Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
ஊதியத்தை டபுள் ஆக்கிய தமிழக அரசு.. வெளியான அதிரடி அரசாணை! யார் யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இந்த அரசாணையை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர் ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.2026 சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பணியின் ஒரு பகுதியாக, SIR (Special Intensive Revision) எனப்படும் கணக்கீட்டு படிவங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலும் இந்த பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக வருவாய்த் துறை, அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் பணிகளோடு இந்த பணிகளையும் மேற்கொள்வதால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மேலும் பணி அழுத்தம் ஏற்படுவதாக கூறி நேற்று தமிழகம் முழுவதும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான அரசாணை ஒன்றை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
ஏற்கனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி இன்று தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் இதுவரை 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 12,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போல தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்டு வரும் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊக்கத்தொகை 1000த்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளருக்கான ஊதியம் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி மற்றும் தேர்தல் நேரத்தில் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஊக்கத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











