Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா?
தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம்? வெயிட்டான 2 பொறுப்புகள் கொடுக்கும் விஜய்
சென்னை: தவெகவில் இணைந்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு, தவெகவில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு கெடு விதித்தார். இதனால், கோபம் அடைந்த எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார். இதற்கு மத்தியில், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடந்தது.

இதில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார். அப்போது அவர், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக பேசியதாக கூறினார். இந்த சந்திப்பு நடந்த ஓரிரு நாளில் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுகவில் கட்சியில் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே பயணித்த செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களாக தவெகவில் செங்கோட்டையன் இணைய உள்ளதாக பேச்சு எழுந்தது.
இதை உறுதி செய்யும் விதமாக நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் மாலையில் தவெக தலைவர் விஜய்யை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைத்து சந்தித்து பேசினார். விஜய்யுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகம் வந்தார். விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டது.
இந்தநிலையில், செங்கோட்டையனுக்கு நிர்வாககுழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட இருப்பதாகவும், அதாவது, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் அமைப்பு பொதுசெயலாளராக செங்கோட்டையன் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளார்.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











