Latest Updates
-
சனிபகவான்-செவ்வாய் அரிய இணைப்பால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
வெயிலுக்கு ஏற்ற குளுகுளு வெள்ளரிக்காய் சட்னி ரெசிபி..இப்படி செஞ்சு பாருங்க..இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும் -
Tamil Nadu Elections 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
பொங்கல் பரிசு: அக்கவுண்டுக்கு வரும் பணம்!! ஜனவரி 3 முதல் பொருட்கள் விநியோகம் என அறிவிப்பு!!
பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் எவ்வளவு ரொக்கம் வழங்கப்போகிறது என லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பொங்கல் பரிசு தொகை எவ்வளவு வழங்கப்படும் நேரடியாக ரேஷன் கடை வாயிலாக வழங்கப்படுமா அல்லது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா என பொதுமக்கள் காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு எவ்வளவு ரொக்கத்தை பொங்கல் பரிசாக வழங்கப் போகிறது, எந்த தேதியில் இருந்து இந்த பொங்கல் பரிசு பணம் கைகளுக்கு கிடைக்கப் போகிறது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாயை பொங்கல் பரிசு தொகையாக வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகிறார். அரசு தரப்பில் 3000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பும் பொங்கல் பரிசுக்கான ரொக்க பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம் பெறும் , இந்த பொங்கல் பரிசுக்கான ரொக்க பணம் எவ்வளவு , அது எப்படி மக்களுக்கு வழங்கப்படும் என்ற விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
புதுச்சேரி மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்க பணத்தையும் வழங்குகிறது . 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதுச்சேரி அரசு 4 கிலோ பச்சரிசி , நாட்டுச்சக்கரை , பாசிப்பருப்பு, 300 கிராம் நெய் மற்றும் ஒரு லிட்டர் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமாம் .
ஜனவரி 10ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு விநியோகம்? பணிகளை தீவிரப்படுத்தும் அரசு!!
ஜனவரி 3ஆம் தேதி முதலே இந்த பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கும் என புதுச்சேரி மாநில அரசு அறிவித்திருக்கிறது. இது மட்டும் இல்லாமல் புதுச்சேரி அரசு வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு தொகை வரவு வைக்கப்படும் என அறிவித்திருக்கிறது. அதாவது பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த இலவச ஆடை திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது . இதற்கு மாற்றாக ரேஷன் அட்டைதாரரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக பணம் செலுத்தப்பட்டு விடும்.
சிலிண்டர் விலை முதல் ரயில் டிக்கெட் வரை ஜனவரி 1 முதல் என்னவெல்லாம் மாறப் போகுது?
ஒரு நபர் மட்டுமே இருக்கக்கூடிய ரேஷன் அட்டைகளுக்கு 500 ரூபாயும் இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயும் பொங்கல் பணமாக வழங்கப்படுகிறது. பயனாளர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக இந்த பணம் வரவு வைக்கப்படும் என புதுச்சேரி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications












