Latest Updates
-
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
பாகிஸ்தானுக்கு அள்ளிக்கொடுக்கும் உலக வங்கி.. எதற்காக இந்த 700 மில்லியன் டாலர்..?
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும், சேவை வழங்குவதை வலுப்படுத்துவதற்கு உதவ உலக வங்கி பல ஆண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் பாகிஸ்தானுக்கு உலக வங்கி சுமார் 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி உதவியை அளிக்க உள்ளது.
மேலும் இந்த நிதியை உலக வங்கி தனது PRID-MPA திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது, பாகிஸ்தான் செயல்பாடுகள் மற்றும் வெற்றியின் அடிப்படையில் அதிகபட்சமாக 1.35 பில்லியன் டாலர் வரையிலான நிதியுதவியை பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

இதில் முதல் கட்டமாக 600 மில்லியன் டாலர் பாகிஸ்தான் அரசு திட்டங்களுக்கும், 100 மில்லியன் டாலர் சிந்து மாகாண திட்டங்களுக்கும் செலவிடப்படும் என தெரிவித்துள்ளது. இந்த உதவி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் பிரச்சனைக்கு பின்பு பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுடன் அதிகளவில் நெருக்கம் காட்டி வருகிறது. உதாரணமாக டிரம்ப்-க்கு நோபல் பரிசு பெற பரிந்துரைத்தது முதல் பல விஷயங்கள் அமெரிக்காவுக்கும், டிரம்ப்-க்கும் சாதகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் அமெரிக்காவுடன் முக்கியமான ஆயுத ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தம்
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு F-16 போர் விமானங்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை வழங்க கடந்த வாரம் சுமார் 686 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா மத்தியிலான ஆயுத ஒப்பந்தம் வெளியான ஒரு வாரத்தில் நடந்துள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. இந்தியாவுக்கு 93 மில்லியன் டாலர் ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
காசா தாக்குதல்
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் மிகவும் மோசமாக இருந்தது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் பாகிஸ்தான் காசா பகுதியில் International Stabilisation Force (ISF)க்கு படையினரை அனுப்ப தயார் என தெரிவித்ததாக வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். மேலும் மார்கோ ரூபியோ பாகிஸ்தானின் உதவியை வரவேற்றுள்ளார்.
International Stabilisation Force (ISF) என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் 20 அம்சங்கள் கொண்ட அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications