Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
பாகிஸ்தானுக்கு அள்ளிக்கொடுக்கும் உலக வங்கி.. எதற்காக இந்த 700 மில்லியன் டாலர்..?
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சேவை வழங்குவதை வலுப்படுத்துவதற்கு உதவ உலக வங்கி பல ஆண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் பாகிஸ்தானுக்கு உலக வங்கி சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை அளிக்க உள்ளது.
மேலும் இந்த நிதியை உலக வங்கி தனது PRID-MPA திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது, பாகிஸ்தான் செயல்பாடுகள் மற்றும் வெற்றியின் அடிப்படையில் அதிகபட்சமாக 1.35 பில்லியன் டாலர் வரையிலான நிதியுதவியை பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் முதல் கட்டமாக 600 மில்லியன் டாலர் பாகிஸ்தான் அரசு திட்டங்களுக்கும், 100 மில்லியன் டாலர் சிந்து மாகாண திட்டங்களுக்கும் செலவிடப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உதவி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் பிரச்சனைக்கு பின்பு பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுடன் அதிகளவில் நெருக்கம் காட்டி வருகிறது. உதாரணமாக டிரம்ப்-க்கு நோபல் பரிசு பெற பரிந்துரைத்தது முதல் பல விஷயங்கள் அமெரிக்காவுக்கும், டிரம்ப்-க்கும் சாதகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவுடன் முக்கியமான ஆயுத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தம்
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானங்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்க கடந்த வாரம் சுமார் 686 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான ஆயுத ஒப்பந்தம் வெளியான ஒரு வாரத்தில் நடந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இந்தியாவுக்கு 93 மில்லியன் டாலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
காசா தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பாகிஸ்தான் காசா பகுதியில் International Stabilisation Force (ISF)க்கு படையினரை அனுப்ப தயார் என தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும் மார்கோ ரூபியோ பாகிஸ்தானின் உதவியை வரவேற்றுள்ளார்.
International Stabilisation Force (ISF) என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











