Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Siragadikka aasai Serial: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. காரணம் இதுதானா? வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து கொண்டிருந்த நடிகை ராஜேஸ்வரி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.

சென்னை பிராட்வே ராயப்பன் முதலி தெருவை சேர்ந்த நடிகை ராஜேஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன்பு சதிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹேமந்த் குமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவர் சதீஷ் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை ராஜேஸ்வரிக்கும் அவருடைய குடும்ப கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி கணவன் மனைவி இருவருக்கும் வழக்கம்போல தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக மறுநாள் காலை நடிகை ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு போய்விட்டார். கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி நேற்று இரவு அம்மா வீட்டில் வைத்து அதிகமான ரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.
பிறகு சிறிது நேரத்திலேயே அவர் மயக்கம் போட்டு விழுந்து விட, அதை கண்டதும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முதலில் கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனையில் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து சிகிச்சை நடந்து வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி மரணம் அடைந்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு விசாரணை செய்து வருகிறார்கள்
சிறகடிக்க ஆசை சீரியலில் ராஜேஸ்வரி அருணின் அம்மாவாகவும், கதாநாயகி மீனாவின் தங்கை சீதாவின் மாமியாராகவும் நடித்துக் கொண்டிருந்தார். அவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications
