Latest Updates
-
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பழைய சேவைக்கு மூடுவிழா.. நவ.30ஆம் தேதிக்கு பிறகு இந்த வசதி கிடைக்காது.. SBI வங்கி அறிவிப்பு..!!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. OnlineSBI இணையதளம் மற்றும் YONO Lite மொபைல் செயலியில் செயல்பட்டு வந்த mCASH என்ற உடனடிப் பணப் பரிவர்த்தனை சேவை, வரும் நவம்பர் 30 ஆம் தேதி பிறகு முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் இனி mCASH சேவையை பயன்படுத்தி பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்பதை தெளிவாக கூறியுள்ளது.
mCASH என்றால் என்ன..?: mCASH சேவை என்பது, பணம் அனுப்ப வேண்டிய நபரின் வங்கிக் கணக்கு விவரங்களையோ அல்லது IFSC குறியீட்டையோ தெரிந்து கொள்ளாமலேயே, அவர்களின் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாக எளிதில் பணம் அனுப்பும் ஒரு வசதி ஆகும். இந்தப் பணத்தைப் பெறும் நபர்கள், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மட்டுமல்லாமல் வேறு எந்த வங்கியிலும் கணக்கு வைத்திருந்தாலும், அவர்களுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்பு மற்றும் கடவுச்சொல் (Passcode) மூலம் பணத்தைத் தங்களது கணக்குக்கு உடனடியாக மாற்றிக்கொள்ள முடிந்தது.

mCASH நிறுத்த என்ன காரணம்..?: தற்போது இந்தப் பழமையான சேவை நிறுத்தப்படுவதாக SBI அறிவித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள தகவலில், வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே UPI, IMPS, NEFT, RTGS போன்ற பல நவீன மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனை வழிகள் இருப்பதால், அதற்குப் பதிலாக அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். எனவே, இந்தச் சேவையை வங்கி நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
மாற்று வழிகளைப் பயன்படுத்த SBI வங்கி அறிவுரை : mCASH சேவை நிறுத்தப்பட்டாலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனென்றால், 3ஆம் தரப்பு நபர்களுக்குப் பணம் அனுப்பவும், பெறவும் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் UPI (ஜிபே, ஃபோன்பே), IMPS (உடனடிப் பரிமாற்றம்), NEFT (ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிமாற்றம்), மற்றும் RTGS (பெரிய தொகைப் பரிமாற்றம்) போன்ற வேறு பல வழிகள் உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த வழிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்பதால், வாடிக்கையாளர்கள் இனி இந்தப் பணப் பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது. mCASH சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த மாற்று வழிகளுக்கு மாறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications