Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1500 ஆண்டுகளாகியும் கண்டுபிடிக்க முடியாத பிம்பிசாரரின் ரகசிய புதையல்..ஏன் இன்னும் எடுக்க முடியவில்லை தெரியுமா?
இந்தியா புதையல்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் பல சக்திவாய்ந்த மற்றும் செல்வந்தரான பேரரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் பல பேரரசர்கள் தங்கள் செல்வத்தை தங்களின் எதிர்கால சந்ததியினருக்காக புதையல்களாக மறைத்து வைத்துவிட்டு சென்றனர். ஆனால் பெரும்பாலான மன்னர்களின் வாரிசுகள் அந்த புதையல்களை கண்டுபிடிக்கவில்லை.
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு இப்படி கண்டறியப்பட்டு புதையல்களைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் ஆயிரக்கணக்கான பேர் முயற்சித்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத புதையல்கள் இன்னும் இந்தியாவில் நிறைய உள்ளன. அப்படி பலரும் முயற்சித்து நெருங்க முடியாத ஒரு மாபெரும் புதையல்தான் பிம்பிசாரர் புதையல். இந்த பிரம்மாண்ட புதையலைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பிம்பிசாரர் புதையல்
உள்ளூர் புராணங்களின்படி, நாளந்தாவில் உள்ள பண்டைய நகரமான ராஜ்கீரில் உள்ள ஒரு மர்மமான குகையில் ஒரு புதையல் மறைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்தக் குகை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மூடப்பட்டிருப்பதால், அந்த புதையலை அணுகுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த புதையல் கிமு 540 இல் மகதப் பேரரசின் செல்வந்த மன்னரான பிம்பிசாரருக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது, அவர் கிமு 544 முதல் கிமு 413 வரை பண்டைய இந்திய அரசை ஆண்ட ஹரியங்கா வம்சத்தை நிறுவினார்.
வரலாற்று குறிப்புகளின் படி மன்னர் பிம்பிசாரர் புத்த மதத்திற்கு மாறிய பின்னர், தனது செல்வத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுத்தார், இது அவரது மகன் அஜாதசத்ருவை கோபப்படுத்தியது, அவர் தனது பரம்பரை செல்வத்தை இழப்பதாக நினைத்ததால், இறுதியில் தனது தந்தையைக் கொன்று தனது செல்வத்தை உரிமை கோரினார்.
இருப்பினும், அஜாதசத்ரு தங்கத்தை அபகரிப்பதற்கு முன்பு, பிம்பிசாரரின் மனைவி அதை ரகசியமாக வைர தேவன் என்ற சமண துறவியிடம் கொடுத்து, புதையலை குகைகளில் மறைத்து, ஒரு 'மந்திர பூட்டால்' மூடிவிட்டார் என்று கூறப்படுகிறது. பிம்பிசாரர் புதையல், ராஜ்கீரில் உள்ள வைபர் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள பீகாரில் உள்ள சோன் பந்தர் குகைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
தனது கணவர் சேகரித்த தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற பொருட்களைத் தவிர, ராணி தனது நகைகளையும் துறவிக்குக் கொடுத்தார், இது மறைக்கப்பட்ட பிம்பிசார புதையலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிம்பிசாரர் புதையலைக் கண்டுபிடிக்க நடத்தப்பட்ட முயற்சிகள்
பல நூற்றாண்டுகளாக, புதையல் வேட்டைக்காரர்கள் மறைக்கப்பட்ட பிம்பிசார புதையலைக் கண்டுபிடிக்க நூற்றுக்கணக்கான முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர், இதில் பல் பிரிட்டிஷ்காரர்களும் அடங்குவர், அவர்கள் குகையின் சுவர்களை வெடிபொருட்களால் வெடிக்கச் செய்து உள்ளே நுழைய முயன்றனர். ஆனால் யாராலும் அந்த குகைக்குள் உள்ளே செல்ல முடியவில்லை.
குகையின் நுழைவாயில் ஒரு 'மந்திரப் பூட்டால்' மூடப்பட்டிருப்பதாகவும், குகைகளில் உள்ள ஒரு கல்வெட்டில் புதையலை எடுப்பதற்குத் தேவையான 'Password' இருப்பதாகவும் புராணக்கதை கூறுகிறது. ஆனால் யாராலும் இதுவரை யாராலும் கல்வெட்டைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மன்னர் பிம்பிசாரர் மட்டுமே குகைகளை திறக்கும் வழியைத் அறிந்திருந்தார் என்றும், அவர் அந்த ரகசியத்தை தனது கல்லறையோடு சேர்ந்து மறைந்து போகும்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சோன் பந்தர் குகைகள், மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், இந்தியாவில் எஞ்சியிருக்கும் கடைசி பாறையில் வெட்டப்பட்ட குகை இதுவென்றும் நம்பப்படுகிறது. இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்தாவது இந்த குகைகள் திறக்கப்படலாம். அப்படி அப்போது திறக்கிறவர்களுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.



Click it and Unblock the Notifications












