Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
இனிமே கோவிலுக்கு போயிட்டு வரப்ப இந்த தப்ப மட்டும் பண்ணிராதீங்க... இல்லனா உங்க வேண்டுதல் எதுவுமே பலிக்காது...!
இந்து மதத்தின் சடங்குகள் மற்றும் வழிபாடுகள் பல நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்களை உள்ளடக்கியது, அவற்றில் பலவற்றை நாம் இப்போதும் கடைபிடித்து வருகிறோம். கோவிலில் மணி அடிப்பது இந்த வழக்கங்களில் ஒன்றாகும்.
அனைத்து இந்து கோவிலிலும் ஒரு மணி இருக்கும், ஒவ்வொரு முறையும் நாம் சென்று கோயிலை விட்டு வெளியேறும்போது, நிச்சயமாக மணியை அடிக்கிறோம். இருப்பினும், கோவிலை விட்டு வெளியேறும் முன் மணியை அடிப்பது சாஸ்திரங்களின் படி நல்லதல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? இவ்வாறு செய்வதால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்து மதத்தில் கோவில் மணிகளின் முக்கியத்துவம்
கோவிலில் வைக்கப்படும் மணியைப் பொறுத்தவரை, படைப்பின் தொடக்கத்தில் ஒலித்தது மணியின் ஓசை என்று வேதங்கள் கூறுகிறது. கூடுதலாக, மணியை அடிப்பதன் மூலம் ஓம்கார் மந்திரத்தை முழுமையாக உச்சரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சடங்கு சிலைகளின் உணர்வை எழுப்புவதாகவும், பக்தியின் விளைவை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.
கோவில் மணி மணி என்பது கோவில்களில் மட்டும் காணப்படுவதில்லை. இந்து மதத்தினர் அனைவரின் வீடுகளிலும் பூஜை அறையில் மணி வைத்திருப்பார்கள். கடவுளுக்கான எந்தவொரு சடங்கும் மணியோசை இல்லாமல் நிறைவு பெறாது. இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும்போதும், ஆரத்தி எடுக்கும் நேரம் மற்றும் பூஜையின் முடிவில் மணி அடிப்பது ஒரு கட்டாய நடைமுறையாகும்.
கோவிலை விட்டு வெளியே வரும்போது ஏன் மணி அடிக்க கூடாது?
புராணங்களின்படி, கோவிலுக்குச் செல்லும்போது, நம் மனதில் அனைத்து விதமான எண்ணங்களும், கெ ட்ட எண்ணங்களும் எழுகின்றன. கோவிலுக்குள் நுழைந்தவுடன் மணி அடிக்கும் போது இந்த எண்ணங்கள் அழிந்து விடுகின்றன. சங்கு, மணி மற்றும் கோவிலின் மணி ஒலி உடலில் இருந்து அனைத்து கெட்ட சக்திகளையும், யோசனைகளையும் வெளியேற்றுகிறது.
அதன்மூலம், கோவிலில் தெய்வங்க தரிசனம் செய்யும்போது, நம் மனதில் நல்ல ஆற்றலும், எண்ணங்களும் உருவாகத் தொடங்குகின்றன. அதன்பிறகு, கடவுளை வணங்கி விட்டு, கோவில் மணியை அடிக்கிறோம், இது அனைத்து ஆற்றலையும் அழிக்கிறது. இதன் விளைவாக, கோவிலை விட்டு வெளியேறும்போது, நேர்மறை ஆற்றலைப் பராமரிக்க மணியை அடிக்கக்கூடாது.
கோவிலுக்குள் நுழையும் போது மட்டும் ஏன் மணி அடிக்க வேண்டும்?
பண்டைய காலங்களிலிருந்தே, இந்து மதத்தில் கடவுள் வழிபாடு முக்கியமானதாக மதிக்கப்படுகிறது. கோவிலை நெருங்கும்போது மணியை அடிக்கும்போது, மணி அடிப்பது நம் உடலில் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தையும் வெளியேற்றி, அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் செல்வத்திற்கான கதவுகளைத் திறக்கும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. மணியின் ஓசையை கடவுள் வணங்குவதாகவும் கூறப்படுகிறது.
மணியை அடிப்பதன் மூலம், வழிபாட்டாளர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு கடவுளிடம் அனுமதி கேட்கிறார்கள், தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் கவனத்தை தங்கள் பக்கம் இழுத்து, பின்னர் தங்கள் வழிபாட்டை வழங்குகிறார்கள். உடலிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள அனைத்து நோய்க்கிருமிகளையும் மணி அடித்து அழித்ததன் விளைவாக கோவிலும் சுற்றுப்புறமும் தூய்மைப்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications












