Latest Updates
-
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...!
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ரெய்டு.. கோவையில் இருந்து வந்த டீம்
திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை இன்று பிற்பகல் திடீரென வந்து சோதனை நடத்தினார்கள். கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை நடத்தினார்கள். தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன். இவரது கணவர் பெயர் துவாரக நாதன். இவர்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர் எம் காலணி அருகே உள்ள செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர். இந்திராவின் சகோதரர் தான் ஐ.பி. செந்தில்குமார். இவர் பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

இன்று பிற்பகல் சோதனை
இந்நிலையயின் இந்திராவின் வீட்டில் இன்று 21.11.25 மதியம் 1:30மணி அளவில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு இனோவா கார்களில் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர், இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனை
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் ஐ பெரியசாமி இல்லம், அமைச்சர் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு மற்றும் இந்திரா வீடு, மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது. தற்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் ஒரே நாளில் ஐந்து லட்சத்தை இழந்த லாவண்யா.. எந்த குழந்தைகளும் பார்க்கக்கூடாத கோலம்
இந்திரா யார்
அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன் திண்டுக்கல் நகரில் தொழில் அதிபராக இருக்கிறார். இவர் ஒரு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஆயத்த ஆடைகளை மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை
சோதனை ஏன்
எதற்காக சோதனை... சோதனையின் முடிவில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் அறிவித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும். இந்த துறை தான் இன்று சோதனை நடத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது, இந்திரா துவாரக நாதனின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் சோதனை நடந்தது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications












