Latest Updates
-
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்!
புட்வா புயல்.. எத்தனை கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது? எப்போதும் தமிழக கடல் பகுதியை நெருங்கும்?
சென்னை: சென்னையில் இருந்து சுமார் 400 கிமீ தொலையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல், தமிழ்நாடு - புதுச்சேரி - ஆந்திரா கடல் பகுதியை நாளை அதிகாலை நெருங்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், சென்னையிலிருந்து தெற்கே 400 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 300 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலைக் கடந்து, நாளை அதிகாலை, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் , வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.
சாதாரணமாக காற்றின் வேகம் 63 கிமீ முதல் 83 கிமீ வரை இருந்தால், அது புயலாக கருதப்படும். தற்போது வரை டிட்யா புயல் காற்றின் வேகம் 65 கிமீ-ஆக இருக்கிறது. இந்த புயல் இலங்கை பரப்பில் இருந்து விலகி, டெல்டாவை அடையும் போது காற்றின் வேகம் 70 முதல் 80 கிமீ வரை இருக்கலாம் என்று கணக்கிப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா கரையை கடக்குக் போது மெதுவாகவோ அல்லது நிற்கவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சில மணி நேரங்கள் டெல்டா நிலப்பரப்பில் இருக்கும் புயல், பின்னர் வலுவான நிலையில் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர உள்ளது. அதன்பின் சென்னை கடலோர பகுதிகளுக்கு அருகில் நிற்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த புஅல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் ம்தல் நாளை மறுநாள் வரையிலும் கனமழை தொடரும்.
ஓரிரு மாவட்டங்களில் அதி கனமழை கூட பெய்யக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக டெல்டா மற்றும் அதனையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று 70 முதல் 90 கிமீ வரையிலும், நாளை தென் கடலீர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் 55 கிமீ முதல் 75 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Credit: Oneindia



Click it and Unblock the Notifications











