Latest Updates
-
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்
உங்ககிட்ட இந்த வகை ரேஷன் கார்டு இருக்கா உடனே ரேஷன் கடைக்கு போங்க!! இல்லனா இலவச பொருட்கள் வராது!!
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு மானிய விலையிலும் இலவசமாகவும் அரிசி ,பருப்பு, கோதுமை , சமையல் எண்ணெய் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் தான் கிடைக்கின்றன. மாதம் தோறும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி தங்களுடைய உணவு தேவையை போக்கிக் கொள்ளக்கூடிய லட்சக்கணக்கான குடும்பங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
தமிழ்நாட்டினை பொறுத்தவரை ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்றன . முன்னுரிமை குடும்ப அட்டை இதில் அனைத்து பொருட்களும் கிடைக்கும் .முன்னுரிமை குடும்ப அட்டை அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 35 கிலோ அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். அடுத்ததாக அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, பொருட்களில் இல்லாத அட்டை என மொத்தம் ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் பயன்பாட்டில் இருக்கின்றன .

உங்களுடைய ரேஷன் அட்டையிலேயே அது எந்த வகையிலான ரேஷன் அட்டை என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். முன்னுரிமை குடும்ப அட்டை என்றால் PHH என்றும் அந்தியோதயா அன்ன யோஜனா அட்டை என்றால் AAY என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு வகை குடும்ப அட்டைகளை வைத்திருக்கக் கூடிய நபர்கள் தொடர்ச்சியாக மானிய விலையிலும் இலவச அரிசி உள்ளிட்டவையும் கிடைக்க வேண்டும் என்றால் கேஒய்சி முடித்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை: புத்தாண்டில் பெரிய பரிசு காத்திருக்கு!! பெண்களே ரெடியா?
தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின் படி AAY அல்லது PHH குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், அந்த குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நியாயவிலை கடை அல்லது வெளி மாவட்டம் அல்லது வெளி மாநிலத்தில் வசித்தால் அங்கே அருகே உள்ள நியாய விலை கடைகளில் விரல் ரேகை அல்லது கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் இ-கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்களுடைய ரேஷன் அட்டை முதலில் எந்த வகையான அட்டை என்பதை கவனியுங்கள். அவ்வாறு இருந்தால் உடனடியாக உங்களின் ரேஷன் கடைக்கு சென்று இந்த இ-கேஒய்சி முடித்துக் கொள்ளுங்கள் . மத்திய, மாநில அரசுகளை பொருத்தவரை தாங்கள் வழங்க கூடிய சலுகைகள் அனைத்து தகுதியான மக்களை சென்று சேர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றன . இதற்காகத்தான் இ-கேஒய்சி என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
பொங்கல் பரிசு : டோக்கன் விநியோகம் எப்போது? பொங்கல் பரிசு தொகை எந்த தேதியில் கிடைக்கும்?
எனவே உங்களுடைய ரேஷன் அட்டை மேலே கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்றாக இருந்தால் ரேஷன் கடையில் கேஒய்சி முடித்து கொள்ளுங்கள். ரேஷன் கடைக்கு சென்றாலே ஊழியர்கள் இயந்திரம் மூலம் உங்களுக்கான இ -கேஒய்சி முடிப்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு எப்போதும் போல வழக்கமாக கிடைக்கக்கூடிய மானிய விலை மற்றும் இலவச பொருட்கள் தொடர்ச்சியாக கிடைக்கும் .
இதற்கென கடைசி தேதி என ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கேஒய்சி விவரங்கள் சரி பார்ப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications












