Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் எது தெரியுமா? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பு என்றால் அது ரயில்தான். உலகளவில் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவில் தினமும் 13,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன மற்றும் 25 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இதில் பயணிக்கிறார்கள்.
இந்த ரயில்கள் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் வழியே பயணிக்கின்றன, மொத்தம் 68,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை இந்திய ரயில்கள் தினமும் கடக்கிறது. இருப்பினும், இந்தியாவில் ரயில்கள் ஒருபோதும் நிற்காத ஒரு தனித்துவமான ரயில் நிலையம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. இதுதான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமும் கூட. இந்த ரயில் நிலையம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிங்கபாத் ரயில் நிலையம்
இந்தியா-வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள சிங்கபாத் ரயில் நிலையம்தான் இந்தியாவின் கடைசி ரயில் நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையம் இந்திய எல்லையின் முடிவையும், வங்காளதேச எல்லையின் தொடக்கத்தையும் குறிக்கிறது. சிங்கபாத் ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தின் ஹபிப்பூர் பகுதியில் அமைந்துள்ளது.
பிரிட்டிஷ் காலத்தில் நிறுவப்பட்ட சிங்காபாத் ரயில் நிலையம், கொல்கத்தாவிற்கும் டாக்காவிற்கும் இடையிலான ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்பட்டதால் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்கள் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு டாக்காவிற்கு தங்கள் பயணங்களில் இந்த நிலையத்தைக் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்று 1971 இல் வங்காளதேசம் நிறுவப்பட்ட பிறகு, சிங்காபாத் ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. 1978 இல், சிங்கபாத்திலிருந்து சரக்கு ரயில் நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. மேலும், 2011 ஆம் ஆண்டு ஒப்பந்த திருத்தம் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்தியது, இது பொருட்களுக்கான முக்கிய போக்குவரத்துப் புள்ளியாக சிங்காபாத்தின் முக்கியத்துவத்தையும், வர்த்தகத்தில் அதன் தவிர்க்க முடியாத பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.
ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த இந்த ரயில் நிலையம் இப்போது அமைதியாக நிற்கிறது, எந்த பயணிகள் ரயில்களும் இங்கு நிற்பதில்லை. இது இப்போது சரக்கு ரயில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது, அவற்றில் சில பங்களாதேஷுக்கு இயக்கப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் வெளியேறியதிலிருந்து இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் மாறாமல் அப்படியே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில், சிங்காபாத் அதன் சுறுசுறுப்பான கடந்த காலத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. அதன் நடைமேடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன, டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் டார்ஜிலிங் ரயிலின் சத்தங்களால் நிரம்பியிருந்த நிலையத்தை பராமரிக்கும் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இப்போது இங்கு காணப்படுகின்றனர்.
சிங்கபாத் நிலையம் அதன் புவியியல் இருப்பிடத்தாலும், பயணிகள் ரயில்கள் புறப்படும் இடமாகவோ அல்லது சேருமிடமாகவோ செயல்படாததால், இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
