Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
பாகிஸ்தான் மக்களால் இன்றும் விரும்பப்படும் 'சர்' கங்கா ராம் யார்? அவர் மக்களுக்கு என்ன செய்தார் தெரியுமா?
இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மக்களின் இதயங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களில் சர் கங்கா ராம். அவர் 1921 ஆம் ஆண்டு லாகூர் மருத்துவமனையைக் கட்டிய ஒரு சிவில் இன்ஜினியர் மற்றும் சமூக சேவகராவார். இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
லாகூரின் இன்றைய முன்னேறிய நிலையை வடிவமைக்க பங்களித்தவர்களில் முக்கியமானவராக சர் கங்கா ராம் இருந்தார். அவரது உதவியால், லாகூர் கட்டிடக்கலையில் உச்சத்தை எட்டியது. பாகிஸ்தானியர்களால் மிகவும் விரும்பப்படும் இந்த இந்தியரைப் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சர் கங்கா ராம்
சர் கங்கா ராம் ஒரு பொறியியலாளராகவும், சிறந்த விவசாயியாகவும் அறியப்பட்டார், அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பல்வேறு பிரபலமான கட்டிடங்களை வடிவமைத்து அவற்றை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணித்தார். அது மட்டுமின்றி, சர் கங்கா ராம் லாகூரில் உள்ள மிகவும் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான மாடல் டவுனையும் கட்டினார். கட்டிடங்களைத் தவிர, அவர் லாகூருக்கு புதிய நீர் ஆலைகளை வழங்கினார், மேலும் பதான்கோட் மற்றும் அமிர்தசரஸ் இடையே ரயில் பாதையை அமைத்தார். இந்த காலகட்டம் 'கங்கா ராம் கட்டிடக்கலையின் சகாப்தம்' என்று அழைக்கப்படுகிறது.
சர் கங்கா ராம் மருத்துவமனை
சர் கங்கா ராம் மக்கள் வாழ்வில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினார். சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராகவும், மக்களுக்கு சேவை செய்யவும் விரும்பினார். 1923 ஆம் ஆண்டு கங்கா ராம் அறக்கட்டளையை உருவாக்கினார், இது பின்னர் நவீன வசதிகளுடன் கூடியதாக மாற்றப்பட்டது. சர் கங்கா ராம் மருத்துவமனை பின்னர் டெல்லியில் கட்டப்பட்டது, இதுவும் லாகூர் மருத்துவமனையைப் போலவே பிரபலமானது.
சர் கங்கா ராமின் பிறப்பு மற்றும் படிப்பு
சர் கங்கா ராம் 1851 ஏப்ரல் 13 ஆம் தேதி பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள மங்தன்வாலா கிராமத்தில் பிறந்தார். அவர் அமிர்தசரஸுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் தனது மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார், பின்னர் உதவி பொறியாளராக நியமிக்கப்பட்டார், மேலும் இம்பீரியல் சட்டமன்றத்தின் கட்டுமானத்தில் உதவ டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவர் ஜூலை 10, 1927 அன்று லண்டனில் இறந்தார்.
சர் கங்கா ராம் விவசாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார், அரசாங்கத்திடமிருந்து சுமார் 50,000 ஏக்கர் தரிசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதை வளமான வயல்களாக மாற்றினார், ஒரு நீர்மின் நிலையத்திலிருந்து ஆயிரம் மைல் நீளமுள்ள பாசன கால்வாய் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீரால் பாசனம் செய்ய வழிவகுத்தார், இந்த மிகப்பெரிய சாதனையை அவர் 3 ஆண்டுகளுக்குள் செய்து முடித்தார். இதன்மூலம் அவர் மில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டினார், மேலும் அதில் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
'சர்' பட்டம் யாரால் கொடுக்கப்பட்டது?
கங்கா ராம்-க்கு சர் பட்டம் வழங்கியதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. லாகூரில் உள்ள சர் கங்கா ராமின் மருத்துவமனை முன் அவரது சிலையை உடைக்க கூட்டம் முயன்றது. இந்த சம்பவத்தின் போது அவர்களில் ஒருவர் காயமடைந்தார். அவர் கீழே விழுந்ததும், கூட்டம் "சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்வோம்" என்று கத்தியது. கங்கா ராமின் சமூகப் பணி மற்றும் நன்கொடையால் ஈர்க்கப்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 'சர்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது.



Click it and Unblock the Notifications











