Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
குதிரைகளுக்கு கொடிய பாம்பு விஷம் ஏன் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
பூமியில் எண்ணற்ற ஆபத்தான மற்றும் விஷம் நிறைந்த உயிரினங்கள் உள்ளது, அதில் அதிகளவு மக்களால் வெறுக்கப்படும் அல்லது மக்கள் பயப்படும் ஒரு மிருகம் என்றால் அது பாம்புதான். பூமி பல வகையான பாம்புகளுக்கு தாயகமாக உள்ளது.
சில பாம்புகள் ஆபத்தான விஷத்தன்மை கொண்டவை, சில பாம்புகள் விஷமற்றவையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான மக்கள் பாம்புக் கடியால் இறக்கின்றனர். இருப்பினும், மக்களின் உயிரைப் பறிக்கும் அதே விஷம், ஒரு உயிர்காக்கும் மருந்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு மாற்று மருந்து அல்லது விஷ எதிர்ப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது.

பாம்புகளுக்கு பல்வேறு வகையான விஷங்கள் உள்ளன, அவை முதன்மையாக அவற்றின் உமிழ்நீரிலிருந்து பெறப்படுகின்றன. இந்த விஷம் பாம்புகள் இரையைப் பிடிக்கவும், எதிரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. உலகின் மிகக் கொடிய விஷங்களில் சில தைபன் மற்றும் ராஜநாகத்திலிருந்து பெறப்படுகின்றன. இந்த பாம்புகள் ஒரு கடியிலேயே அதிகளவு விஷத்தை வெளியிடும், இதனால் ஒரு மனிதன் அல்லது விலங்கு சில நொடிகளில் இறந்துவிடக் கூடும்.
ஒரு நாகப்பாம்பு(Cobra) கடிக்கும்போது, அதன் விஷம், நியூரோடாக்சின் என்று அழைக்கப்படுகிறது, இந்த விஷம் மனிதர் அல்லது விலங்குகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கத் தொடங்குகிறது, இது சில நிமிடத்தில் பக்கவாதத்தை அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும். மறுபுறம், ஹீமோடாக்சின் எனப்படும் ஒரு விரியனின் விஷம், ஹீமோகுளோபினை குறிவைத்து இரத்த செயல்பாடுகளைப் பாதிக்கிறது. பாம்பு கடித்தல் என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை, மேலும் இதற்கு ஒரே பயனுள்ள சிகிச்சை விஷமுறிவு(Antivenom) ஆகும், இது விஷத்தின் கொடிய விளைவுகளை எதிர்த்து உயிர்களைப் பாதுகாக்க கவனமாக உருவாக்கப்பட்ட ஒரு உயிர்காக்கும் மருந்தாகும்.
தேசிய மருத்துவ நூலகத்தின்படி, ஒருவர் பாம்பினால் கடிக்கப்படும்போது, விஷம் இரத்த ஓட்டத்தில் விரைவாகப் பரவி, ஒருவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது. இந்த ஆபத்தை எதிர்த்துப் போராட, ஆன்டிவெனம் உருவாக்கப்படுகிறது, மேலும் ஆச்சரியப்படும் விதமாக, குதிரைகள் இந்த மருந்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குதிரைகளுக்கு ஏன் பாம்பு விஷம் கொடுக்கப்படுகிறது?
இந்த செயல்பாட்டில், குதிரைகளுக்குக் குறைந்த அளவு மற்றும் கவனமாகக் கட்டுப்படுத்தப்பட்ட அளவு பாம்பு விஷம் செலுத்தப்படுகிறது. குதிரையின் நோயெதிர்ப்பு அமைப்பு விஷத்தை எதிர்த்துப் போராட இயற்கையாகவே ஆன்டிபாடிகளை உருவாக்குவதன் மூலம் பதிலளிக்கிறது. விஷம் செலுத்தப்பட்ட சில நாட்களுக்குள், குதிரைகள் இந்த ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன, பின்னர் அவை உயிர்காக்கும் ஆன்டிவெனமை உருவாக்கப் பயன்படுகின்றன.
குதிரைகளின் முக்கியத்துவம்
சில நாட்களுக்குப் பிறகு குதிரைகளின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மா சேகரிக்கப்படுகிறது, அதில் முக்கிய ஆன்டிபாடிகள் உள்ளன. மனிதர்களுக்கு பாம்பு கடிக்கான சிகிச்சைக்கு உதவும் ஆன்டிவெனமாகப் பயன்படுத்த பிளாஸ்மாவைத் தயாரிக்க பல படிநிலை சுத்திகரிப்புக்கு உட்படுகிறது. சிறிய அளவிலான விஷத்தைத் தாங்கி கொள்ளவும் மற்றும் தேவையான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யவும் கூடிய சக்திவாய்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு காரணமாக குதிரைகள் இந்த செயல்முறைக்கு மிகவும் பொருத்தமானவையாக விளங்குகிறது.
பாம்பு கடி அடிக்கடி நிகழும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்த முறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த அறிவியல் மற்றும் இயற்கையின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், எண்ணற்ற உயிர்கள் ஆண்டுதோறும் காப்பாற்றப்படுகின்றன. இந்த உயிர்காக்கும் செயல்பாட்டில் குதிரைகள் வகிக்கும் பங்கு உண்மையிலேயே ஆச்சரியத்திற்குரியது மற்றும் இயற்கையின் வலிமையை இது உணர்த்துகிறது.



Click it and Unblock the Notifications












