Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
குளிர்காலத்துல குழந்தைகளை பத்திரமா கவனிச்சுக்கோங்க...

* புது அம்மாக்களுக்கு ஒரு முக்கியமான குளிர்கால டிப்ஸ் என்றால் அது இந்த காலத்தில் குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும். பிறந்த குழந்தையின் உடலானது மிகவும் சென்சிட்டிவ்வானது. எனவே அவர்கள் உடலை நோய்கள் எளிதில் தாக்கிவிடும். எனவே இந்த காலத்தில் அவர்களுக்கு வெதுவெதுப்பை அளிக்கும் உடையை உடுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு குளிரை தாக்காமல் இருப்பதற்கு, தொப்பி, ஜாக்கெட் போன்றவற்றை உடுத்துவித்தால் பிடிக்காது. அவர்கள் அவற்றை அகற்ற நினைப்பார்கள். ஆகவே தொப்பியை போடும் போது, அவர்கள் கழற்றாதவாறு கட்டிவிட வேண்டும்.
* குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடையும். எனவே குழந்தைகளின் சருமம் மென்மையாகவும், வறட்சியடையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள ண்டும். மேலும் குழந்தைகளுக்கு டயப்பரை அடிக்கடி மாற்ற வேண்டும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு பேபி பவுடரை உடல் முழுவதும் போட்டு விட வேண்டும். இதனால் அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதை தடுக்கலாம். உடைகள் அணிவிக்கும் போதோ அல்லது அவர்களுக்கு துணியை பயன்படுத்தும் போதோ ஈரம் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை வரவழைத்துவிடும்.
* குழந்தைகளின் சருமமும் குளிர்காலத்தில் மாற்றமடையும். எனவே எதை மறந்தாலும் குழந்தைகளின் குளிர்காலப் பராமரிப்புகளை மறக்க வேண்டாம். ஆகவே எப்போது குழந்தைகளை குளிப்பாட்டிய பின்பு, பேபி மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். அதேப் போல் குளிப்பாட்டுவதற்கு முன்பு, எண்ணெயால் மசாஜ் செய்வதை மறக்க வேண்டாம். அதிலும் வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்து குளிப்பாட்டினால், குழந்தைகளின் எலும்புகள் வலுவடையும்.
* அதிகமாக வெளியே செல்லாமல், வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில் குளிர்காலமானது பிறந்த குழந்தைக்கும் மற்றும் புது அம்மாவிற்கும் ஆரோக்கியமற்றது. தாய்ப்பால் கொடுக்கும் போது குளிர்ச்சியான பொருளை அம்மா குடித்தாலும், அது குழந்தைக்கு சளியை ஏற்படுத்தும். எனவே குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குளிர்காலத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் குளிர்காலத்தில் சிறிது நேரம் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்தால், உடலானது வைட்டமின் டி சத்துக்களை உறிஞ்சுவதோடு, சூரியக்கதிர்கள் சருமம் மற்றும் துணியில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும்.
* வறண்ட மற்றும் வெடிப்புள்ள உதடுகள் பெரியவர்களுக்கு மட்டும் தான் வரும் என்று நினைக்க வேண்டாம். சிறிய மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு கூட ஏற்படும். எனவே குழந்தைகளுக்கு, இந்த பிரச்சனை வராமல் இருப்பதற்கு பேபி ஆயில் அல்லது லிப் பாமை தடவினால், உதடுகளில் வறட்சி ஏற்படாமல், உதடுகள் மென்மையாக இருக்கும்.
மேற்கூறியவாறு குழந்தையை பராமரித்து வந்தால், எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். வேறு என்ன செய்யலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











