முகலாயர்களால் இந்த அரசரை மட்டும் கடைசிவரை ஜெயிக்கவே முடியலையாம்... வரலாறு மறந்த இந்த அரசர் யார் தெரியுமா?

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் கிட்டதட்ட 300 ஆண்டுகளாக முகலாயர்களின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. பாதி ராஜ்ஜியங்கள் முகலாயர்களுக்கு அடிபணிந்து சென்றன, மீதமுள்ள ராஜ்ஜியங்கள் முகலாயர்களுடன் போரிட்டு தங்கள் செல்வத்தையும், செல்வாக்கையும் இழந்து கொண்டிருந்தன. இந்த சூழலில் ஒரு சிற்றரசர் முகலாய எதிர்ப்பின் அடையாளமாக விளங்கினார்.

முகலாய சாம்ராஜ்யத்திற்கு எதிரான போராட்டத்தின் சின்னமாக பந்தேல்கண்ட் மகாராஜா சத்ரசல் வரலாற்றில் நிலைபெற்று நிற்கிறார். சண்டேலா ராஜ்புத் பரம்பரையில் பிறந்த அவர், ஒளரங்கசீப்பின் ஆட்சியின் போது முகலாயர்களின் அதிகாரத்தை எதிர்த்தார்.

Which King Was Never Defeated by Mughals in Tamil

மராட்டியர்களுடன் கூட்டணி அமைத்து, அவர் சில பிரதேசங்களை மீட்டு ஒரு சுதந்திர ராஜ்ஜியத்தை நிறுவினார், குறிப்பாக ஓர்ச்சாவைக் கைப்பற்றினார். சத்ராசலின் வீரம், மத சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சார ஆதரவய அவரை இந்திய வரலாற்றில் ஒரு மரியாதைக்குரிய நபராக வைத்திருக்கிறது,

ஆரம்பகால வாழ்க்கை

மகாராஜா சத்ரசல், 1649 இல் பிறந்தார், இந்தியாவின் தற்போதைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பந்தேல்கண்டின் முக்கிய ஆட்சியாளராக இருந்தார். அவர் சண்டேலா ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர் மற்றும் புகழ்பெற்ற ராஜபுத்திர மன்னரான ராஜா பரமர்தி தேவ் என்பவரின் வழித்தோன்றல் ஆவார்.

ஔரங்கசீப்புடன் மோதல்

முகலாயப் பேரரசுக்கு எதிரான சத்ராசலின் எதிர்ப்பு பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது தொடங்கியது. ஆரம்பத்தில் அவரது ராஜ்ஜியம் முகலாயர்களுக்கு அடிமையாக இருந்த போதிலும், சத்ரசல் அவர்களின் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்து தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தினார்.

எதிரிக்கு எதிரி நண்பன்

சத்ராசல் போலவே மராத்தியர்களும் முகலாயர்களை தீவிரமாக எதிர்த்து வந்தனர். 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மராட்டியப் பேரரசை உருவாக்கியவரான சத்ரபதி சிவாஜியுடன் சத்ராசல் ஒரு பயனுள்ளக் கூட்டணியை உருவாக்கினார். இந்த கூட்டணி முகலாய படையெடுப்பை எதிர்க்கவும், பந்தேல்கண்டில் அவரது செல்வாக்கை விரிவுபடுத்தவும் சத்ராசலுக்கு உதவியது.

இராணுவ வலிமை

சத்ராசல் முகலாயர்களுக்கு எதிராக ஏராளமான போர்கள் மற்றும் இராணுவத் தாக்குதல்களை நடத்தி, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை மீட்டெடுத்தார். அவரது இராணுவ வலிமை மற்றும் வலிமை வாய்ந்த கூட்டணிகள் அந்த பிராந்தியத்தில் முகலாய ஆதிக்கத்தை சவால் செய்ய அவருக்கு உதவியது.

ஓர்ச்சாவை கைப்பற்றுதல்

சத்ராசலின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று பந்தேல்கண்டில் உள்ள ஒரு முக்கிய முகலாய கோட்டையான ஓர்ச்சாவை 1681 இல் கைப்பற்றியது. இந்த வெற்றியானது இப்பகுதியில் முகலாய செல்வாக்கை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் சத்ரசாலின் மதிப்பை உயர்த்தியது. இந்த வெற்றிதான் சதராசலின் பெயரை இந்தியா முழுக்க எதிரொலிக்க செய்தது.

சுதந்திர இராஜ்ஜியம்

ஓர்ச்சாவை தனது தலைநகராகக் கொண்டு, சத்ராசல் முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, பந்தேல்கண்டில் ஒரு சுதந்திர இராஜ்ஜியத்தை நிறுவினார். அவர் தனது ராஜ்ஜியத்தை ஞானத்துடனும் நீதியுடனும் ஆட்சி செய்தார், அதன்மூலம் தனது குடிமக்களின் விசுவாசத்தைப் பெற்றார்.

மரபு மற்றும் செல்வாக்கு

முகலாயர்களுக்கு எதிரான சத்ராசலின் எதிர்ப்பும், சுதந்திர ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நிறுவியதும் பந்தேல்கண்ட் வரலாற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் ஒரு துணிச்சலான மற்றும் தொலைநோக்கு ஆட்சியாளர் என்று வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார், அவர் அந்நிய ஒடுக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் நின்றார்.

சத்ராசலின் இறப்பு

மகாராஜா சத்ராசல் 1731 இல் காலமானார், வீரம் மற்றும் போராட்டத்துக்கான பாரம்பரியத்தை விட்டுச் சென்றார். அவரது மகன், மகாராஜா சத்ரபதி ராஜா அனிருத் சிங், அவருக்குப் பிறகு, அவரது தந்தையின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை தொடர்ந்தார்.

Story first published: Tuesday, May 14, 2024, 13:21 [IST]
Desktop Bottom Promotion