Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
குழந்தை குண்டா பிறக்கறது நல்லதா? ஒல்லியா பிறக்கறது நல்லதா? உண்மை என்னன்னு நீங்களே பாருங்க...
பிறக்கும் குழந்தைகள் குண்டாக பிறப்பது என்னென்ன பிரச்சினைகளை ஏற்படுத்து என்பது குறித்த விழிப்புணர்வை இந்த கட்டுரை உங்களுக்குத் தருகிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு பெற்றோரும் தனக்குக் கொழு கொழு குழந்தை பிறக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

அதனால் குழந்தை கருவில் இருக்கும் வரையிலும் தாய்க்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை நிறைய கொடுத்துக் கொடுத்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஊட்டி ஊட்டி வளர்க்கின்றனர். பிறக்கும் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியமாகவும் புஷ்டியாகவும் பிறக்கும்.

குழந்தைகள்
உலகம் முழுவதுமே அதனால் குண்டு குழந்தைகள் பிறப்பும் வளர்வதும் அதிகரித்து விட்டது. குழந்தை பிறக்கும் போது கொழுகொழுவென்று இருந்தால் நமக்கு பார்க்க நன்றாகத் தான் இருக்கும். மனதும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஆனால் அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைப் பற்றி நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியமான ஒன்று. அதைப் பற்றி இங்கே விரிவாகக் காண்போம்.

குண்டு குழந்தைகள்
பொதுவாக வளர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் சோம்பலான வாழ்க்கை முறையை மேற்கொள்வதால் குழந்தைகள் குண்டு குழந்தைகளாகப் பிறப்பது அதிகரித்து விட்டது. ஆறு வயது முதல் 19 வயது வரையிலும் உள்ள குழந்தைகள் பெரும்பாலும் நன்கு குண்டாகவே வளர்ந்து விடுகிறார்கள்.
மலேசியாவில் மட்டும் கிட்டதட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குண்டாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து விட்டதாகப் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. இதேநிலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தால், ஒவ்வொரு நான்கு வருடத்திற்குள்ளும் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

இதய நோய்கள்
குண்டாக இருக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள், ரத்த அழுத்தம், ஆகியவை ஏற்படுகிற வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிலும் இந்த பிரச்சினைகள் ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். இதுபற்றி ஒரு ஆய்வு நம்முடைய நாட்டில் நடத்தப்பட்டது.

ரத்த அழுத்தம்
அதன்படி குழந்தைகளுடைய உயரம், எடை, ரத்த அழுத்தம் ஆகியவற்றை அளவிடப்படும் போது, 15 சதவீத அளவு குழந்தைகளுக்கு மிக குண்டு குழந்தைகளாக இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதுபோல் இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன.

பெண் குழந்தைகள்
பெண் குழந்தைகள் பத்து வயதுக்கு முன்பாகவே பருவம் அடைநது விடுகிறார்கள். பெண் குழந்தைகளுக்கோ பின்னாளில் கர்ப்பப்பை நோய்களும் எலும்பு தேய்மானமும் மலட்டுத் தன்மையும் மாதவிடாய் கோளாறுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு தெரிவித்திக்கிறது. அதனால் தான் மருத்துவர்கள் குண்டைக் குழந்தைகளை ஆரோக்கியமானது அல்ல என்று குறிப்பிடுகின்றனர்.

ஆண் குழந்தைகள்
அதேபோல் ஆண் குழந்தைகளுக்கு ஆணுறுப்பு வளர்ச்சியில்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குண்டாக இருக்கும் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளைப் போல மார்பகங்களும் பெரிதாக இருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கும் மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் மன உளைச்சல்களும் ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications











