் இதை பற்றிய ஆய்வுகள் சில நடந்து வருகின்றன.
ஒரே DNA டெஸ்டில் இப்படி ஒரு ட்விஸ்ட் வரும் என்று யாருமே எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இதை படமாக எடுத்து விடலாம் என சமூக வலைத்தளங்களில் சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.
இப்படி ஒரு சம்பவத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்...