Latest Updates
-
ரம்ஜான் ஸ்பெஷல் திண்டுக்கல் ஸ்டைல் மட்டன் பிரியாணி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026 IPL T20-யில் உள்ள டாப் 5 இளம் வீரர்கள்.. சிஎஸ்கே அணியிலும் ஒருவர் உள்ளார்.. யாருன்னு பாருங்க.. -
ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
பாவக்காயை இப்படி தொக்கு செய்யுங்க.. கசப்பே தெரியாது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க... -
இந்த சட்னியை தினமும் 2 ஸ்பூன் சாப்பிடுங்க.. உடம்பில் இரத்தமும் ஊறும்.. முடி உதிர்வும் குறையும்.. -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 21 முதல் இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது.. -
பீர்க்கங்காய் வாங்குனா டக்குனு இந்த மாதிரி பருப்பு மசியல் செய்யுங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்! -
கோதுமை தோசையும்.. தக்காளி சட்னியும்.. - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
ராஜ்தானி ரயில் மோதி.. உடல் சிதறி பலியான 8 யானைகள்! அசாமில் அதிர்ச்சி
டெல்லி: அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒரு யானைக்குட்டி மட்டும் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நடந்தது?
மிசோரமின் சாய்ரங்கில் இருந்து, டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலை நோக்கி, நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கவுகாத்தியிலிருந்து, சுமார் 126 கி.மீ தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.17 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சில யானைகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன. ஓரிரு யானைகள் ரயிலின் அடியில் சிக்கியது. இப்படியாக மொத்தம் 8 யானைகள் பலியாகின.
விபத்தும் மீட்பும்
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே துறையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். யானை மீது மோதிய வேகத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 8 யானைகள் உயிரிழந்திருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறியுள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் வடகிழக்கு பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்து தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் யானைகளை பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் ரயில் மோதிய வேகத்தில் யானைகள் உயிரிழந்திருக்கின்றன என ரயில்வேதுறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











